`பொன்னியின் செல்வன்’ சக்சஸ் மீட்டில் குந்தவை ஆப்சென்ட் – அவரின் நிலை கண்டு ரசிகர்கள் அப்செட்.

0
339
trisha
- Advertisement -

பொன்னியின் செல்வன் சக்சஸ் மீட்டிங்கில் திரிஷா கலந்து கொள்ளாததற்கான காரணம் குறித்து திரிஷாவின் அம்மா போட்டு இருக்கும் பதிவு சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் திரிஷா. இவர் ஆரம்பத்தில் படங்களில் துணை கதாபாத்திரங்களில் தான் நடித்து இருந்தார். பின் இவர் படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும், இவர் ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா, விக்ரம் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் படத்தில் நடித்து இருக்கிறார்.

-விளம்பரம்-

இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார். அதிலும், திரிஷா அவர்கள் சமீப காலமாகவே கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை மட்டும் தேர்வு செய்து நடித்து வருகிறார். ஆனால், நயன்தாரா அளவிற்கு லீட் கதாபாத்திரங்கள் இவருக்கு கைகொடுக்கவில்லை. இருப்பினும், நயன்தாராவிற்கு இணையாக தமிழ் திரையுலகில் இன்றும் முன்னணி நடிகை என்ற அந்தஸ்துடன் இருந்து வருகிறார் திரிஷா.

- Advertisement -

திரிஷா திரைப்பயணம்:

தற்போது இவர் பல படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் இவர் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து இருக்கிறார். பல ஆண்டு கனவான சிறப்புமிக்க காவியங்களில் ஒன்றான பொன்னியின் செல்வன் கதையை திரைப்படமாக இயக்குநர் மணிரத்னம் இயக்கி இருக்கிறார். இந்த கதையை பல பேர் முயற்சி செய்து இருந்தார்கள். ஆனால், அதை மணிரத்னம் தான் சாதித்து காட்டி இருக்கிறார். அதுமட்டும் இல்லாமல் மணிரத்னத்தின் திரைவாழ்க்கையில் இதுவரை இல்லாத அளவுக்கு மிக பிரம்மாண்டமாக இந்த திரைப்படம் வெளியாகி இருக்கிறது.

பொன்னியின் செல்வன் படம்:

இந்த படத்தில் விக்ரம், பிரகாஷ் ராஜ், பார்த்திபன், கார்த்தி, ரவி, விக்ரம் பிரபு, ஜெயராம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ரகுமான், கிஷோர், அஸ்வின், ராய், ரவி, ரியாஸ்கான், லால், மோகன் ராமன், பாலாஜி சக்திவேல் என சினிமா உலகில் உள்ள பல முன்னணி நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்து இருக்கிறார். மேலும், இந்த படத்தில் குந்தவை என்ற கதாபாத்திரத்தின் மூலம் இளவரசியாக எல்லோரும் மனதிலும் இடம் பிடித்திருக்கிறார் திரிஷா.

-விளம்பரம்-

படத்தின் சக்ஸஸ் மீட்:

இந்த படம் மிகவும் பிரம்மாண்டமாக வெளியாகி இருக்கிறது. மேலும், தமிழ் ரசிகர்கள் மட்டும் இல்லாமல் உலக சினிமா ரசிகர்களும் பொன்னியின் செல்வன் படத்தை கொண்டாடி இருக்கிறார்கள். மேலும், பொன்னியின் செல்வன் படத்தின் சக்சஸ் மீட்டிங் நடைபெற்றது. அதில் பலரும் பங்கேற்றிருந்தார்கள். ஆனால், குந்தவை திரிஷா வரவில்லை. இதற்கு காரணம் இவர் வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்றதாக கூறப்பட்டது. இந்த நிலையில் திரிஷா சக்சஸ் மீட்க்கு வராததற்கான காரணம் குறித்து அவருடைய அம்மா உமா கிருஷ்ணன் போஸ்ட் ஒன்று போட்டு இருக்கிறார். அதில் அவர், வெளிநாட்டு விடுமுறையை கொண்டாடிவிட்டு திரிசா சென்னை திரும்பி இருக்கிறார்.

சக்சஸ் மீட்க்கு வராததற்கான காரணம்:

திரிஷா வீட்டில் மாடி படிக்கட்டு ஏறும் போது தான் கால் லேசாக பிரண்டு இருக்கிறது. அதுவும் முதல் படி ஏறும் போது இப்படி ஆனதால் காயம் சின்னதாக இருக்கிறது. கீழே விழுந்த உடனேயே அவர்களுடைய காலில் வீக்கம் வந்திருக்கு. இதனால் உடனடியாக திரிஷா மருத்துவமனைக்கு சென்று இருக்கிறார். மருத்துவர் பெரிய அளவில் பாதிப்பு எதுவும் இல்லை. லேசான தசை பிடிப்பு என்று சொல்லிவிட்டார். கொஞ்சம் ஓய்வெடுக்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறார். இப்போது திரிஷா நன்றாக தான் இருக்கிறார். ஓய்வுவிற்கு பிறகு படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்று திரிசாவின் தாய் உமா கிருஷ்ணன் கூறி இருக்கிறார். தற்போது திரிஷா அவர்கள் தி ரோடு, ராம், பொன்னியின் செல்வன் 2, சதுரங்க வேட்டை 2, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கப் போகும் தளபதி 67 போன்ற பல படங்களில் கமிட் ஆகி இருக்கிறார்.

Advertisement