காதலுக்கு கண்ணில்லை என்று கூறுவார்கள் ,மேலும் காதலுக்காக நாக்கு,கிட்னி,இதயம் என்று தியாகம் செய்த கதைகளை நாம் படத்தில் தான் கண்டிருக்கிரோம். ஆனால், காதலுக்காக தனது பாலினத்தை மாற்றி ஒரு புதிய சாதனையை படைத்துள்ளனர் கேரளாவை சேர்ந்த ஒரு காதால் ஜோடிகள்.
25 வயதான கேரளாவை சேர்ந்த வாலிபர் சூர்யா, இவர் கேரள மொழிகளில் பல மேடை நாடங்களில் நடித்து வந்திருக்கிறார் . இவர் அதே மாநிலத்தை சேர்ந்த 19 வயதுடைய இன்கேசான் என்ற பெண்ணை நீண்ட வருடங்களாக காதலித்து வந்துள்ளார்.
இருவரும் மிக தீவிரமாக காதலித்து வந்த இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்துள்ளனர். ஆனால் இவர்களது திருமணம் இதுவரை யாரும் செய்திடாத விதத்தில் மிகவும் வித்யாசமாக இருக்க வேண்டும் என்று எண்ணிய இவர்கள் என்ன செய்வது என்று யோசித்துள்ளனர்.
பின்னர் இவர்கள் இருவரும் தங்களது இருவரின் பாலினத்தையும் மாற்றிக்கொள்ளலாம் என்று முடிவு செய்து, சூர்யா கடந்த 2014 ஆம் ஆண்டு சிகிச்சை மூலம் பெண்ணாக தன்னை மாற்றிக்கொண்டார். அவரது காதலி இசான் 2015 ஆம் ஆண்டு சிகிச்சை செய்து ஆணாக மாறியுள்ளார். இதையடுத்து இவர்கள் இருவரும் இன்று கேரளாவில் கோலாகலமாக திருமணம் செய்துகொண்டுள்ளனர்.