இப்ப இருக்கும் நடிகர்களுக்கு எம்ஜிஆர்ன்னு நினைப்பு – ஆவேசத்தில் திருப்பூர் சுப்புரமணியன் பேட்டி

0
57
- Advertisement -

குட் பேட் அக்லி படம் நஷ்டம் அடைந்தது தொடர்பாக தயாரிப்பாளர் திருப்பூர் சுப்பிரமணியம் அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் 90 காலகட்டங்களில் தொடங்கி தற்போது வரை தனது உழைப்பினால் உயர்ந்து அல்டிமேட் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் திகழ்ந்து கொண்டு இருப்பவர் அஜித். இவர் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் அஜித் நடிப்பில் வெளியாகி இருந்த படம் குட் பேட் அக்லி.

-விளம்பரம்-

இந்த படத்தை ஆதிக் ரவிசந்திரன் இயக்கி இருக்கிறார். அது மட்டும் இல்லாமல் இவர் அஜித் உடைய தீவிர ரசிகர். குட் பேட் அக்லி படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து இருக்கிறார். இந்தப் படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்து இருக்கிறது. இந்த படத்தில் அஜித்துடன் திரிஷா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரசன்னா உட்பட பல அர்ஜுன் நடித்திருக்கிறார்கள். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் நல்ல வசூலையும் பெற்று இருக்கிறது.

- Advertisement -

குட் பேட் அக்லி படம்:

அதுமட்டும் இல்லாமல் இந்த படம் 280 கோடிக்கு மேல் வசூல் செய்ததாக கூறப்படுகிறது. இதுவரை வெளியான அஜித் படங்களிலே இது தான் அதிக வசூல் சாதனை. இது ஒரு பக்கம் இருக்க, குட் பேட் அக்லி படம் நஷ்டத்தை சந்தித்தாதகவும், தயாரிப்பாளருக்கு லாபத்தை கொடுக்கவில்லை என்று ஒரு சர்ச்சை கிளம்பி இருக்கிறது. இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக திருப்பூர் சுப்பிரமணியன் அளித்த பேட்டியில், தமிழ் சினிமாவை கெடுப்பதே இந்த முன்னணி ஹீரோக்கள் தான்.

திருப்பூர் சுப்பிரமணியன் பேட்டி:

எல்லோருக்குமே மனசுல எம்.ஜி.ஆர்ன்னு நினைப்பு. அவரைப் போலவே எல்லா துறைகளிலும் ஈடுபட்டு படங்களை ஓட விடாமல் செய்கிறார்கள். எம்ஜிஆர் ஹீரோவாக மட்டுமில்லாமல் தயாரிப்பாளர், இயக்குனர் என்று திறம்பட செயல்பட்டிருந்தார். அவர் பல படங்களில் தலையிடும் செய்வார். இருந்தாலுமே படத்தை மேம்படுத்த தான் உதவியாக இருப்பார். அதேபோல் சிவாஜி கணேசன் 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். இருந்தாலுமே எந்த படத்திலும் இயக்குனர்களை தொல்லை செய்ய மாட்டார்.

-விளம்பரம்-

நடிகர்கள் பற்றி சொன்னது:

இப்படி நடிகர்கள் இயக்குனர்கள் சொல்வதை கேட்டு தான் இருந்தார்கள். ஆனால், கடந்த சில ஆண்டுகளாகவே இயக்குனர்களை நடிகர்கள் ஓகே செய்துவிட்டு ஷூட்டிங் ஸ்பாட்டில் ஹீரோக்கள் தான் படங்களை இயக்குகிறார்கள். அதனால் தான் தரமான படங்கள் வராமல் இருக்கிறது. அதோடு டூரிஸ்ட் பேமிலி, குடும்பஸ்தன் போன்ற படங்களெல்லாம் சின்ன படங்கள் இல்லை. அந்த மாதிரியான படங்களில் முன்னணி நடிகர்கள் நடித்தால் தான் மக்கள் ரசனை அதிகரிக்கும். உண்மையான வெற்றியும் கிடைக்கும். இல்லையென்றால் ஒரு நாள் ஓடினாலுமே 100 கோடி, 200 கோடி என்று உருட்ட ஆரம்பித்து விடுகிறார்கள்.

குட் பேட் அக்லி பற்றி சொன்னது:

மேலும், குட் பேட் அக்லி படம் 250 கோடிக்கு மேல் வசூல் செய்ததாக சொல்கிறார்கள். அஜித் நடித்ததிலேயே இந்த படம் தான் அதிக வசூல் செய்த படம். ஆனால், இன்னொரு தரப்பினர் அந்த படம் தயாரிப்பாளருக்கு நஷ்டம் தந்ததாக கூறப்படுகிறது. நஷ்டமா? இல்லையா? என்பதை அந்த படத்தினுடைய தயாரிப்பாளர் தான் சொல்ல வேண்டும். விடாமுயற்சி ஏற்கனவே பயங்கர நஷ்டம் அடைந்தது அனைவரும் அறிந்ததே. முன்னணி நடிகர்கள் இயக்குனர்களுக்கு ஃப்ரீடம் கொடுக்காமல் சூட்டிங் ஸ்பாட்டில் தலையிடுவதால் தான் தரமான படங்கள் வருவதில்லை. இதனால் தான் நிறைய படங்கள் சொதப்புகிறது என்று கூறியிருக்கிறார்.

Advertisement