அந்த நடிகர் சொன்னது உண்மை தான், இதனால்தான் ஜெய் பீம் படத்திற்கு தேசிய விருது வழங்கப்படவில்லை – திருமாவளவன்.

0
1732
Thiruma
- Advertisement -

ஜெய் பீம் படத்திற்கு தேசிய விருது கிடைக்காதது குறித்து சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் வேதனையுடன் பதிவிட்டு வந்த நிலையில் தற்போதுஅது குறித்து வி.சி.க தலைவர் தொல். திருமாவளவன் கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். தேசிய திரைப்பட விருதுகள் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் 69 ஆவது வருட தேசிய திரைப்பட விருதுகள் டெல்லியில் 24அன்று மாலை அறிவிக்கப்படுகின்றது. இதில் சிறந்த நடிகர், நடிகை, சிறந்த திரைப்படம் என பல பிரிவுகளில் விருது வாங்கும் வெற்றியாளர்கள் குறித்து பிரஸ்மீட்டில் அறிவித்திருந்தார்கள்.

-விளம்பரம்-

அதில் சிறந்த நடிகருக்கான விருதை புஷ்பா படத்தில் நடித்த தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் வாங்கி இருக்கிறார். சிறந்த நடிகைக்கான விருதை கங்குபாய் கதியாவாடி படத்தில் நடித்த நடிகை அலியா பட்டும், மிமி படத்தில் நடித்த நடிகை கீர்த்தி சனோன் ஆகியோருக்கும் வழங்க இருப்பதாக கூறப்படுகிறது. பின் சிறந்த இசையமைப்பாளராக தேவிஸ்ரீ பிரசாத்திற்கு வழங்கப்படுகிறது. புஷ்பா படத்திற்காக இந்த விருது அவருக்கு வழங்கப்படுகிறது.

- Advertisement -

சிறந்த தமிழ் படத்திற்கான தேசிய விருதை விவசாயி படம் வென்று இருக்கிறது. இந்த படத்தை மணிகண்டன் இயக்கி இருக்கின்றார்.

இவர் ஏற்கனவே காக்கா முட்டை படத்திற்காக தேசிய விருது வாங்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த நிலையில் தமிழ் ரசிகர்கள் பெரிதும் எரிப்பார்க்கப்பட்ட ஜெய் பீம், சார்பட்டா பரம்பரை, கர்ணன் ஆகிய படங்களுக்கு விருது எதுவும் கிடைக்கவில்லை. குறிப்பாக, விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மக்கள் மத்தியில் கொண்டாடப்பட்ட ஜெய் பீம் படத்திற்கு விருது கிடைக்காதது ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

-விளம்பரம்-

தேசிய விருது வாங்கிய பிரபலங்கள்:

அது மட்டும் இல்லாமல் அந்த படத்தில் கதாநாயகியாக நடித்த லிஜோ மோலிக்கு சிறந்த நடிகைக்கான விருது கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. கடந்த ஆண்டு சூறரை போற்று படத்திற்காக சூர்யா தேசிய விருதை வாங்கி இருந்தது போல் இந்த ஆண்டும் வாங்குவார் என்று ரசிகர்கள் கூறியிருந்தார்கள். ஆனால், ஜெய் பீம் படத்திற்கு எந்த ஒரு பிரிவிலும் விருது கிடைக்காதது குறித்து ரசிகர்கள் சோசியல் மீடியாவில் வருத்தத்துடன் கமெண்ட் போட்டு வருகிறார்கள்.

தேசிய விருது இல்லை என்றால் என்ன? எங்கள் இதயத்தில் இந்த படம் எப்போதும் இருக்கும். லிஜோ மோலின் புகைப்படத்தை பதிவிட்டு இவர் தான் சிறந்த நடிகை. எந்த பிரிவிலும் இந்த படம் தேர்வாகவில்லையா? பரவாயில்லை. இந்த படம் சமூகத்தில் ஏற்படுத்திய தாக்கம் அதையெல்லாம் விட பெரியது என்று கூறியிருக்கிறார்கள்.

திருமாவளவன் கருத்து

“நடிகர் பிரகாஷ்ராஜ் அதற்கு அருமையாக பதில் ஒன்று சொல்லியிருந்தார். காந்தியைக் கொன்றவர்கள் அம்பேத்கரின்  எழுதி அரசியலமைப்பு சட்டத்தை சிதைக்கிறவர்கள் எப்படி ஜெய்பீம் போன்ற திரைப்படத்திற்கு விருது வழங்குவார்கள் என்று பேசி இருந்தார். அதையே நானும் வழிபடுகிறேன். கடைசி விவசாயி பற்றிய கேள்வி க்கு நான் இன்று வரைக்கும் கடைசி விவசாய திரைப்படத்தை பார்க்கவில்லை.  ஆனால் ஜெய் பீம் திரைப்படம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.

அந்தப் படம் பொதுமக்களில் ஈர்க்கக்கூடிய தாக்கத்தை ஏற்படுத்திய ஒரு திரைப்படம். திரைப்படத்தில் நடித்தவர்  ஒவ்வொருவரும் சிறப்பாக நடித்திருப்பார்கள். இசை மிகச் சிறப்பாக இருந்தது எல்லாருடைய பாராட்டையும் பெற்ற திரைப்படம். அந்தத் திரைப்படத்திற்கு விருது கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது ஆனால் அது கிடைக்காததால் இந்த விமர்சனங்கள் எழுந்துள்ளது.” என்றும் அவர் கூறியிருந்தார்.

Advertisement