‘டாய் ப்ராடுப்பயலே’ – விக்ரம் படத்தை வாங்கியது குறித்து பேசிய உதயநிதியை விமர்சித்த சவுக்கு சங்கர். இப்படி தான் வாங்கினாரா ?

0
404
vikram
- Advertisement -

கமலை மிரட்டி தான் விக்ரம் படத்தை உதயநிதி வாங்கினார் என்று எழுந்த சர்ச்சைக்கு உதயநிதி அளித்திருக்கும் பதில் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் என்றென்றும் உலக நாயகனாக கலக்கிக் கொண்டிருப்பவர் கமலஹாசன். இவர் நடிகர் மட்டுமில்லாமல் தயாரிப்பாளர், தொகுப்பாளர், அரசியல்வாதி என பன்முகம் கொண்டு இருக்கிறார். தற்போது இவர் மாநகரம், கைதி, மாஸ்டர் என தொடர்ச்சியாக சூப்பர் டூப்பர் ஹிட் படங்களைக் கொடுத்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் விக்ரம் படத்தில் நடித்து இருக்கிறார். இந்த படத்தை கமலின் ராஜ்கமல் இண்டர்நேஷனல் நிறுவனம் உடன் இணைந்து உதயநிதி ஸ்டாலின் தயாரித்து இருக்கிறார்.

-விளம்பரம்-
Actor Kamal Vikram Story Leaked| கமல் விக்ரம் படம்

மேலும், இந்த படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில் உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்து இருக்கிறார். க்ரிஷ் கங்காதரன் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்து இருக்கிறார். அதுமட்டும் இல்லாமல் இது கமலின் 232 படம் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்தப் படத்தின் படப்பிடிப்பு எல்லாம் முடிந்து இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. சமீபத்தில் தான் விக்ரம் படத்தின் முதல் பாடல் பத்தல பத்தல வெளியாகி இருந்தது.

- Advertisement -

விக்ரம் படம் பற்றிய தகவல்:

இந்த பாடலை கமல் எழுதி பாடி இருந்தார். அதுவும் இந்த பாடல் சென்னை தமிழில் பாடி இருந்தார். மேலும், இந்த பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது. மேலும், இந்த ஆண்டில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக கமலின் விக்ரம் படம் அமைந்திருக்கிறது. இந்த படம் ஜூன் மூன்றாம் தேதி வெளிவர இருக்கிறது. மே 15ஆம் தேதி விக்ரம் படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் டிரைலர் வெளியீடு ஆகியவை சென்னை நேரு விளையாட்டு அரங்கத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்று இருந்தது.

பட விழாவில் உதயநிதி கூறியது:

இதில் விக்ரம் படத்தின் படக்குழுவினரை தவிர இயக்குனர் பா ரஞ்சித், சிம்பு, உதயநிதி ஸ்டாலின் உட்பட பல பிரபலங்கள் கலந்து கொண்டிருந்தனர். இந்நிலையில் பட விழாவில் கலந்துகொண்ட உதயநிதி அவர்கள் கூறியிருப்பது, நான் கமல் சாரை மிரட்டி தான் இந்த படத்தை வாங்கினேன் என்று எல்லோரும் கேட்கிறார்கள். அவரை யாரும் மிரட்ட முடியாது. கமல் யாருக்கும் பயந்ததில்லை. சினிமா ஒரு பக்கம் இருந்தாலும் கட்சியையும் அவர் சிறப்பாக நடத்துகிறார். வருடத்திற்கு ஒரு படமாவது நீங்க நடிக்க வேண்டும் என்பது தான் என்னுடைய வேண்டுகோள்.

-விளம்பரம்-

உதயநிதி ஸ்டாலின் திரைப்பயணம்:

அதுவும் லோகேஷ் மாதிரி இளைஞர்கள் படத்தில் வேலை பார்க்க நானும் ஆவலாக இருக்கிறேன் என்று கூறி இருக்கிறார். இப்படி உதயநிதி அளித்திருக்கும் பதிலின் மூலம் விக்ரம் படத்தை மிரட்டி வாங்கவில்லை என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது.இப்படி ஒரு நிலையில் பிரபல பத்திரிகையாளர் சவுக்கு சங்கர் இதுகுறித்து பதிவிட்டுள்ளதாகவது ‘டாய் ப்ராடுப்பயலே. கமல் கோபுரம் பிலிம்ஸ்க்கு வித்த படத்தை, துபாய்ல இருந்து மதுரை அன்புச் செழியனுக்கு போன் பண்ணி நீ வாங்குனது, மொத்த இண்டஸ்ட்ரிக்கே தெரியும். அளவா புளுகுடா’ என்று பதிவிட்டுள்ளார். தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் உதயநிதி ஸ்டாலின். இவர் தயாரிப்பாளராக தான் சினிமா உலகிற்கு அறிமுகமாகி இருந்தார். பின் ஆதவன் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகி இருந்தார். அதை தொடர்ந்து இவர் ஒரு கல் ஒரு கண்ணாடி என்ற படத்தின் மூலம் தான் உதயநிதி ஹீரோவாக களம் இறங்கி இருந்தார்.

உதயநிதி நடிக்கும் படங்கள்:

அதை தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்து இருக்கிறார். மேலும், இவர் நடிப்பில் வெளிவந்து இருந்த கண்ணை நம்பாதே, சைக்கோ போன்ற படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் மாமன்னன் என்ற படத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கிறார். தற்போது உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் நெஞ்சுக்கு நீதி. இந்த படத்தை அருண்ராஜா காமராஜ் இயக்கி இருக்கிறார். இந்த படம் கூடிய விரைவில் வெளியாக இருக்கிறது.

Advertisement