சிவகார்த்திகேயனுக்கு பிறகு நீ தான் வந்து பாத்த. உருகிய பறவை முனியம்மா. வைரலாகும் புகைப்படம்.

0
222475
Paravai-muniyamma-sivakarthikeyan
- Advertisement -

சினிமாவைப் பொறுத்தவரை வசதியான ஆடம்பர வாழ்க்கை எல்லாம் முன்னணி நடிகர் நடிகைகளுக்கு தான். ஆனால், குணச்சித்திர நடிகராக நடித்த பல்வேறு நபர்கள் இறுதியில் மிகவும் மோசமான நிலையில் சென்ற கதைகளை நாம் பல கேட்டுள்ளோம் அந்த வகையில் பிரபல நடிகையும் நாட்டுப்புற பாடகியுமான பரவை முனியம்மா அவருக்கும் அதே கதிதான். விக்ரம் நடிப்பில் வெளியான ‘தூள்’ படத்தில் மதுரை வீரன் தானே என்ற பாடல் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானவர் நடிகை பறவை முனியம்மா. தூள் படத்திற்கு பின்னர் காதல் சடுகுடு, பூ தேவதையைக் கண்டேன் என்று 25 திரைப்படங்களுக்கு மேல் நடிகையாகவும் நடித்துள்ளார்.

-விளம்பரம்-
paravi muniyamma

அதுமட்டுமல்லாமல் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கிராமத்து சமையல் என்ற சமையல் நிகழ்ச்சியையும் நாட்டுப்புற பாடலை பாடிக்கொண்டே கிராமத்து உணவுகளை சமைத்து இவர் தொகுத்து வழங்கிய அந்த நிகழ்ச்சி மிகவும் பிரபலம். நாட்டுப்புறப் பாடல்களுக்கு மிகவும் பெயர் பெற்ற பறவைமுனியம்மா வெளிநாடுகளில் கூட சென்று பல்வேறு கலை நிகழ்ச்சிகளில் நாட்டுப்புற பாடல்களை பாடி இருக்கிறார்

- Advertisement -

இப்படி தள்ளாத வயதிலும் உழைத்த பறவை முனியம்மா இறுதியாக சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான மான் கராத்தே படத்தில் ராயபுரம் பீட்டரு என்ற பாடலில் துவண்டு இருந்தாள் மேலும் அந்தப் பாடலில் ஒரு சில வரிகளையும் பாடி இருந்தார். பரவை முனியம்மா. அந்த படத்திற்கு பின்னர் இவரை வேறு எந்த படத்திலும் காண முடியவில்லை. மான் கராத்தே படத்திற்கு பின்னர் பறவை முனியம்மாவிற்கு பட வாய்ப்புகள் குறைந்ததால் மதுரை பரவையில் தனது மூளைவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளி மகனுடன் தனியாக வசித்தார்.

paravai muniyamma

பறவை முனியம்மாவிற்கு தற்போது 85 வயதாகிறது. ஒரு காலத்தில் அடுத்தடுத்து படங்களில் நடித்து வந்தார். சினிமாவில் பட வாய்ப்புகள் குறைந்த அதே தருணத்தில் பரவை முனியம்மாவுக்கு ஒரு கட்டத்தில் வயது முதிர்வால் உடல்நலகுறைவு உடல் நலமும்மோசமானது. இதனால் வீட்டிலேயே முடங்கினார் பரவை முனியம்மா. இதை அறிந்த மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, ‘பரவை’ முனியம்மாவை நேரில் அழைத்து அவருக்கு ரூ.6 லட்சம் வைப்பு நிதி வழங்கி மாதந்தோறும் ரூ. 6000 ஆயிரம் வட்டியாக வருவாய் கிடைக்க ஏற்பாடு செய்தார். ஆனால், அந்த பணமும் அவரது வைத்திய செலவிற்கே சரியாக போனது. பறவை முனியம்மாவில் நிலையை அறிந்த சிவகார்த்திகேயன் நேரில் சந்தித்து கொஞ்சம் பணமும் கொடுத்து உதவினார்.

-விளம்பரம்-

அவருக்கு பின்னர் எந்த ஒரு நடிகரும் பறவை முனியம்மாவை நேரில் சென்று சந்திக்கவில்லை. இந்த நிலையில் பறவை முனியம்மாவின் நிலையை அறிந்த பட்டதாரி பட நடிகர் அபி சரவணன் நேரில் சென்றுஅவரை விசாரித்ததோடு சிகிச்சைக்கு கொஞ்சம் பண உதவியும் செய்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர் தீபாவளியை நான் பரவை முனியம்மாவுடன் கொண்டாடலாம் என்று தான் நினைத்தேன். ஆனால், அதற்குள்ளாக சுஜித் விஷயத்தை கேள்விப்பட்டு அங்கே சென்று விட்டேன். அதை முடித்துவிட்டு நேற்று காலை தான் அம்மாவின் வீடு தேடி சென்று அவரை நேரில் பார்த்தேன். என்னை பார்த்து அவர் மிகவும் சந்தோஷப்பட்டார். மேலும், 80 படங்களில் நடித்துவிட்டேன் இதுவரை யாரும் வந்து என்ன பாக்கல சிவகார்த்திகேயன் மட்டும்தான் என்ன வந்து பார்த்து 30 ஆயிரம் ரூபா கொடுத்துட்டு போனாரு அவருக்கு அப்புறம் நீ தான் வந்து இருக்கேஎன்று மகிழ்ச்சி பொங்க கூறியதாக அபி சரவணன் கூறியுள்ளார்.

பரவை முனியம்மாவை நேரில் சந்தித்து ஆறுதல் மட்டும் கூறாமல் அவரது நிலையைக் கண்டு மனம் வருந்தி உள்ள அபி சரவணன் தனது கையிலிருந்த எட்டாயிரம் ரூபாய் பணத்தை கொடுத்துவிட்டு, பரவை முனியம்மாவின் சிகிச்சைக்கு ஆகும் செலவு தானே ஏற்றுக் கொண்டதாகவும் கூறியுள்ளா.ர் மேலும், பரவை முனியம்மாவை சந்தித்து போது எடுத்த புகைப்படத்தை அவர் வெளியிட்டுள்ளார். அதில் மொட்டை அடித்துக்கொண்டு மிகவும் சோர்வாக அமர்ந்திருக்கும் பரவை முனியம்மாவை பார்க்கும்போது நமக்கே கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கிறது.

Advertisement