-விளம்பரம்-
Home பொழுதுபோக்கு சமீபத்திய

ஸ்ரீதேவி துவங்கி வைத்த தொழில் – சினிமாவில் இருந்து விலகிய மஹேஸ்வரி என்ன செய்கிறார்.

0
2179
maha

சினிமா உலகில் அஜித், விக்ரம் போன்ற இரண்டு மாஸ் ஹீரோக்கள் இணைந்து நடித்த படம் தான் “உல்லாசம்”. இந்த படம் 1997ம் ஆண்டு திரையுலகிற்கு வெளிவந்தது. மேலும்,இந்த படத்தில் கதாநாயகியாக நடித்தவர் தான் நடிகை மகேஸ்வரி. அது மட்டும் இல்லைங்க இந்த உல்லாச நடிகை மகேஸ்வரி யாரு? அவங்க இப்ப என்ன பண்ணிட்டு இருக்காங்க? என சமூக வலைத்தளங்களில் பல கேள்விகள் எழுந்து வருகின்றது. உல்லாசம் பட நடிகை மகேஸ்வரியின் குடும்பமே சினிமா திரையுலகத்தை சேர்ந்தவர்கள். சொல்லனும்னா பேரழகி நடிகை ஸ்ரீதேவியின் சித்தி மகள் தான் இந்த நடிகை மகேஷ்வரி. இவர் முதன் முதலாக சினிமா திரையுலகிற்கு 1994 ஆம் ஆண்டு ‘க்ரண்ட்டிவீர்’ என்ற படத்தின் மூலம் தான் அறிமுகமானார். அதன் பிறகு தான் தமிழில் ‘கருத்தம்மா’ என்ற படத்தில் நடித்தார். இந்த படத்தின் மூலம் இவர் மக்களிடையே அதிகமாகப் பிரபலமானார். அதற்கு பிறகு நடிகை மகேஸ்வரிக்கு சினிமா பட வாய்ப்புகள் அடுத்தடுத்து வந்து கொண்டிருந்தன.

-விளம்பரம்-

மேலும்,நடிகை மகேஸ்வரி தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் 40க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழில் ‘பாஞ்சாலங்குறிச்சி, நாம் இருவர் நமக்கு இருவர், உல்லாசம், நேசம், ரத்னா, என்னுயிர் நீதானே, சுயம்வரம் என பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார். எப்பவுமே சினிமா துறையில் ஹீரோயின்கள் ஒரு 15 படம் நடிப்பதே பெரிய விஷயம். அதற்கு பிறகு நீண்ட நாள் நடிகையாக நடிப்பது கொஞ்சம் கஷ்டமான விஷயம் தான். இதனைத்தொடர்ந்து நடிகை மகேஷ்வரிக்கும் சினிமா துறையில் படவாய்ப்புகள் கொஞ்சம் கொஞ்சமாக குறையத் தொடங்கியது. பிறகு மகேஸ்வரியும் வழக்கம்போல எல்லா நடிகைகள் செய்வதை தான் அவரும் செய்தார். நடிகை மகேஸ்வரி வெள்ளித்திரையில் இருந்து சின்னத்திரைக்கு வந்து சீரியல்ல நடிக்க ஆரம்பிச்சாங்க. கடைசியில நடிகை மகேஸ்வரி அவர்கள் ‘அதே கண்கள்’ என்ற சீரியலில் நடித்துள்ளார்.

அது மட்டுமில்லீங்க மகேஸ்வரி மகேஸ்வரி சின்ன வயசிலிருந்தே ‘ஃபேஷன் டிசைனிங்கில்’ ரொம்ப அதிக ஆர்வம் உடையவர். அதனால், இவர் சினிமா துறையில் ஒரு பக்கம் நடித்து இருந்தாலும் ஆடைகளுக்கு டிசைன் செய்யும் வேலையை செய்து கொண்டிருந்தார். நடிகை மகேஸ்வரி சினிமாத்துறையில் வாய்ப்புகள் குறைய தொடங்கியவுடன் முழு கவனத்தையும் பேஷன் டிசைனில் செலுத்தி வந்தார். இந்த நிலையில் நடிகை மகேஸ்வரிக்கு வீட்டில் கல்யாண பேச்சை தொடங்கினார்கள். மேலும்,நடிகை மகேஸ்வரி ஹைதராபாத்தைச் சேர்ந்த தொழிலதிபரை காதலித்து திருமணமும் செய்து கொண்டார்.

-விளம்பரம்-

மேலும், இவருடைய பேஷன் டிசைனர் வேலைக்கு தன்னுடைய சித்தி ஸ்ரீதேவியும் ரொம்ப உதவியாக இருந்திருக்கிறார் என்று பலமுறை பேட்டிகளில் கூறியுள்ளார். மேலும், நடிகை ஸ்ரீதேவிக்கு சினிமா துறையிலும்,வெளியே செல்லும் நிகழ்ச்சிகளுக்கும் தன் கையால் டிசைன் செய்த உடைகளை தான் கொடுப்பாங்க நடிகை மகேஸ்வரி. மேலும், ஸ்ரீதேவியும் நடிகை மகேஷ்வரி டிசைன் செய்த ஆடைகளைத் தான் பார்ட்டிகளுக்கும், நிகழ்ச்சிகளுக்கும் போட்டுட்டு போவாங்க. தற்போது மகேஸ்வரி பேஷன் டிசைனர் ஆகவும் பணியாற்றி வருகிறார்.

-விளம்பரம்-
-விளம்பரம்-

Follow Us at Google News : அனைத்து சினிமா செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் என்பதை கிளிக் செய்யவும்.

Google news