பல்வேறு சர்ச்சைக்கு மத்தியில் அஜித்துடன் எடுத்த செல்பி புகைப்படத்தை வெளியிட்ட ரசிகர். (அஜித்தின் லுக்க மட்டும் பாருங்க)

0
98290
ajith
- Advertisement -

வாக்கு செலுத்த வந்த இடத்தில் செல்பி எடுத்த ரசிகர்களின் செல்போனை அஜித் பிடுங்கிய வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. இப்படி ஒரு நிலையில் அஜித்துக்கு பின்னால் இருந்து ரசிகர் ஒருவர் எடுத்த செல்பி புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. தமிழகத்தில் இன்று (ஏப்ரல் 6) சட்டமன்ற தேர்தல் படு மும்மரமாக நடைபெற்று வருகிறது. கொரோனா பிரச்சனை காரணமாக வாக்குச்சாவடிகளில் சமூக இடைவெளி, முகக்கவசம், சாணிடைஸர் என்று அணைத்து வகை பாதுகாப்புகளும் கடைக்கிப்பிடிக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டின் இரண்டு முக்கிய தலைவர்கள் ஜெ. ஜெயலலிதா, மு. கருணாநிதி ஆகியோரின் இறப்பிற்குப் பின்னர் தமிழ்நாட்டில் நடைபெறும் முதலாவது சட்டமன்றத் தேர்தல் இதுவாகும்.

-விளம்பரம்-

இந்த தேர்தலில் யார் வெற்றிபெறுவார்கள் என்ற மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில் இன்று (ஏப்ரல் 6) தமிழகத்தில் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இன்று காலை 7 மணிக்கெல்லாம் வாக்குப்பதிவு மாலை 7 மணிக்கு நிறைவு பெரும். வாக்குப்பதிவு துவங்கியதில் இருந்தே மக்கள் ஆர்வத்துடன் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். அதே போல ரஜினி சூர்யா கார்த்தி உள்ளிட்ட பலர் காலையிலேயே வரிசையில் நின்று வாக்களித்தனர்.

இதையும் பாருங்க : வாக்கு செலுத்த விஜய் 500 மீட்டர் சைக்கிளில் சென்றது ஏன் ? விஜய்யின் PRO விளக்கம். இதான் மேட்டரா (அதுக்குள்ள என்னென்னவோ நெனச்சிடீங்களே)

- Advertisement -

அதிலும் நடிகர் விஜய் 500 மீட்டர் சைக்கிளில் பயணம் செய்து வாக்கு சாவடிக்கு சென்ற வீடியோ சமூக வலைதளத்தில் பெரும் பேசும் பொருளானது. சென்னை திருவான்மியூரில் உள்ள வாக்குச்சாவடியில் நடிகர் அஜித்குமாரும் அவரது மனைவி ஷாலினியும் வாக்கு பதிவு துவங்கும் முன்னரே வந்து காத்துக்கொண்டு இருந்தனர். அஜித்தை பார்த்த ரசிகர்கள் தல தல என்று கோஷம் போட்டு அவரை சுற்றி நின்று கொண்டனர். கொரோனா அச்சம் இருக்கும் தன்னை ரசிகர்கள் சூழ்ந்து கொண்டதால் கொஞ்சம் டென்சன் ஆனார் தல.அப்போது ரசிகர் ஒருவர், தனது செல்போனில் செல்பி எடுக்க தனது முகத்திற்கு முன்னாள் செல்போனை நீட்ட கடுப்பான அஜித், அந்த நபரின் செல்போனை புடுங்கி, தனது பாக்கெட்டுக்குள் போட்டுக்கொண்டார்.

பின்னர் அங்கு இருந்தவர்கள் அனைவரையும் போலீசார் வெளியில் அனுப்பினார்கள். அஜித்தும் அங்கு இருந்தவர்களை வெளியில் போக சொல்லி கையசைத்தார்.வாக்கு சாவடிக்கு செல் போன் எடுத்து வரக்கூடாது என்று அறிவிக்கப்பட்ட நிலையில் அந்த ரசிகர் செல் போன் எடுத்து வந்ததோடு முகக்கவசம் அணியாமல் அருகில் வந்து தன்னுடன் செல்பி எடுத்ததால் தான் அஜித் அந்த நபரின் செல் போனை பிடிங்கியதகவும், பின்னர் சிறிது நேரம் கழித்து அந்த நபரிடம் செல்போனை கொடுத்துவிட்டு மாஸ்க் போடுங்க என்று அறிவுறுத்தியுள்ளார் அஜித். இப்படி ஒரு நிலையில் அஜித்துக்கு பின்னால் இருந்து ரசிகர் ஒருவர் எடுத்த செல்பி புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

-விளம்பரம்-
Advertisement