சாகுறதுக்கு முன்னாடி என்னை பயங்கரமா அடிச்சாரு – நானும் மகளும்.ரமேஷின் இரண்டாம் மனைவி

0
859
- Advertisement -

டிக் டாக் செயலியின் மூலம் பிரபலமான டான்ஸர் ரமேஷ். இவர் கடந்த 27 ஆம் தேதி சென்னை புளியந்தோப்பு பகுதியில் உள்ள அடுக்கு மாடி கட்டத்தின் 10வது தளத்தில் இருந்து கீழே விழுந்து தற்கொலை செய்து கொண்டார். இவரின் மறைவு பலருக்கும் அதிர்ச்சிகரமாக இருந்தது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் ரமேஷ் முதல் மனைவி “சித்ரா இவரை இரண்டாவது மனைவிதான் கொலைசெய்து விட்டார் என்று குற்றம் சாடுகிறார். இப்படி பட்ட நிலையில் இது குறித்து ரமேஷின் இரண்டவது மனைவி இன்பவள்ளி இந்த விவகாரம் குறித்து பேட்டி ஓன்று கொடுத்திருகிறார்.

-விளம்பரம்-

எங்களுக்கு பாதுகாப்பாக இருந்தார் :

அவர் கூறுகையில் எங்களுக்கு இடையே 20 வருடங்களுக்கு முன்பே காதல் வந்துவிட்டது. சில வருடங்களுக்கு முன்புதான் என்னுடைய கணவர் மாரடைப்பால் மரணமடைந்தார். எனக்கு மூன்று பெண் பிள்ளைகள் இருக்கின்றனர். அதனால் ரமேஷ் எங்களுடன் இருப்பது எங்களுக்கு பாதுகாப்பாக இருக்கும் என்று நினைத்தோம். இப்போதுதான் நிகழ்ச்சிகளில் டான்ஸ் ஆடி பணம் சம்பாதித்தார். ஆனால் இதற்கு முன்பெல்லாம் நாங்கள் தான் அவரை பார்த்துக்கொண்டோம்.

- Advertisement -

இதனால் தான் முதல் மனைவி தேடினார் :

எனக்கு மாதம் ரூ 12ஆயிரம் சம்பளமாக வரும், கணவரின் உதவித்தொகை ரூ3ஆயிரம் வரும் அதுபோக என்னுடைய பெண்கள் வேலைக்கு செல்கின்றனர். இந்த வருமானத்தை வைத்துதான் அவரை பார்த்துக்கொண்டோமே தவிர அவருடைய வருமானத்தில் நாங்கள் இல்லை. மேலும் ரமேஷுக்கு வருமானம் இல்லாத காரணத்தினால் அவரது முதல் மனைவி தேடவும் மாட்டார். இப்போதுதான் ரமேஷ் டான்ஸ் ஆடி சம்பாதித்ததில் வருமானம் வருகிறது அதனால் தான் அவரை முதல் மனைவி சித்ரா தேடினார்.

அன்று அவருடைய பிறந்தநாள் :

நான் என்னுடைய பெண்களிடமே கேட்டிருக்கிறேன் அங்கிள் ஏதாவது தப்பாக நடந்து கொள்கிறாரா என்று அவர்கள் இல்லை என்று தான் சொன்னார்கள். மேலும் என்னுடைய பிள்ளைகளை அவருடைய பிள்ளைகள் போலத்தான் அவர் நடத்துவார். அவர் எங்களுக்கு பலமாகத்தான் இருந்தார். ஆனால் அவரிடம் இருந்த ஒரு கெட்ட பழக்கம் குடி மட்டும்தான். ஏற்கனவே காசு இல்லை என்று தற்கொலை முயற்சி செய்தார். இப்படிப்பட்ட நிலையில் அவருடைய பிறந்தநாள் வந்தது. காலையில் சர்ச்சுக்கு சென்று வந்தோம், பிறந்தநாள் அன்று குடிக்க வேண்டாம் என்றும் நான் பணம் கொடுக்கவில்லை, அதனால் மது அருந்தும் இடத்தில் கேட்டுக்கொள்ளலாம் என்று சென்ற அவருக்கு யாருமே கொடுக்காத காரணத்தினால் மிகவும் கோபமாகி விட்டார்.

-விளம்பரம்-

ஒருவேளை பணம் கொடுத்திருந்தால் :

வீட்டுக்கு வந்த அவர் என்னை பயங்கரமாக அடித்தார், இதனால் எனக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு பக்கத்துக்கு அறைக்கு மகளுடன் சென்று விட்டேன். பின்னர் எந்த சப்தமும் கேட்காததால் என்னுடைய பெண் சென்று பார்த்தபோது அவர் கீழே விழுந்து ரத்த வெள்ளத்தில் கிடந்தார். நாங்கள் அழுதுகொண்டே போலீசுக்கு தகவல் அனுப்பினோம். பின்னர் தான் போலீஸ் வந்தனர். ஒரு வேளை குடிப்பதற்கு பணம் கொடுத்திருந்தார் அவர் இன்று உயிரோடு இருந்திருப்பார் போல.

ஜெயிலர் படத்திற்கு ரூ 7000 :

ரஜனியின் ஜெயிலர் படத்தில் நடித்ததற்கு 7000ரூபாய் கொடுத்தார்கள். அதுதான் அவரிடம் நாங்கள் வாங்கிய பணம். இன்று வரையில் அவருக்காக 15 லட்சம் செலவு செய்திருக்கோம். இந்த உலகத்தில் அவர் இல்லாமல் என்னால் இருக்க முடியாது, இப்போது என்னுடைய பெண்களுக்கு நான் வேண்டும் என்று தான் இந்த உலகத்தில் இருக்கிறேன் என்று கூறினார் ரமேஷ் இரண்டாவது மனைவி இன்பவள்ளி. டான்சர் ரமேஷ் இறப்பு குறித்து விசாரணை செய்து வரும் போலீசார் ரமேஷை யாரும் கொலை செய்யவில்லை குடிப்பதற்கு பணம் இல்லாத காரணத்தினால் விரக்தியில் தற்கொலை செய்து கொண்டார் என்று கூறியுள்ளனர்.

Advertisement