அருமையானதொரு படைப்பை சரியான நேரத்தில் கொண்டு வந்திருக்கும் நடிப்பு அசுரன் – கேப்டன் மில்லர் குறித்து உதயநிதி.

0
389
- Advertisement -

தனுஷ் நடிப்பில் வெளியாகி இருக்கும் கேப்டன் மில்லர் படம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது X தளத்தில் பதிவிட்டு இருக்கிறார். நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் கேப்டன் மில்லர். இந்த படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்கி இருக்கிறார், சத்தியஜோதி பிலிம்ஸ் தயாரித்திருக்கிறது. இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். இந்த படத்தில் பிரியங்கா மோகன், சிவராஜ்குமார், விஜி சந்திரசேகர், சந்திப் கிஷன், வினோத் கிஷன், நிவேதிதா சதீஷ் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள்.

-விளம்பரம்-

மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகியிருக்கும் இந்த படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகி இருக்கிறது. இந்த படம் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் நடந்தது. படத்தில் மத்தளம் பாறை கிராமத்து மக்கள் அடிமை வாழ்க்கை வாழ்கின்றார்கள். இவர்கள் கட்டிய கோயிலுக்குள் இவர்களே போக முடியாமல் இருக்கும் மன்னர் ஆட்சியில் அடிமைகளாக இருக்கிறார்கள். இதையெல்லாம் பார்த்து ஆத்திரம் அடைந்த தனுஷ் மரியாதை வேண்டும் என்று பட்டாளத்தில் ஆங்கில படையில் சேர்ந்தார். ஆனால், அங்கு ஆங்கிலேயர்களை எதிர்க்கும் இந்திய மக்களை சுட்டுக் கொல்லும் பணி தனுஷிற்கு கிடைக்கிறது.

- Advertisement -

இதனால் குற்ற உணர்ச்சியில் தனுஷ் சொந்த ஊர் திரும்புகிறார். ஆனால், அந்த கிராமத்து மக்கள் தனுசை ஊரை விட்டு துரத்துகிறார்கள். இதனால் காட்டில் நாடோடி வாழ்க்கையாக தனுஷ் வாழ்கிறார். இவரை புரட்சி கூட்டம் அரவணைத்து ஏற்றுக் கொள்கிறது. ஆங்கிலேயர்களை எதிர்த்து இந்த புரட்சி கூட்டம் சண்டை போடுகிறது. இதில் தனுஷும் இருக்கிறார். இன்னொரு பக்கம் மன்னராட்சியில் பொக்கிஷமாக பாதுகாத்த கோயில் சிலை ஆங்கிலேய அரசால் அபகரிக்கப்படுகிறது.

வைக்கிறது. இதனால் தனுஷ் உடைய கூட்டம் திருட செல்கிறது. போன இடத்தில் தனுஷ் எடுக்கும் சுயநல முடிவு ஒட்டுமொத்த கிராமத்தையும் பாதிக்கிறது. இதனால் ஆங்கிலேயர்- மன்னர் பகைக்கு இடையே மத்தளம் பாறை மக்கள் திண்டாடுகிறார்கள். யாரால் வெறுத்து ஊரைவிட்டு விரட்டப்பட்டாரோ, அந்த மக்களை காக்கவே தனுஷ் கேப்டன் மில்லனாக மாறுகிறார். அவர் என்ன செய்தார்? மக்களை எப்படி காப்பாற்றினார்? ஆங்கிலேயரை வெளியேற்றினாரா? என்பதே படத்தின் மீதி கதை.

-விளம்பரம்-

இந்த படத்திற்கு கலவையான விமர்சனங்கள் பெற்றுவரும் நிலையில் பலரும் இந்த படம் குறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் இந்த படம் குறித்து பதிவிட்டு இருக்கும் அமைச்சர் உதயநிதி “ஒடுக்கப்பட்ட மக்களின் கோயில் நுழைவு உரிமையை அடிப்படையாக வைத்து ‘கேப்டன் மில்லர்’ என்கிற அருமையானதொரு படைப்பை சரியான நேரத்தில் கொண்டு வந்திருக்கும் நடிப்பு அசுரன் தனுஷ், சிவராஜ் குமார், இயக்குனர் அருண் மாதேஸ்வரன்.

இசை அமைப்பாளர் சகோதரர் ஜி.வி.பிரகாஷ்குமார், சத்யஜோதி பிலிம்ஸ், பிரியங்கா அருள் மோகன், சண்டை பயிற்சியாளர் திலீப் உள்ளிட்ட அனைவருக்கும் எனது பாராட்டுகள். மனித உரிமைப் போராட்டத்தின் மகத்துவத்தைச் விடுதலைப் போராட்டக் கதைக்களத்தின் ஊடாக அழுத்தமாக பேசியிருக்கிறார் கேப்டன் மில்லர்” என்று அந்த பதிவில் பதிவிட்டுள்ளார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.

Advertisement