நடிகர் சரத்குமாரன் மகளும் நடிகையுமான வரலக்ஷ்மி சரத்குமார்,நடிகர் விஷாலை காதலித்து வருவதாக நீண்ட காலமாக கிசுகிசுக்கபட்டது. இருவரும் இணைந்து சண்டக்கோழி 2, மதகஜ ராஜா போன்ற படங்களில் ஒன்றாக நடித்தும் இருந்தனர்.
ஆனால், இருவரும் தங்களது காதல் குறித்து எதுவும் வெளியில் சொலாத போதும் இருவரும் காதலித்து வருவதாக பேச்சுக்கள் தொடர்ந்து கொண்டே வந்தது. இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ள போவதாகவும் பேச்சுகளும் தீயாக பரவி வந்தது.
இவை அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் நிலையில் தற்போது விஷால் தெலுங்கு நடிகை அனிஷா அல்லா என்பவரை விரைவில் திருமணம் செய்துகொள்ள போவதாக அறிவித்துவிட்டார். இந்நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வரலக்ஷ்மியிடன் விஷால் குறித்து கேட்ட கேள்விக்கு பதிலித்துள்ளார் வரலக்ஷ்மி.
அந்த பேட்டியில் பங்கேற்ற வரலக்ஷ்மியிடன் kill, Kiss, Marry என்ற மூன்று கேள்விகள் கொடுக்கப்பட்டு. பின்னர் அதற்கு விஷால், சிம்பு, Anyone என்று பதில்களும் கொடுப்பட்டது. அந்த கேள்விக்கு சற்று யோசித்த வரலக்ஷ்மி விஷாலுக்கு கில், எனவும் கிஸ் சிம்புவுக்கும், மேரி Anyone என்று பதில் கூறியுள்ளார்.