கடைசி நேர ட்விஸ்ட்- பிக் பாஸை விட்டு வெளியேறிய பெண் போட்டியாளர்.

0
348
- Advertisement -

பிக் பாஸ் சீசன்6 91 நாட்களை கடந்த இந்த வாரம் யாரும் எதிர்பார்க்காத விதமாக ஒரு போட்டியாளர் வெளியேறியுள்ளார் என்ற தகவல் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகிறது. பிக் பஸ் சீசன்6 தொடர்ந்து கடந்து 91 நாட்களாக வரும் நிலையில் இந்த சீசன் முடிய இன்னமும் 14 நாட்கள் மட்டுமே உள்ளன. பிக் பாஸ் சீசன்6ல் தற்போது 13 ஒட்டியாளர்கள் வெளியேறி 8 போட்டியாளர்கள் மட்டுமே பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கின்றனர்.

-விளம்பரம்-

இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து ஒருவர் வெளியேறினால் அடுத்த வாரம் இரண்டு பேரை வெளியில் அனுப்பலாம் என்று தெரிகிறது. இதனால் மூன்று பேர் போக ஐந்து பேர் மாட்டும் பிக் பாஸ் சீசன்6ன் பைனலுக்கு செல்வார்கள். அந்த வகையில் இந்த வார நாமினேஷன் டாஸ்க்குகள் நடந்தன ஆனால் கொஞ்சமா வித்தியாசமாக நடந்தது. அதாவது பிக் பாஸ் போட்டியாளர்களை கன்பாஷன் ரூமிற்க்கு அழைத்து அவர்களிடம் இதனை நாள் பிக் பாஸ் வீட்டில் என்ன செய்திரர்கள் என்று கேள்விகள் கேட்பார் ஆனால் இதில் 10 நிமிடங்ககள் பேசாமல் இருந்தால் அவர்கள் டாஸ்கில் தோல்வி அடைவாரக்ள்.

- Advertisement -

அந்த வகையில் இந்த பிக் பாஸ் சீசனில் மிகவும் வலிமையான போட்டியாளரான அசீம் சுமார் ஒன்றரை மணிநேரம் தொடர்ந்து பேசி இந்த வார நாமினேஷனில் இருந்து தப்பித்து விட்டார். இந்நிலையில் மீதமிருக்கும் ஆறு பேரும் நாமினேஷனில் இருந்தனர், ஆனால் அமுதவாணம் மட்டும் நேரடியாக பைனலுக்கு செல்லும் டாஸ்கான “டிக்கெட் டு பின்னாலே” டாஸ்கில் வெற்றி பெற்று நேரடியாக பைனலுக்கு சென்றார்.

ஆனால் இந்த வாரம் வெளியேறும் நபர் இவர் தான் என்று கருதப்பட்டு வந்த நிலையில் முதலில் சேவ் ஆகிவிட்டார். இந்த நிலையில் மீதம் உள்ள 5 போட்டியாளர்களும் நாமினேஷன் லிஸ்டில் இடம் பெற்றுள்ளார். அந்த 5 போட்டியாளர்களில் ADK, ரட்சிதா, ஷவின் கணேஷ் என மூன்று பேர் மிகவும் குறைவான வாக்குகள் மட்டுமே பெற்றிருக்கின்றனர். எல்லோரும் ADK தான் வெளியேறிவார் என்று நினைத்தனர், ஏனென்றால் ADK இந்த வாரம் முழுவதும் சோர்வாக எந்த டாகிலும் கலந்து கொல்லாமல் இருந்து வந்தார். அதோடு பிக் பாஸும் ADKவை அழைத்து இப்பிடியே இருந்தால் உங்களை வெளியேற்றுவதை தவிர விழியில்லை என்று கூறியிருந்தார்.

-விளம்பரம்-

ஆனால் யாரும் எதிர்பார்க்காத விதமாக இந்த வாரம் ரட்சிதா வெளியேறியுள்ளார். இவர் தொடக்கத்தில் இருந்து எந்த வித சண்டைகளிலும் கலந்து கொல்லாமல் இருந்து வந்தார். பலமுறை சாதுர்த்தியமாக எலிமினேஷனில் இருந்து தப்பித்த ரட்சிதா தற்போது பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறி இருக்கிறார் என்ற தகவல் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகிறது. ஆனால் தனலட்சிமி, மஹேஸ்வரி போன்ற வலிமையான போட்டியாளர்களை விரைவாக வெளியேறிய நிலையில் ரட்சிதா எதுவுமே செய்யாமல் இந்தனை வாரம் பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்தது எப்படி என்று கேள்வி எழுத்துதான் வருகிறது.

Advertisement