சாதிய ரீதியிலான படங்கள், வெற்றிமாறன், மாரி செல்வராஜ் இவங்க எல்லாரும் – திருப்பூர் சுப்பிரமணி விமர்சனம்

0
1930
Thiruppor
- Advertisement -

ஜாதி ரீதியாக படம் எடுக்கும் இயக்குனர்கள் குறித்து திரையரங்க உரிமையாளர் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் பேசிருக்கும் கருத்து தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
சமீப காலமாகவே தமிழ் சினிமாவில் ஜாதி ரீதியாக படங்கள் வெளிவருவது அதிகமாகிக் கொண்டே செல்கிறது. அந்த வகையில் சமீபத்தில் வெளியான ராவணக்கோட்டம், கழுவேத்தி மூர்க்கன், காதர் பாஷா என்ற முத்துராமலிங்கம் போன்ற பல படங்கள் ஜாதி ரீதியிலான படங்கள் தான்.

-விளம்பரம்-

இதனால் மக்கள் மத்தியில் பல பிரச்சனைகளும், விளைவுகளும் ஏற்படுகிறது. இந்நிலையில் இது குறித்து திரையரங்கு உரிமையாளர் சங்க தலைவர் திருப்பூர் சுப்ரமணியன் பேட்டி ஒன்று அளித்திருக்கிறார். அதில் அவர், இந்த மாதிரி ஜாதி ரீதியான படங்கள் எல்லாம் தேவை இல்லாத ஒன்று. சமீபத்தில் வந்த இரண்டு மூன்று இயக்குனர்கள் இந்த மாதிரியான படங்களை தான் எடுக்க ஆரம்பிக்கிறார்கள். வெற்றிமாறன், மாரி செல்வராஜ், மோகன் ஜி, முத்தையா போன்ற இயக்குனர்கள் எல்லாம் மாற வேண்டும்.

- Advertisement -

திருப்பூர் சுப்ரமணியன் அளித்த பேட்டி:

சினிமா என்பது ஒரு பொழுதுபோக்கு தான். ஜாதி ரீதியான படங்கள் எடுக்கப்படுவது இதற்கு பிரச்சனையாகவே இருக்கிறது. எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி ஆகியோர் நடித்த காலத்தில் எல்லாம் இந்த மாதிரியான ஜாதி ரீதியான படங்கள் எல்லாம் வரவில்லை. என்ன பொறுத்த வரை சினிமாவில் ஜாதி மதங்களை காட்டத் தேவையே இல்லை. உண்மை கதை என்ன என்பதை சொன்னால் மட்டும் போதும். அது மட்டும் இல்லாமல் உண்மை கதை சொல்கிறோம் என்ற பெயரில் சில படங்களில் ஜாதி மட்டும்தான் காண்பிக்கிறார்கள்.

-விளம்பரம்-

ஜாதி ரீதியான படங்கள்:

இது தேவையில்லாத ஒன்று. அதேசமயம் தேவர் மகன், சின்ன கவுண்டர் போன்ற படங்களில் ஜாதியை உயர்த்தி பிடித்திருந்தாலும் மற்ற ஜாதியை குறை சொல்லி இருக்க மாட்டார்கள். அதை நியாயப்படுத்தியும் பேச விரும்ப மாட்டார்கள். ஆனால், அதுவே தவறு தான். எம்ஜிஆர், சிவாஜி காலகட்டத்தில் ஜாதி ரீதியிலான பட டைட்டில் கூட பார்த்திருக்க முடியாது. காரணம், இன்றைக்கு மக்கள் இந்த மாதிரி கூட்டம் கூட்டமாக இருந்தது இல்லை. நான் சினிமாவுக்கு வந்து 43 வருடங்கள் ஆகிவிட்டது. யாரிடமும் இதுவரை ஜாதி கேட்டது இல்லை. யாரும் என்னிடம் ஜாதியை பற்றி பேசுவதில்லை.

சினிமா குறித்து சொன்னது:

எந்த ஜாதியும் இல்லாத தொழில் தான் சினிமா. நாமெல்லாம் படித்திருக்கிறோம். எதற்காக ஜாதியை பற்றி பேச வேண்டும். அன்றைக்கு இருந்த பழைய குட்டையை கிளரும் வேலையை இன்றைக்கு இருப்பவர்கள் செய்கிறார்கள். ஜாதி உணர்வுகளை தூண்டி சர்ச்சையை ஏற்படுத்துகிறார்கள். இட ஒதுக்கீடு மூலம் இன்றைக்கு தாழ்த்தப்பட்டவர்கள் ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற பல உயரிய பொறுப்புகளில் எல்லாம் இருக்கிறார்கள். அவர்கள் முன்னால் எல்லாம் கைகட்டி தான் இருக்கிறார்கள். ஆனால், ஜாதி ரீதியிலான படம் எடுப்பவர்கள் இல்லாத ஒன்றை புதிதாக உருவாக்க செய்கிறார்கள். எந்த ஜாதி பாகுபாடும் இல்லாத சினிமாவிற்கு வந்து தாழ்த்தப்பட்டவர்களை நாங்கள் உயர்த்துகிறோம் என சொல்கிறார்கள். ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை.

இயக்குனர்களை விளாசிய திருப்பூர் சுப்ரமணியன்:

மனிதர்களில் என்ன தாழ்த்தப்பட்டவர்கள்? மேல் உள்ளவர்கள்? எல்லோருமே மனிதர்கள் தான். அன்றைக்கு இருந்த என் தாத்தா, பாட்டன், முப்பாட்டன் எல்லோரும் படிக்காததால் அவர்களுக்கு ஜாதி பெரிதாக தெரிந்தது. ஆனால், தற்போது படிப்பறிவு அதிகமாகி இருக்கும் நிலையில் ஜாதி பார்க்க கூடாது. அதே சமயம் இதற்கு முந்தைய தலைமுறையில் வெளியான படங்களில் வில்லன்கள் கூட நல்லவர்கள் ஆவார்கள். எம்ஜிஆர் கூட தன் படங்களில் வில்லனை கொல்ல மாட்டார். திருந்தி வாழ தான் வாய்ப்பு தருவார். அப்படி வில்லனை கூட நல்லவனாக காட்ட முயற்சித்த நிலையில் தற்போது கதாநாயகனை கூட வில்லனை காட்டிலும் கொடூரமாக காட்டுகிறார்கள். இது இளைஞர்கள் மத்தியில் மதவெறியை தூண்டாதா? இதை எல்லாம் இவர்கள் மாற்ற வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

Advertisement