‘பார்த்து விட்டு, கடந்து போய் விட முடியவில்லை’- சாலை பொத்தல்களை மம்பட்டி எடுத்து சரி செய்த வாணி ராணி சீரியல் நடிகர்.

0
592
arun
- Advertisement -

சீரியல் நடிகர் அருண் ராஜனின் சமூக அக்கறை வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதற்கு பலரும் லைக்ஸ்குகளைக் குவித்து வருகிறார்கள். பொதுவாகவே சின்னத்திரை சீரியல்கள் எல்லாம் வெள்ளித்திரை படங்களுக்கு இணையாக மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. அதிலும் கோரோனோ தொடங்கிய காலத்திலிருந்து மக்கள் அனைவரும் சின்னத்திரை பக்கம் சென்று சென்று கொண்டிருக்கிறார்கள். மேலும், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் சின்னத்திரை சீரியல்களை விரும்பிப் பார்த்து வருகிறார்கள்.

-விளம்பரம்-

இதனால் ஒவ்வொரு சேனலும் தங்களுடைய சேனலின் டிஆர்பி ரேட்டிங்காக புதுப்புது வித்தியாசமான கதைக்களத்துடன் தொடர்களையும் நிகழ்ச்சிகளையும் ஒளிபரப்பி வருகிறார்கள். அதுமட்டுமில்லாமல் தொடர்களின் மூலம் சின்னத்திரை நடிகர்கள் எல்லாம் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கி வருகிறார்கள். அந்த வகையில் சின்னத்திரை சீரியல்களின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாக இருப்பவர் அருண் ராஜன். இவர் மயிலாடுதுறையை சேர்ந்தவர். இவர் தன்னுடைய கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு மீடியாவுக்குள் நுழைந்தார்.

- Advertisement -

அருண் ராஜன் நடித்த சீரியல்கள் :

பின் 2010 ஆம் ஆண்டு சன் டிவியில் ஒளிபரப்பான இளவரசி என்ற தொடரின் மூலம் தான் இவர் தொலைக்காட்சி துறைக்கு நடிகராக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து இவர் அழகி, வாணி ராணி, சந்திரலேகா, கல்யாண பரிசு, பிரியசகி, சந்திரகுமாரி, பூவே உனக்காக போன்ற பல தொடர்களில் நடித்து இருக்கிறார். அதிலும் இவர் எட்டு வருடங்களாக சன் டிவியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று வரும் தொடர் சந்திரலேகா. இந்த தொடரில் சபரிநாதன் என்ற கதாபாத்திரத்தில் அருண் ராஜன் நடித்து வருகிறார். இந்த கதாபாத்திரத்தின் மூலம் இவருக்கு என்ற ஒரு தனி ரசிகர் கூட்டமே சேர்ந்திருக்கிறது.

அருண் ராஜன் சின்னத்திரை பயணம்:

மேலும், இவர் தொலைக்காட்சி நடிகர் மட்டுமில்லாமல் தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளரும் ஆவார். பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபலமான தொகுப்பாளர் என்ற விருதையும் அருண் வாங்கி இருக்கிறார். இது ஒரு பக்கம் இருக்க, இவர் எப்போதும் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருப்பார். தன்னுடைய புகைப்படங்கள், வீடியோக்கள் என அனைத்தையும் இவர் பதிவிட்டு வருவார். இவரை லட்சக்கணக்கான பேர் சோசியல் மீடியாவில் பாலோ செய்கிறார்கள். அது மட்டும் இல்லாமல் சமூக பிரச்சனைக்கு இவர் குரல் கொடுத்தும் வீடியோ பதிவு உள்ளார்.

-விளம்பரம்-

சமூக பிரச்சனைக்கு குரல் கொடுத்த அருண்:

சமீபத்தில் கூட சூர்யா நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற ஜெய்பீம் படத்திற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தார்கள். அதற்கு அருண் குரல் கொடுத்து வீடியோ போட்டிருந்தார். இப்படி இவர் நடிப்பது மட்டுமில்லாமல் பல சமூக பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்திருக்கிறார். அந்த வகையில் தற்போது இவர் செய்திருக்கும் செயல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அது என்னவென்றால், சாலையில் மேடு பள்ளமாக குண்டும் குழியுமாக ரோடு இருக்கிறது. அந்த வழியே பல வாகனங்கள், பொது மக்களும் நடந்து சென்று இருக்கிறார்கள். ஆனால், யாரும் அதை கண்டு கொள்ளவில்லை.

சமூக அக்கறை கொண்ட அருண்:

ஆனால், நடிகர் ராஜன் நமக்கென்ன என்று செல்லாமல் மம்பட்டி எடுத்து மேடு பள்ளமாக இருக்கும் சாலையை தன்னால் முடிந்த வரை சீர் செய்திருக்கிறார். இப்படி இவர் செய்திருக்கும் வீடியோ சோஷியல் மீடியாவில் பதிவிட்டு அவர் கூறியிருப்பது, இதை பார்த்து விட்டு கடந்து போக மனது வரவில்லை. இது நம்முடைய கடமை. நம்முடைய இடத்தை நாம் தான் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். இப்படி இவர் செய்திருக்கும் செயல் சோசியல் மீடியாவில் வைரலானது மட்டுமில்லாமல் இவருடைய சமூக அக்கறைக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

Advertisement