அதிமுக எங்களுக்கு துரோகம் செய்துவிட்டது – அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக கருணாஸ் அறிவிப்பு.

0
968
karunas
- Advertisement -

வருகிற சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்து கருணாஸின் முக்குலத்தோர் புலிப்படை அமைப்பு விலகுவதாக அக்கட்சியின் செயலாளர் கருணாஸ் அறிவித்துள்ளார். வருகிற சட்ட மன்ற தேர்தலில் வெற்றி பெற பல்வேறு கட்சிகளும் பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது. அதிலும் ஆளும் கட்சியான அதிமுக ஏற்கனவே பா ஜ க மற்றும் பா ம க கட்சியுடன் தொகுதி பங்கீடு குறித்து அறிவித்த நிலையில் கருணாஸின் முக்குலத்தோர் புலிப்படை கட்சியுடன் கூட்டணி அமையுமா இல்லையா என்ற கேள்வி நிலவி வந்தது.

-விளம்பரம்-

இப்படி ஒரு நிலையில் அதிமுக கூட்டணியில் இருந்து முக்குலத்தோர் புலிப்படை கட்சி விலகுவதாக அக்கட்சி தலைவர் கருணாஸ் அறிவித்துளார். அதிமுக கூட்டணியில் இருந்து விலகியது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கருணாஸ், நாங்கள் குற்ற பரம்பரை அல்ல கொற்ற பரம்பரை, இந்த கொற்ற பரம்பரையாக இருந்த மக்களுக்கு அடிப்படை இடஒதுக்கீடு கேட்பதற்கு நீண்ட காலமாக போராடி கொண்டியிருக்கிறோம். ஆனால் எங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை, மறுக்கப்படுகிறது .

- Advertisement -

அதற்கு மாறாக எங்கள் சமூகத்தை புறம் தள்ளுவதற்கு முதல்வர் பழனிசாமி தலைமையிலான அரசும், என் சமூகம் சார்ந்த 8 அமைச்சர்களும் ஒன்றாக இணைந்து இந்த சமூகத்திற்கு மிகப்பெரிய துரோகத்தை செய்துள்ளார்கள். சமூக நீதியில் முதல்வர் பழனிசாமி எண்ணற்ற சமுதாய மக்களை புறம் தள்ளி ஒருசில சமுதாயத்தை தனது அரசியல் ஆதாயத்திற்காக இந்த அவசரகாலத்தில், ஆளும் அரசை விமர்சனம் செய்த பாமகவுக்கு வழங்கப்பட்டு, எங்களை புறம் தள்ளியுள்ளது. . வரும் தேர்தலில் எங்கள் சமூகங்கள் தீர்மானிக்க கூடிய 84 தொகுதிகளில் களமிறங்கி எங்களுக்கு துரோகம் விதைத்த அவர்களை எதிர்த்து பிரச்சாரம் செய்ய போகிறேன்.

இளைஞர்களை திரட்டி அதிமுகவுக்கு எதிராக பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறோம். முக்குலத்தோர் சமுதாயத்துக்கு அதிமுக செய்த துரோகத்தை முன்னிறுத்தி பிரச்சாரம் செய்வோம். அதிமுகவை குறிப்பிட்டு இரு சமூகத்துக்கு சொந்தமான அமைப்பாக எடப்பாடி மாறிவிட்டார் என்று கூறியுள்ளார். கடந்த சில வாரங்களுக்கு முன்னர் அதிமுகவுடன் கூட்டணி பற்றி பேசிய கருணாஸ், தமிழகம் முழுவதும் முக்குலத்தோர் சமுதாயத்தினர் பரவலாக வசிப்பதால் 25 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். அதிமுக முக்குலத்தோர் கூட்டணி தொடர வேண்டும் என்று விருபுகிறேன் என்று கூறி இருந்தார்.

-விளம்பரம்-
Advertisement