11 வருடங்களுக்கு பின் தந்தையான ராம் சரண்- தாமதம் ஆனதற்கு காரணம் இது தான்-மகிழ்ச்சியில் உபாசனா

0
879
- Advertisement -

11 வருடங்கள் கழித்து கர்ப்பமாக இருப்பதை குறித்து ராம் சரணின் மனைவி அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தெலுங்கு சினிமா உலகில் மாஸ் ஹீரோவாக வலம் வருபவர் நடிகர் ராம் சரண். இவர் 2007 ஆம் ஆண்டு வெளிவந்த சிறுத்தை என்ற திரைப்படத்தின் மூலம் தான் சினிமா துறைக்கு அறிமுகமாகி இருந்தார். அதனைத் தொடர்ந்து இவர் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து இருக்கிறார். அதோடு இவர் நடிப்பில் வெளிவந்த படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது.

-விளம்பரம்-

மேலும், இவர் தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் மகன் ஆவார். தந்தையைப் போலவே மகனும் டோலிவுட்டில் பட்டையை கிளப்பிக் கொண்டு வருகிறார். ராம் சரண் அவர்கள் நடிகர் மட்டும் இல்லாமல் திரைப்பட தயாரிப்பாளரும் ஆவார். அதேபோல் இவருடைய நடிப்பில் வந்த மாவீரன், ரங்கஸ்தலம் போன்ற படங்கள் எல்லாம் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது. சமீபத்தில் நடிகர் ராம் சரண் அவர்கள் தெலுங்கில் பிரம்மாண்ட இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் வெளியான RRR என்ற படத்தில் நடித்து இருந்தார்.

- Advertisement -

ராம் சரண் திரைப்பயணம்:

இந்த படத்தில் ராம் சரணுடன் பிரபலமான நடிகர் ஜூனியர் என்டிஆரும் இணைந்து நடித்து இருந்தார். இரண்டு மாஸ் ஹீரோக்கள் இணைந்து இந்த படத்தில் நடித்து இருந்தார்கள். மேலும், இந்த படத்தில் ராம் சரண் போலீசாக மிரட்டியிருப்பார். இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்று இருந்தது. இதனைத் தொடர்ந்து ராம்சரண் அவர்கள் ஷங்கர் இயக்கத்தில் ஆர் சி 15 என்ற படத்தில் நடித்து வருகிறார்.

ராம் சரண் குடும்பம்:

இப்படத்தை பெரும் பொருட்செலவில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் உருவாக்கி வருகிறது. படத்தில் இவருக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடிக்கிறார். சமீபத்தில் தான் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது. கூடிய விரைவில் இந்த படம் வெளியாக இருக்கிறது. தற்போது இவர் ஹாலிவுட்டிலும் ஒரு படம் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதனிடையே நடிகர் ராம்சரண் அவர்கள் 2011ஆம் ஆண்டு உபாசனா காமினேனி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் திருமணமாகி 11 ஆண்டுகள் ஆகிவிட்டது.

-விளம்பரம்-

ராம் சரண் மனைவி:

அதோடு இவர்களுக்கு திருமணமாகி 11 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை. இது குறித்து ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி கொண்டே தான் இருந்தார்கள். சமீபத்தில் தான் ராம் சரண் தந்தையாகும் செய்தி சோசியல் மீடியாவில் வைரலாகி இருந்தது. இதற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து இருந்தார்கள். இந்த நிலையில் ராம் சரண் மனைவி உபாசனா அவர்கள் டைம்ஸ் ஆப் இந்தியாவிற்கு பேட்டி ஒன்று அளித்திருக்கிறார். அதில் அவர், எனக்கு திருமணம் ஆன மூன்றாவது நாளிலிருந்து நான் கர்ப்பமாக இருக்க வேண்டும் என்று பலரும் விரும்பினார்கள். ஆனால், என்னுடைய கேரியரை தேர்வு செய்வதில் நான் பிஸியாக இருந்தேன். அதுமட்டுமில்லாமல் சரணும் எனக்கு முழு சுதந்திரம் கொடுத்திருந்தார்.

உபாசனா அளித்த பேட்டி:

அதோடு எங்களுடைய ரிலேஷன்ஷிப்பை மேம்படுத்துவதில் நாங்கள் அதிக கவனம் செலுத்தி இருந்தோம். இதனால் தான் குழந்தை பெற்றுக்கொள்ள தாமதமானது. இது நாங்கள் இருவருமே சேர்ந்து எடுத்த முடிவுதான். இப்போது நாங்கள் பெற்றோராக இருக்கிறோம். இதையும் நாங்கள் இருவரும் சேர்ந்து எடுத்த முடிவு. கர்ப்பம் அடைந்ததை முதலில் நான் சரண் இடம் சொன்னபோது என்னை அமைதியாக இருக்க சொல்லி அவர் அனைத்து சோதனைகளையும் செய்து உறுதிப்படுத்திய பின்னரே கொண்டாடினார். தற்போது நான் கர்ப்ப காலத்தை அனுபவித்து வருகிறேன். இந்த சமயங்களில் சரணுக்கும் எனக்கும் பல விஷயங்கள் நடந்திருக்கிறது. ஆர்ஆர்ஆர் படத்துக்கான கோல்டன் குளோப் விருதுகள், ஆஸ்கர் விருதுகள் நான் கர்ப்பம் அடைந்த சமயத்தில் தான் கிடைத்தது. இது எங்களுக்கு கூடுதல் சந்தோஷத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்று கூறி இருக்கிறார்.

Advertisement