டூரிஸ்ட் பேமிலி படத்தின் விழாவில் மேடையிலேயே இயக்குனர் தன்னுடைய காதலை வெளிப்படுத்தி இருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகர்களில் ஒருவராக சசிகுமார் திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவர் திரைப்பட நடிகர் மட்டுமில்லாமல் இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டவர். இவர் இயக்கத்தில் 2008 ஆம் ஆண்டு வெளிவந்த ‘சுப்பிரமணியபுரம்’ படம் மிகப்பெரிய அளவில் மக்கள் மத்தியில் பேசப்பட்டது.
அதனைத் தொடர்ந்து இவர் சமுத்திரக்கனியின் நடிப்பில் வெளிவந்த ‘ஈசன்’ என்ற படத்தை எடுத்திருந்தார்.
அதற்குப் பிறகு இவர் நடிகராக மட்டும் தான் நடித்து வந்தார். இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்று தந்திருக்கின்றது. அந்த வகையில் கடந்த ஆண்டு சசி குமார் நடிப்பில் வெளியாகி இருந்த ‘நந்தன்’ படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
சசிகுமார் குறித்த தகவல்:
பட்டியல் இன மக்கள் ஊராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடும் போது என்னவெல்லாம் பிரச்சனைகளை எதிர்கொள்கிறார்கள் என்பதை மையமாக வைத்து இயக்குனர் கொடுத்திருந்தார். இதைத்தொடர்ந்து தற்போது சசிகுமார் அவர்கள் டூரிஸ்ட் பேமிலி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை அறிமுக இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் என்பவர் தான் இயக்கியிருக்கிறார். ஜான் ரோல்டன் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.
டூரிஸ்ட் பேமிலி படம்:
இந்த படத்தில் சிம்ரன், யோகி பாபு, மிதுன் ஜெய்சங்கர், கமலேஷ், எம்.எஸ் பாஸ்கர், ரமேஷ் திலக், பகவதி பெருமாள், இளங்கோ, குமரவேல், ஸ்ரீஜா ரவி உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். மே 1ஆம் தேதி இந்த படம் திரைக்கு வர இருக்கிறது. இந்த படம் முழுக்க முழுக்க ஈழத் தமிழர்களுடைய கஷ்டத்தை பேசும் படமாக இருக்கிறது. இந்நிலையில் இந்த படத்தினுடைய ட்ரெய்லர் மற்றும் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்று இருந்தது.
Wow !! So Cute & Heartwarming clip 🫶♥️#TouristFamily Director Abishan PROPOSES his girlfriend & asks to marriage at the pre release event💫pic.twitter.com/1UEW9fMlWF
— AmuthaBharathi (@CinemaWithAB) April 27, 2025
விழாவில் இயக்குனர்:
இந்த விழாவில் பேசிய படத்தின் இயக்குனர் அபிஷன் ஜீவிந்த், படம் குறித்து பல விஷயங்களை பகிர்ந்து கடைசியில் தன்னுடைய காதலைப் பற்றி வெளிப்படையாக பேசியிருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் அவர், நான் ஒருவருக்கு இந்த இடத்தில் நன்றி சொல்ல விரும்புகிறேன். அவர் பெயர் அகிலா இளங்கோவன். அவளை எனக்கு ஆறாவது படிக்கும் போதிலிருந்து தெரியும். பத்தாவது படிக்கும் போது நாங்கள் இருவரும் நெருக்கமாக பழக ஆரம்பித்தோம்.
காதலை சொன்ன இயக்குனர்:
இந்த இடத்தில் நான் உன்னிடம் என்ன சொல்வது என்று தெரியவில்லை. ஆனால், ஒன்றை மட்டும் கேட்க விரும்புகிறேன். வருகிற அக்டோபர் மாதம் 31ஆம் தேதி நீ என்னை திருமணம் செய்து கொள்வாயா? ஐ லவ் யூ. நான் இப்போது இப்படிப்பட்ட ஒரு மனிதனாக இருப்பதற்கு என்னுடைய அம்மாவிற்கு எவ்வளவு முக்கிய பங்கு இருக்கிறதோ அதே அளவுக்கு உன்னுடைய பங்கும் இருக்கிறது அகிலா. நிறைய நாள் நான் ரொம்ப பலவீனமாக இருக்கும்போது நீ தான் எனக்கு துணையாக இருந்தாய் என்று ரொம்ப எமோஷனலாக பேசியிருக்கிறார். இவர் பேசுவதை கேட்டு அகிலா கண்கலங்கி அழுது இருக்கிறார்.