இன்னும் அர்த்தம் புரியாமல் புகார் வருகிறது- பிரபல பாடல் வரிக்கு விளக்கம் கொடுத்த வைரமுத்து

0
1430
- Advertisement -

பிரபல பாடல் வரிக்கு கவிஞர் வைரமுத்து அளித்திருக்கும் விளக்கம் தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் புகழ்பெற்ற திரைப்பட பாடலாசிரியராக திகழ்பவர் கவிஞர் வைரமுத்து. நிழல்கள் எனும் திரைப்படத்தில் பொன்மாலைப்பொழுது என்ற பாடலின் மூலம் தான் இவர் சினிமா உலகில் அறிமுகமாகி இருந்தார். அதனைத் தொடர்ந்து இவர் பல படங்களில் பாடல்களை எழுதி இருக்கிறார்.

-விளம்பரம்-

மேலும், இவர் இதுவரை 7000 பாடல்களுக்கு மேல் எழுதி இருக்கிறார். இப்படி புகழின் உச்சத்தில் இருந்த கவிஞர் வைரமுத்து மீது பின்னணி பாடகி சின்மயி பாலியல் குற்றம் சாட்டி இருந்தது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இதைத்தொடர்ந்து பல பெண்கள் கவிஞர் வைரமுத்து மீது செக்ஸ் புகார்களை அளித்து இருந்தார்கள். பிறகு வைரமுத்து குறித்து பல விமர்சனங்களை சின்மயி எழுப்பி இருந்தார்.

- Advertisement -

வைரமுத்து குறித்த சர்ச்சை:

இருந்தாலும், பலர் வைரமுத்துக்கு ஆதரவாக குரல் கொடுத்து இருந்தார்கள். ஆனால், பாடகி சின்மயி கூறும் குற்றச்சாட்டில் உண்மை இருக்கிறதா? என்று சிலர் சந்தேகித்தும் வருகின்றனர். அதுமட்டும் இல்லாமல் கவிஞர் வைரமுத்து எது செய்தாலும் அவரை குறித்து சின்மயி விமர்சித்துப் பேசி வருகிறார். அதோடு வைரமுத்து மீது பல பெண்கள் பாலியல் புகார் கொடுத்தும் அவர் மீது எந்தவித நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்கு காரணம் இவர் மு. க. ஸ்டாலினுக்கு நெருக்கமானவராக இருக்கிறார் என்று கூறப்படுகிறது.

வைரமுத்து பிறந்தநாள்:

ஆனால், இதை எல்லாம் வைரமுத்து கண்டு கொள்ளாமல் இருக்கிறார். சமீபத்தில் தான் கவிஞர் வைரமுத்து அவர்கள் தன்னுடைய 70 வது பிறந்தநாளை கொண்டாடியிருந்தார். இந்த நிலையில் தன்னுடைய பாடல் வரி குறித்த சர்ச்சைக்கு வைரமுத்து கொடுத்திருக்கும் விளக்கப்பதிவு தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, இயக்கத்தின் இமயம் பாரதிராஜா இயக்கத்தில் 1983 ஆம் ஆண்டு வெளிவந்த படம் மண்வாசனை. இந்த படத்தில் மறைந்த நடிகர் பாண்டியன், ரேவதி உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள்.

-விளம்பரம்-

மண்வாசனை படம்:

இந்த படத்தை சித்ரா லக்ஷ்மணன் தயாரித்திருந்தார். இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். இந்த படத்தில் இடம் பெற்ற பொத்தி வச்ச மல்லிகை மொட்டு என்ற பாடலை வைரமுத்து எழுதியிருந்தார். இந்த பாடல் இன்றும் ரசிகர்கள் மத்தியில் ரசிக்கப்பட்டு தான் வருகிறது. அது மட்டும் இல்லாமல் இந்த பாடலை கூட மீம்ஸ் மெட்டீரியலாக பயன்படுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் இந்த படம் வெளியாகி இன்றுடன் 40 ஆண்டுகள் நிறைவடைந்து இருக்கிறது.

வைரமுத்து டீவ்ட்டர்:

இந்நிலையில் இது குறித்து வைரமுத்து தன் டீவ்ட்டர் பக்கத்தில் பதிவு ஒன்று போட்டு இருக்கிறார். அதில் அவர், இன்றுடன் 40 ஆண்டுகள் ஆகிறது. ஆத்துக்குள்ள நேத்து ஒன்ன நெனச்சேன்…வெக்கநெறம் போக மஞ்சக் குளிச்சேன்” என்ற வரியின் பொருள் புரியாமல் இன்னும் புகார் வருகிறது. என் வெட்கத்தின் சிவப்பு நிறம் பார்த்து அது ஆசையின் அழைப்பென்று கருதி என் முரட்டு மாமன் திருட்டுவேலை செய்துவிடக்கூடாது. அதனால் மஞ்சள் பூசி என் வெட்கத்தை மறைக்கிறேன் என்பது விளக்கம். இந்த நாற்பது ஆண்டுகளில் காதலின் விழுமியம் மாறியிருக்கிறது. வெட்கப்பட ஆளுமில்லை. மஞ்சளுக்கும் வேலையில்லை என்று கூறி இருக்கிறார்.

Advertisement