இன்று பெரிதும் பேசப்படும் விஷயம் குறித்து 27 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியன் படத்தில் முதன் முதலாக எழுதியிருக்கிறேன் – வைரமுத்து

0
174
- Advertisement -

இந்தியன் படத்தின் அனுபவம் குறித்து வைரமுத்து பகிர்ந்து இருக்கும் பதிவு தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகின் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் 1996 ஆம் ஆண்டு வெளிவந்து இருந்த படம் “இந்தியன்”. இந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து இருந்தது. இதனால் இந்த படத்தின் இரண்டாம் பாகம் எடுக்க முடிவு செய்து இருந்தார்கள் படக்குழு. மேலும், 25 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ஷங்கர்- கமலஹாசன் கூட்டணியில் “இந்தியன் 2” படம் உருவாகி வந்தது.

-விளம்பரம்-

இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. மேலும், ‘இந்தியன் 2’ படம் அதிகபட்ச செலவில் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த படத்தில் தகவல் காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், ப்ரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, ரோபா ஷங்கர் உள்ளிட்ட பல நடிகர்கள் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். வெற்றிகரமாக படப்பிடிப்பும் தொடங்கப்பட்டது. அப்போது கமலஹாசன் அவர்களுக்கு அறுவை சிகிச்சை நடந்தது. இதனால் படப்பிடிப்பு ஒத்தி வைக்கப்பட்டு இருந்தது.

- Advertisement -

இந்தியன் 2 படம்:

சிறிய இடைவெளிக்கு பிறகு படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. பின் படப்பிடிப்பு தளத்தில் திடீரென்று கிரேன் அறுந்து விழுந்து 3 பேர் அநியாயமாக உயிரிழந்து இருந்தார்கள். அதில் 8 பேர் படுகாயமடைந்து இருந்தார்கள். இதனால் படப்பிடிப்பு நின்று விட்டது. இப்படி பல பிரச்சனைகளின் நடுவில் இந்தியன் 2 திரைப்படம் சமீபத்தில் தொடங்கியது. அதோடு இந்தியன் 2 திரைப்படத்தில் மறைந்த நடிகர் விவேக் முக்கிய கதாபாத்திரத்தில் ஏற்று நடித்திருந்தார்.

படம் குரித்த தகவல்:

விவேக் நடித்த காட்சிகளை நீக்கிவிட்டு ஜோக்கர் திரைப்படத்தின் நாயகன் குரு சோமசுந்தரம் தான் விவேக் நடித்த கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தற்போது மும்முரமாக இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. மேலும், இந்த படத்தினுடைய அறிமுக காட்சிகள் வருகிற 3ஆம் தேதி வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்தியன் படத்தின் முதல் பாகத்தில் பாடல் ஆசிரியர் வைரமுத்து எழுதிய டெலிபோன் மணிபோல் பாடல் குறித்த பதிவு தான் தற்போது வெளியாகியிருக்கிறது.

-விளம்பரம்-

வைரமுத்து பதிவு:

அதில் அவர், 92 ஆண்டு வரலாறு கொண்ட திரைப்பாட்டு அன்பின் ஐந்திணையாகிய காதலைப் பாடியிருக்கிறது. ஒருதலைக் காதலாகிய கைக்கிளையை – பொருந்தாக் காமமாகிய பெருந்திணையைப் பாடியிருக்கிறது. ஆனால், இன்று பெரிதும் பேசப்படும் தன்பாலின உறவை 27 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியன் படத்தில் முதன் முதலாக எழுதியிருக்கிறேன். ஆஸ்திரேலியா படப்பிடிப்பில் கமலும் ஷங்கரும் இதுகுறித்து ஜாடையாக விவாதித்துப் புன்னகையோடு கடந்துவிட்டார்களாம் அது எந்தவரி தெரியுமா? என்று பாடல் விடியோவை பதிவிட்டு இருக்கிறார்.

வைரமுத்து குறித்த தகவல்:

தமிழ் சினிமா உலகில் புகழ்பெற்ற திரைப்பட பாடலாசிரியராக திகழ்பவர் கவிஞர் வைரமுத்து. நிழல்கள் எனும் திரைப்படத்தில் பொன்மாலைப்பொழுது என்ற பாடலின் மூலம் தான் இவர் சினிமா உலகில் அறிமுகமாகி இருந்தார். அதனைத் தொடர்ந்து இவர் பல படங்களில் பாடல்களை எழுதி இருக்கிறார். மேலும், இவர் இதுவரை 7000 பாடல்களுக்கு மேல் எழுதி இருக்கிறார். இப்படி புகழின் உச்சத்தில் இருந்த கவிஞர் வைரமுத்து மீது பின்னணி பாடகி சின்மயி பாலியல் குற்றம் சாட்டி இருந்தது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

Advertisement