பாடல் சொல்லிக்கொடுத்துகொண்டு இருக்கும் போதே பாடகியின் சிரிப்பை வர்ணித்த வைரமுத்து – நெட்டிசன்களின் கமெண்ட்ஸ்.

0
1940
- Advertisement -

பாடலை சொல்லிக்கொடுத்து இருக்கும் போதே பாடகியின் சிரிப்பை குறித்து வர்ணித்த வைரமுத்துவின் வீடியோ தற்போது இணையத்தில் விவாதப்பொருளாக மாறி இருக்கிறது. தமிழ் சினிமா உலகில் புகழ்பெற்ற திரைப்பட பாடலாசிரியராக திகழ்பவர் கவிஞர் வைரமுத்து. நிழல்கள் எனும் திரைப்படத்தில் பொன்மாலைப்பொழுது என்ற பாடலின் மூலம் தான் இவர் சினிமா பாடலின் அறிமுகமாகி இருந்தார். அதனைத் தொடர்ந்து இவர் பல படங்களில் பாடல்களை எழுதி இருக்கிறார். மேலும், இவர் இதுவரை 7000 பாடல்களுக்கு மேல் எழுதி இருக்கிறார்.

-விளம்பரம்-

இப்படி புகழின் உச்சத்தில் இருந்த கவிஞர் வைரமுத்து மீது பின்னணி பாடகி சின்மயி பாலியல் குற்றம் சாட்டி இருந்தது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இதைத்தொடர்ந்து பல பெண்களுக்கு கவிஞர் வைரமுத்து மீது செக்ஸ் புகார்களை அளித்து இருந்தார்கள். பிறகு வைரமுத்து குறித்து பல விமர்சனங்களை சின்மயி எழுப்பி இருந்தார். இருந்தாலும், பலர் வைரமுத்துக்கு ஆதரவாக குரல் கொடுத்து இருந்தார்கள். ஆனால், பாடகி சின்மயி கூறும் குற்றச்சாட்டில் உண்மை இருக்கிறதா? என்று சிலர் சந்தேகித்தும் வருகின்றனர்.

- Advertisement -

வைரமுத்து மீது பாலியல் புகார்:

அதுமட்டும் இல்லாமல் கவிஞர் வைரமுத்து எது செய்தாலும் அவரை குறித்து சின்மயி விமர்சித்துப் பேசி வருகிறார். அதோடு வைரமுத்து மீது பல பெண்கள் பாலியல் புகார் அளித்தும், அவர் மீது எந்தவித நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்கு காரணம். இவர் மு. க. ஸ்டாலினுக்கு நெருக்கமானவராக இருக்கிறார் என்று கூறப்படுகிறது. ஆனால், இதை எல்லாம் வைரமுத்து கண்டு கொள்ளாமல் இருக்கிறார். இப்படி ஒரு நிலையில் நேற்று கவிஞர் வைரமுத்து அவர்கள் தன்னுடைய 70 வது பிறந்தநாளை கொண்டாடியிருந்தார்.

வைரமுத்து பிறந்தநாள்:

இவருடைய பிறந்தநாளுக்கு ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை என பலருமே வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள். குறிப்பாக, தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் அவர்கள் வைரமுத்துவின் வீட்டுக்கே சென்று, அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார். அது மட்டும் இல்லாமல் வைரமுத்துடன் எடுத்து புகைப் படத்தையும் சோசியல் மீடியாவில் பகிர்ந்து இருந்தார். இந்த புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலானதை தொடர்ந்து இதை பார்த்த சின்மயி கோபம் தாங்காமல் வைரமுத்து குறித்து வழக்கம் போல் விமர்சித்து இருந்தார்.

-விளம்பரம்-

பாடகி சிரிப்பை வர்ணித்த வைரமுத்து :

சின்மயின் இந்த பதிவிற்கு பல விதமான விமர்சனங்கள் எழுந்தது. மேலும், ஒரு சிலர் சின்மயின் இந்த பதிவிற்கு கீழ் வைரமுத்து குறித்தும் பதிவிட்டு வந்தனர். அந்த வகையில் பாடகி ஒருவருக்கு பாடல் சொல்லிக்கொடுக்கும் போது வைரமுத்து அந்த பாடகியின் சிரிப்பு அழகாக இருக்கிறது என்று வர்ணித்து இருக்கிறார். இந்த வீடியோ நெட்டிசன்கள் பலரும் பகிர்ந்து பல விதமான கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.

இதுஒருபுறம் இருக்க சின்மயியை தொடர்ந்து பாடகி வினைதாவும் வைரமுத்து மீது பாலியல் புகாரை அளித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர் ‘சின்மயி வைரமுத்துக்கு எதிராக பேசினார். நான் அதை ஆதரித்தேன். ஏனெனில், அவர் உண்மையை பேசினார். அவருக்கு நடந்ததை போல் எனக்கும் நடந்தது. அதுவும் வைரமுத்துவால் தான் நடந்தது. அவர் நல்ல மனிதரே இல்லை. அவர் என்னை பாட அழைத்தார். அதோடு ஒரு இடத்தை சொல்லி அங்கு தனியாக வருமாறு என்னை அழைத்தார்.

வைரமுத்து மீது மீண்டும் புகார்:

அவர் எப்போதும் முகத்தை பார்த்து பேசவே மாட்டார். அந்த அளவுக்கு கேவலமாக நடந்து கொள்வார். வைரமுத்து இதுபோல நிறைய பெண்களிடம் தவறாக நடந்து இருக்கிறார். அது எனக்கும் தெரியும். எப்போ அவரைப் பார்த்தாலும் வந்துட்டாண்டா என்று தான் தோன்றும் என்று கூறி இருக்கிறார். அது மட்டும் இல்லாமல் கடந்த மாதம் தான் பாடகி புவனா சேஷன் என்பவரும் வைரமுத்து மீது புகார் அளித்திருந்தார். இப்படி வைரமுத்து மீது பாடகிகள் பலர் புகார் அளித்திருக்கும் சம்பவம் தற்போது சோசியல் மீடியாவில் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

Advertisement