ஒருவரின் இந்த நிலையில் கூட விளம்பரம் தேடுவீர்களா – ரிஷப் பண்ட் விபத்திற்கு பின் நடிகை போட்ட பதிவால் கடுப்பான ரசிகர்கள்.

0
360
rishab
- Advertisement -

ரிஷப் பன்ட் விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்று வரும் நிலையில் லெஜண்ட் பட நடிகை ஊர்வசி ரவுடேலா போட்டு இருக்கும் பதிவு ரசிகர்கள் கடும் கோபம் அடைந்துள்ளனர். இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட் இன்று அதிகாலை டேராடூன் தேசிய நெடுஞ்சாலையில் கார் விபத்தில் சிக்கி பலத்த காயங்களுடன் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். டெல்லியில் இருந்து உத்தரகாண்ட் மாநிலத்தில் இருக்கும் தனது வீட்டிற்கு சொகுசு காரில் பயணித்த அவர் இன்று காலை அதிகாலை 5.30 மணிக்கு கார் விபத்தில் சிக்கினார். அதிவேகத்தில் பயணித்த அவரது கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் இருந்த தடுப்பில் மோதி தீ பிடித்து எரிந்தது.

-விளம்பரம்-

இதில் தலை (நெற்றி), முதுகு, கால் ஆகிய பகுதிகளில் காயமடைந்த ரிஷப் பண்ட் அங்கிருந்த பொதுமக்களின் உதவியின் மூலம் அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வெளியிட்ட அறிக்கையில் கார் கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பில் மோதியதும் காரில் தீப்பிடித்து விட்டது. உடனே ரிஷப் பண்ட் காரில் இருந்து வெளியேற முயற்சித்து கார் கண்ணாடியை உடைத்து அவரே வெளியில் வந்து விட்டார். மேலும் அங்கிருந்த பொதுமக்கள் அவரை மீட்டு அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

- Advertisement -

பிறகு அங்கு முதலுதவி பெற்றுக்கொண்ட ரிஷப் பண்ட் தற்போது டேராடூனில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையான மேக்ஸ் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை பரிசோதித்த டாக்டர்கள் ரிஷப் பண்ட்டிற்கு எந்தவித எலும்பு முறிவோ, தீக்காயமோ கிடையாது என்று தெரிவித்ததாக போலீசார் கூறியுள்ளனர்.தற்போது சீரான உடல்நிலையுடன் இருக்கும் ரிஷப் பண்ட் இந்த விபத்து எப்படி நடந்தது என்பது குறித்து போலீஸிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இந்த நிலையில் பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுடேலா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது புகைப்படம் ஒன்றை பகிர்ந்து ரிஷப் பண்டை சூசகமாக குறிப்பிடும் வகையில் பதிவு ஒன்றை போட்டுள்ளார். அந்த பதிவில் ‘பிரார்த்தனை செய்துகொண்டு இருக்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார். ஊர்வசி ரவுடேலாவின் இந்த பதிவு ரிஷப் பண்டை தான் குறிப்பிடுகிறது என்று ரசிகர்கள் பலரும் திட்டி தீர்த்து வருகின்றனர்.

-விளம்பரம்-

கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரிஷப் பண்டை மறைமுகமாக கேலி செய்து பல பதிவுகளை போட்டு வந்தார் ஊர்வசி. சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி கொடுத்த அவர் தன்னை சந்திப்பதற்காக கிரிக்கெட் வீரர் ஒருவர் 12 மணி நேரத்திற்கு மேலாக என்னை சந்திப்பதற்காக காத்துக் கொண்டிருந்தார். ஆனால் நான் தூங்கி எழுந்து இப்போது அவரை சந்திக்க முடியாது மும்பை வந்து சந்திக்க சொல்லுங்கள் என்று சொன்னேன் என்று கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்டின் பெயரை குறிப்பிடாமல் RP என்று மறைமுகமாக அவரைப் பற்றி கூறி பேட்டி கொடுத்திருந்தார்.

இதனையோட்டி மற்றொரு பதிவில் தம்பி போய் பந்து விளையாடு என்று வடிவேலு தோனியில் கலாய்த்திருக்கிறார். இந்த பதிவு ரிஷப் பண்ட் ரசிகர்களே கோவத்தின் உச்சிக்கே கொண்டு போய் சேர்த்தது என்று சொல்லலாம். இப்படி ஒரு நிலையில் ரிஷப் பண்ட் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்ட்டு இருக்கும் நிலையில் ஊர்வசி போட்டு இருக்கும் இந்த சூசக பதிவை கண்டு ரசிகர்கள் பலரும் ஒருவரின் இந்த நிலையில் கூட அவரை வைத்து விளம்பரம் தேடுவது கேவலமாக இருக்கிறது என்று திட்டி தீர்த்து வருகின்றனர்.

Advertisement