தன் மகள் குறித்து தொடர்ந்து அவதூறாக பேசி வரும் நபர் – திரிஷாவின் அம்மா கொடுத்த பதிலடி.

0
1283
Trisha
- Advertisement -

தென்னிந்திய சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் திரிஷா. இவர் ஆரம்பத்தில் படங்களில் துணை கதாபாத்திரங்களில் தான் நடித்து வந்தார். அதன் பின் இவர் படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும், இவர் கமல், ரஜினி, விஜய், அஜித், சூர்யா, விக்ரம் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் படத்தில் நடித்து இருக்கிறார். அதோடு இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.

-விளம்பரம்-

இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியாகி இருந்த ராங்கி என்ற திரைப்படத்தில் திரிஷா நடித்திருந்தார். இந்த படமும் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றிருக்கிறது.தற்போது திரிஷா அவர்கள் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் சஞ்சய் தத், கௌதம் மேனன், அர்ஜூன் மற்றும் மன்சூர் அலிகான் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

- Advertisement -

AL சூர்யா :

இந்த நிலையில் திரிஷாவின் திருமணம் குறித்த சர்ச்சை சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது, ஏ எல் சூர்யா என்பவர் தற்போது பேட்டி ஒன்று அளித்து இருக்கிறார். அதில் அவர், திரிஷாவை லியோ படத்திலிருந்து வெளியேற்றுங்கள். காரணம், நான் அவரை காதலித்து வருகிறேன். எனக்கும் திரிஷாவுக்கும் நவம்பர் மாதம் திருமணம் நடைபெறுகிறது. விஜய்க்கு என் மீது பொறாமை இருக்கிறது. நானும் திரிஷா மீது கடும் கோபத்தில் இருக்கிறேன்.

திரிஷா திருமணம் குறித்து சொன்னது:

நாங்கள் அடிக்கடி தொலைபேசியில் பேசிக் கொள்வோம். இப்போது எங்களுக்குள் சின்ன சண்டை என்பதால் நாங்கள் பேசிக் கொள்வதில்லை. ஆகவே திரிஷாவை லியோ படத்தின் படபிடிப்பிலிருந்து வெளியேற்றுங்கள் என்று கூறி இருக்கிறார். இப்படி ஏ எல் சூர்யா அளித்திருக்கும் பேட்டி சோசியல் மீடியாவில் சர்ச்சை ஏற்படுத்தி இருக்கிறது. ஆனால், இது குறித்து திரிஷா தரப்பிலிருந்து எந்த ஒரு பதிலும் வெளியாகவில்லை. ஏஎல் சூர்யா என்பவர் இசையமைப்பாளர், இயக்குனர் என்று அவரே சொல்லிக் கொண்டிருக்கிறார்.

-விளம்பரம்-

கடந்த 2006 ஆம் ஆண்டு ஒளிப்பதிவாளர் பிரபு என்பவரிடம் நடிகை பத்மப்ரியாவை வைத்து பாரதியார் பாடல்களை ஒளிப்பதிவு செய்தும் தரும்படி கேட்டு பத்மப்ரியாவை தொலைபேசியில் தொந்தரவு செய்து இருக்கிறார். இது தொடர்பாக பத்மபிரியா ஏஎல் சூர்யாவின் மீது புகார் அளித்திருக்கிறார். இப்படி ஒரு நிலையில் திரிஷாவை திருமணம் செய்து கொள்ளப் போகிறேன் என்று ஏஎல் சூர்யா அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் சிலசலப்பு ஏற்படுத்தி இருக்கிறது.

திரிஷாவின் அம்மா விளக்கம் :

சூர்யா இப்படி தொடர்ந்து திரிஷா குறித்து அவதூறாக பேசிக்கொண்டிருக்கையில் த்ரிஷா தரப்பிலிருந்து எந்த எதிர்ப்போ, கண்டனமோ வரவில்லை. இந்த ஒரு நிலையில் சூர்யா பேசிவருவது தொடர்பாக த்ரிஷாவின் தாயார், “அவர் அப்படி பேசுவதை கண்டுகொள்ளாமல் சென்றுவிட வேண்டும். உண்மை என்னவென்று மக்களுக்கு தெரியும். இதில் நாம் தலையிட்டால் அந்த விஷயம் மேற்கொண்டு பரபரப்பாகும்” என கூறியிருக்கிறார். இதனை பத்திரிகையாளர் அந்தணன் பகிர்ந்திருக்கிறார்.

Advertisement