‘இந்த படத்துக்காக இத்தனை நாள் நடித்தேன், இன்னும் படத்தை பாக்கல’ – மகான் படத்தில் தன் காட்சி நீக்கப்பட்டது குறித்து முதன் முறையாக கூறிய வாணி போஜன்.

0
748
vanibhojan
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் விக்ரம். தற்போது விக்ரம் மற்றும் துருவ் நடிப்பில் வெளியாகி உள்ள படம் மகான். இந்த படத்தில் அப்பா-மகன் இருவருமே கதாநாயகர்களாக நடித்து இருக்கிறார்கள். இந்த படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் இவர்களுடன் வாணிபோஜன், பாபி சிம்ஹா, சிம்ரன், தீபக் பரமேஷ் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். மேலும், இந்த படம் ஆக்ஷன் நிறைந்த கேங்ஸ்டர் கதையம்சம் கொண்ட படமாக உருவாகி உள்ளது. படத்தில் சந்தோஷ் நாராயணன் இசை அமைப்பாளராக பணிபுரிந்துள்ளார்.மூன்று மொழிகளில் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகி இருக்கும் மகான் படம் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

-விளம்பரம்-

மதுவினால் ஏற்படும் பிரச்சினைகளையும் விளைவுகளையும் அழகாக காண்பித்திருக்கிறார்கள். நீண்ட இடைவெளிக்குப்பிறகு கார்த்திக் சுப்புராஜின் மகான் படம் ரசிக்க வைத்திருக்கிறது. மேலும், இந்த படத்தில் வாணி போஜன் நடித்து இருந்தாலும் அவரது ஒரு காட்சிகள் கூட படத்தில் இடம்பெறவில்லை. அதற்கு பதிலாக படத்தின் ஆரம்பத்தில் வாணி போஜன் பெயரை குறிப்பிட்டு நன்றி மட்டும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

- Advertisement -

வாணி போஜன் அளித்த விளக்கம் :

இந்த நிலையில் இந்த படத்தில் தன்னுடைய காட்சிகள் நீக்கப்பட்டது குறித்து வாணி போஜனே கூறி இருக்கிறார். சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற வாணி போஜனிடம் இதுகுறித்து கேட்கையில் ‘மகான் படத்தின் முதல் பாதி ஏற்கனவே விக்ரம் சாருடன் எடுத்து விட்டோம் ஆனால் சோனா கட்டுப்பாடுகளால் இரண்டாம் பாதி எங்களால் சூட்டிங் செய்ய முடியவில்லை மேலும் அந்த படத்தில் என்னுடைய கதாபாத்திரம் முதல் பாதிக்கும் இரண்டாம் பாதிக்கும் ஒரு தொடர்பில்லாமல் இருந்தது. அதனால் கார்த்திக் சார் என்னிடம் இதுகுறித்து சொன்னார்.

This image has an empty alt attribute; its file name is okh.jpg

படத்திற்காக 9 மாதங்கள் வேலை செய்தேன் :

நான் எடிட் செய்ய வேண்டுமென்றால் செய்து கொள்ளுங்கள் எனக்கு எந்த பிரச்சினையும் கிடையாது என்னை பொறுத்தவரை அனுபவம் தான் எனக்கு முக்கியம். இந்த படத்தில் நடித்தது எனக்கு மிகப்பெரிய ஒரு அனுபவம். யூடியூபில் வருவது போல சோகத்தில் ஆழ்ந்திருக்கும் வாணி போஜன், ஏமாற்றிவிட்டார்கள் படக்குழு என்று எல்லாம் சத்தியமாக கிடையாது. கார்த்திக் சார் எனக்கு தனிப்பட்ட முறையில் கால் செய்து, வாணி இப்படி இருக்கிறது என்ன பண்ணட்டும் என்று என்னிடமும் கேட்டார். இந்த படத்திற்காக நான் எட்டு ஒன்பது நாள் வேலை செய்து இருக்கிறேன்.

-விளம்பரம்-

இது ஒன்னு மட்டும் தான் வருத்தம் :

விக்ரம் சார் மாதிரி ஒரு ஸ்டாருடன் வேலை செய்தது எனக்கு மிகப்பெரிய சந்தோஷம் அதேபோல பலரும் இந்த படத்தில் நான் ஏன் வரவில்லை என்று வருத்தப்பட்டார்கள் நீங்கள் சொல்வது போல எனக்கு இருக்கும் ஒரு சிறிய ரசிகர் கூட்டமும் எங்கே நீங்கள் படத்தில் காணவில்லை என்று சொன்னது எனக்கு சந்தோஷம்தான் ஏனென்றால் இந்த படம் வெளியாகும் போது நம்மை யாரும் கண்டுகொள்ளப் போவதில்லை என்றுதான் நினைத்தேன் நான் இந்த படத்தில் நடிப்பது சில பேருக்கு தெரியலாம் சில பேருக்கு தெரிந்திருக்காது. ஆனால் படம் வெளியான பின்பு அந்த மீமை எல்லாம் எனக்கு அனுப்பினார்கள். அவர்களாக என்னை பார்க்க முடியவில்லை என்பது மட்டும் தான் எனக்கு வருத்தம்’ என்று கூறியுள்ளார்.

விக்ரமுடன் எடுக்கப்பட்ட அந்த காட்சி :

மேலும், இந்த படத்தில் விக்ரமுடன் எடுத்த புகைப்படம் பற்றி சொன்ன வாணி போஜன், படப்பிடிப்பு துவங்கிய இரண்டு நாட்களிலேயே அந்த காட்சிகளை எடுத்து விட்டோம் அதை அப்போதே சோஷியல் மீடியாவில் அனுப்பிவிட்டோம் மேலும் படக்குழுவின் Welcome Onboardல் கூட நான் இருந்தேன். ஏற்கனவே சொன்னது போல தான், ரசிகர்களின் ஏமாற்றம் தான் கொஞ்சம் வருத்தமாக இருந்தது மற்றபடி எதுவும் இல்லை என்று கூறியுள்ளார். மேலும், இந்த படத்தின் கதை தெரியும் ஆனால், படத்தை இன்னும் பார்க்கவில்லை என்றும் கூறியுள்ளார்.

Advertisement