டி.எம்.சௌந்தரராஜனின் சகோதரருக்கு இப்படி ஒரு நிலைமையா?

0
3009
tms
- Advertisement -

சினிமா உலகில் இசையில் தனெக்கென ஒரு தனி சாம்ராஜ்யத்தை உருவாக்கியவர் டி.எம் சவுந்தர்ராஜன். இவருக்கு என்று இன்று வரை ஒரு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. இவர் 2003 ஆம் ஆண்டு பத்மசிறீ விருதைப் பெற்றார். சௌந்தரராஜன் அவர்கள் நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக தமிழ்த் திரைப்படங்களில் பாடினார். இவர் திரைப்பட பாடல்கள் மட்டுமின்றி பல பக்தி பாடல்களையும் பாடினார். இவர் சினிமாவிற்கு வருவதற்கு முன்பே 1944-ல் இவரது சகோதரரான டிஎம் கிருஷ்ணமூர்த்தி உடன் கச்சேரிகளில் பங்கேற்று உள்ளார். டிஎம் சவுந்தர்ராஜன்னை விட நான்கு வயது இளையவர் டி.எம் கிருஷ்ண மூர்த்தி. இவர் மிருதங்க வித்துவான் ஆவார்.

-விளம்பரம்-
கடந்த 2017 ஆம் ஆண்டு  சென்னை அபூர்வ சங்கீதா குரூப் ஆஃப் ஹோட்டல்ஸ் உரிமையாளர் ராஜா ‘யுவர்ஸ் பப்ளி சிட்டி’ முருகன் மூலமாக டி.எம்.கிருஷ்ணமூர்த்திக்கு 10 ரூபாய் அளித்த போது

டி.எம்.சவுந்தர்ராஜனுக்கு இசை ரீதியாக உதவிகள் செய்தவரே டி.எம் கிருஷ்ண மூர்த்தி தான். மேலும், இவரது இசை சேவையை பாராட்டி கடந்த 2003 ஆம் ஆண்டு தமிழக அரசு சார்பில் கலைமாமணி விருது வழங்கப்பட்டது. தற்போது டி.எம்.கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கு 94 வயது ஆகிறது. இவர் 91 வயதான தனது மனைவியுடன் ஒத்தக்கடை அருகே உள்ள நரசிங்கம் பகுதியில் வசித்து வருகிறார். கலைமாமணி விருது பெற்றதற்காக தமிழக அரசு சார்பில் மாதந்தோறும் இவர்களுக்கு 2500 ரூபாய் வழங்கப்பட்டது.

- Advertisement -

இவர்கள் இருவரும் இதை நம்பியே குடும்பம் நடத்தி வருகின்றனர். அதற்கான ஓய்வூதிய புதுப்பிப்பு இந்த மாதத்துடன் நிறைவு பெறுவதால் அதை புதுப்பிப்பதற்காக ஒத்தக்கடை பகுதியிலிருந்து அரசு பேருந்தில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தார்கள். நிற்க முடியாத அளவிற்கு வயது முதிர்ந்த நிலையில் டி.எம் கிருஷ்ண மூர்த்தி அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக சாலையில் மயங்கி விழுந்தார். அவரை தூக்க ஆளின்றி நீண்ட நேரம் கூச்சலிட்டுக் கொண்டு இருந்தார்.

 madurai;Soundararajan's Brother

பின் அவரை அங்கிருந்தவர்கள் தூக்கி விசாரித்தனர். பிறகு அவர் அங்கு வந்த காரணத்தைக் கூறினார். ஓய்வுதியம் புதுப்பிக்கும் பணி அடுத்த மாதம் நடைபெறுவதால் சென்று வருமாறு மாவட்ட கருவூல அதிகாரிகள் அவரிடம் தெரிவித்தனர். டி.எம் கிருஷ்ண மூர்த்தியை அங்கு இருந்தவர்கள் ஆட்டோ மூலம் அவரை வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். வயது முதிர்ந்த காலத்தில் ஆதரவின்றி பிரபலங்கள் தவிர்த்து வருவது வேதனை அளிப்பதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.

-விளம்பரம்-
Advertisement