கிட்டத்தட்ட கடந்த இரண்டு ஆண்டுகளாக பேச்சு பொருளாகவே இருந்த தனுசின் வடசென்னை திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. வெற்றிமாறன் இயக்கியுள்ள இந்த படம், வட சென்னையில் உருவாகும் கதையாக உள்ளது.
பொல்லாதவன், ஆடுகளம் படத்திற்கு பிறகு வெற்றிமாறன்-தனுஷ் ஜோடி மூன்றாவது முறையாக இணைந்துள்ளதால் படத்திற்கு ஹைப் எகிறிக்கொண்டே போகிறது. தற்போது வெளியிடப்பட்டுள்ள படத்தின் இரண்டு பாஸ்ட் லுக் போஸ்டர்கள் இணையத்தை கலக்கி வருகின்றது.
வடசென்னைக்கு ஏற்றவாறு, நாட்டு படகின் உச்சிகொடியில் தனுஷ் ஏறி நிற்பது போன்ற ஒரு போஸ்டர் வெளியிப்படட்டுள்ளது. மேலும், கைதாகி போலீஸ் வேனில் ஏறிசெல்வது போல ஒரு போஸ்டரும் வெளியிடப்பட்டுள்ளது.இந்த படத்தின் கதை இன்று இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதாவது பன்முக திரைகலைஞன் நடிகர் தனுசின் வாழ்க்கை வரலாறு தான் படத்தின் கதையாக இருக்குமாம். மேலும், தனுஷ் இதில் ஒரு கேரம் போர்ட் பிளேயராக அன்பு என்ற கேரக்டரில் நடித்துள்ளாராம் தனுஷ்.