சிம்ரன், சசிகுமார் இப்படிப்பட்டவர்கள் தான் – டூரிஸ்ட் ஃபேமிலி ‘மங்கையர்க்கரசி’ ஶ்ரீஜா ரவி எஸ்க்குளுசிவ்

0
64
- Advertisement -

டூரிஸ்ட் பேமிலி படத்தில் நடித்த அனுபவம் தொடர்பாக நடிகை ஶ்ரீஜா ரவி அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகர்களில் ஒருவராக சசிகுமார் திகழ்ந்து கொண்டிருக்கிறார். தற்போது சசிகுமார் அவர்கள் டூரிஸ்ட் பேமிலி என்ற படத்தில் நடித்து இருக்கிறார். இந்த படத்தில் சிம்ரன், யோகி பாபு, ரமேஷ் திலக், இளங்கோ குமரவேல், மீதுன் ஜெய்சங்கர், கமலேஷ் உட்பட பலர் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்தை அறிமுக இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் இயக்கியிருக்கிறார்.

-விளம்பரம்-

இலங்கை தமிழர் வாழ்க்கையை மையமாக வைத்து வெளியாகியிருக்கும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. டூரிஸ்ட் பேமிலி படத்தை பார்த்து பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் பாராட்டுகிறார்கள். அதோடு இந்த படம் நல்ல வசூல் செய்து வருவதாக கூறப்படுகிறது. மேலும், இந்த படத்தில் சசிகுமார்- சிம்ரன் ஜோடியின் பக்கத்து வீட்டில் வசிக்கும் மங்கையர்கரசி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்தவர் ஸ்ரீஜா ரவி. இவர் இதற்கு முன்பு நிறைய படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்திருக்கிறார்.

- Advertisement -

டூரிஸ்ட் பேமிலி:

அது மட்டும் இல்லாமல் இவர் ஒரு டப்பிங் கலைஞரும் ஆவார். இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் ஸ்ரீஜா ரவி, நான் 1973 இல் குழந்தை நட்சத்திரமாக மலையாள மொழியில் அறிமுகமானேன். 10 படங்கள் வரை நடித்தேன். அதற்குப் பிறகு டப்பிங் கொடுக்க ஆரம்பித்தேன். பின் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில் நடிகை தபு கூட வேலை பார்க்கிற ஒரு கர்ப்பிணி பெண் கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதற்கு பிறகு டப்பிங், நடிப்பு ஒரு பக்கம் என்று ட்ராவல் பண்ண தொடங்கினேன்.

ஸ்ரீஜா ரவி பேட்டி:

நிறைய முன்னணி நடிகர்களின் படங்களில் பணியாற்றி இருக்கிறேன். அந்த வகையில் வீர தீர சூரனில் ஹீரோயின் அம்மாவாக நான்தான் நடித்தேன். அப்போது விக்ரம் சார், என்னை அப்படியே கட்டிக்கொண்டு ஹவ் ஆர் யூ மேம் என்று விசாரித்தார். அந்த நிமிடம் ரொம்ப சந்தோஷமாக பெருமையாக இருந்தது. டூரிஸ்ட் ஃபேமிலி படத்தில் நடிக்க கேட்டபோது உடனே ஒத்துக்கொண்டேன். காரணம், மில்லியன் டாலர் ஸ்டுடியோவோட லவ்வர், குட் நைட் படங்கள் எல்லாம் எனக்கு ரொம்ப பிடிக்கும். அதற்கு பிறகு சசிகுமார் சாருக்கு அம்மாவாக எவிடன்ஸ் படத்தில் நடிக்கிறேன்.

-விளம்பரம்-

சிம்ரன் பற்றி சொன்னது:

சிம்ரனுக்கு நேருக்கு நேர், கனவே கலையாதே என்று இரண்டு படங்களுக்கும் நான்தான் டப்பிங் பேசி இருந்தேன். இருந்தாலும் அவர்களோடு சேர்ந்து நடிப்பது இதுதான் முதல் முறை. அவங்க டாப் ஹீரோயினியா இருந்தபோது நாமெல்லாம் அப்படி கொண்டாடி இருக்கிறோம். அவர்களுடன் சேர்ந்து நடிக்கும் போது எப்படி பழகுவார்கள் என்ற யோசனை எல்லாம் இருந்தது. பின் சூட்டிங் ஸ்பாட்டில் அவர்களை பார்த்ததுமே அவர்களிடம் போய் என்னை அறிமுகப்படுத்தினேன். டப்பிங் பேசியதையும் சொன்னேன். சிம்ரன் ரொம்ப சந்தோஷப்பட்டார்கள்.

சசிகுமார் பற்றி சொன்னது:

செல்பி எடுத்துக் கொண்டு என் நம்பரையும் வாங்கிக் கொண்டார். மெசேஜில் இப்ப வரைக்கும் நாங்கள் தொடர்பில் தான் இருக்கிறோம். சசிகுமார், ஹீரோ மாதிரியே நடந்து கொள்ள மாட்டார். இயல்பான மாஸ்க் போடாத மனிதர். இந்த படத்தோட அவுட்லைன் இயக்குனர் சொல்லும்போதே என்னுடைய கதாபாத்திரம் இவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நான் நினைத்து கூட பார்க்கவில்லை. அந்த யூனிட் என்னை ஒரு ஆர்டிஸ்ட் மாதிரி பார்க்கவில்லை. அம்மா மாதிரி தான் மரியாதையாக அன்பாக நடத்தினார்கள். இந்த வயதில் எனக்கு இந்த மாதிரி கதாபாத்திரம் கொடுத்த நன்றி சொல்லணும் என்று பல விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்.

Advertisement