வாரிசு வெளியாகி 1வருஷம் 3மாசம் ஆச்சி, அதை எடுத்த வம்சியின் பரிதாப நிலை

0
504
- Advertisement -

விஜயின் வாரிசு படத்தால் வாய்ப்பு இல்லாமல் இயக்குனர் வம்சி திண்டாடும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். இவர் நடிப்பில் வெளியாகும் அனைத்து படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான படம் வாரிசு. இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கி இருந்தார்.

-விளம்பரம்-

இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், யோகி பாபு, பிரகாஷ் ராஜ், நாசர், பிரபு, ஜெயசுதா, ஸ்ரீகாந்த், சங்கீதா போன்ற பலர் நடித்து இருந்தார்கள். தமன் இந்த படத்திற்கு இசை அமைத்து இருந்தார். இந்த படம் குடும்ப பின்னணியை கொண்ட கதை. படத்தில் மிகவும் பெரிய தொழிலதிபராக சரத்குமார் இருக்கிறார். அவருக்கு ஸ்ரீகாந்த் ,ஷாம், விஜய் என்று மூன்று மகன்கள் இருக்கிறார்கள். இதில் ஸ்ரீகாந்த் மற்றும் ஷியாம் இருவருமே தந்தை பேச்சை மீறாமல் நடக்கும் பொம்மைகள் போல இருக்கிறார்கள். அதில் விஜய் மட்டும் தன்னுடைய கனவு, லட்சியம் என்று தனக்கான அடையாளத்தை தானே உருவாக்க ஆசைப்படுகிறார்.

- Advertisement -

வாரிசு படம்:

தன்னுடைய நிர்வாகப் பொறுப்பை சரத்குமார் விஜயிடம் ஒப்படைக்க அதை அவர் ஏற்க மறுப்பதால், அவரை வீட்டை விட்டு வெளியேற சொல்லுகிறார். பின்னர் ஒரு கட்டத்தில் சொந்த குடும்பத்தில் செய்த சூழ்ச்சிகளால் தொழிலில் பல சறுக்களை சந்திக்கிறார் சரத்குமார். சரத்குமாரின் தொழில் ஏன் நஷ்டம் அடைந்தது ? குடும்பத்தினர் செய்த சதி என்ன ? அதனால் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினைகள் என்ன? விஜய் மீண்டும் மீட்டெடுத்து வந்தாரா? என்பது தான் மீதி கதை. இந்த படம் ரசிகர்களுக்கு பொங்கல் விருந்தாக வெளியாகி கலவையான விமர்சனங்கள் கிடைத்திருந்ததாக கூறப்படுகிறது.

படம் குறித்த தகவல்:

இருந்தாலும், வாரிசு படம் உலக அளவில் 300 கோடிக்கும் மேல் அதிக வசூல் செய்து இருந்ததாக அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகி இருந்தது. ஆனால், கேரள விநியோகஸ்தர் வாரிசு படத்தால் தனக்கு கோடிக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டிருப்பதாக கூறி இருந்தார். அவரை அடுத்து வசூல் ரீதியாக வாரிசு படம் பல இடங்களில் நஷ்டத்தை ஏற்படுத்தியிருந்தது என்று தகவல் வெளியாகி இருந்தது. இந்த நிலையில் விஜயின் வாரிசு பட இயக்குனருக்கு ஏற்பட்டிருக்கும் நிலைமை தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, இயக்குனர் வம்சி தெலுங்கில் மிக பிரபலமான இயக்குனர் ஆவார்.

-விளம்பரம்-

வம்சியின் நிலைமை:

இவர் தெலுங்கில் பல முன்னணி நடிகர்களை வைத்து படம் எடுத்து இருக்கிறார். கடைசியாக இவர் விஜயின் வாரிசு படத்தை தான் இயக்கி இருந்தார். வாரிசுக்கு பிறகு வம்சி அவர்கள் எந்த ஒரு படத்திலும் கமிட்டாகவில்லை. காரணம், வாரிசு படம் தெலுங்கு ரசிகர்களை பெரிதாக கவரவில்லை. இதனால் தான் இவருக்கு பெரிதாக பட வாய்ப்புகள் கொடுக்க முன்னணி தயாரிப்புகள் தயங்குவதாக கூறப்படுகிறது. அது மட்டும் இல்லாமல் வம்சி அவர்கள் நிறைய நடிகர்களுக்கு கதை கூறியிருக்கிறார். இருந்தாலும் எந்த ஒரு நடிகருமே இதுவரை ஓகே சொல்லாமல் இருக்கிறார்கள்.

சித்ரா லட்சுமணன் பேட்டி:

இந்த தகவல் வெளியானதை தொடர்ந்து விஜய் வைத்து படம் எடுத்தவருக்கு இந்த நிலைமையா? என்ற நெட்டிசன்கள் விமர்சித்து ட்ரோல் செய்து இருக்கிறார்கள். உண்மையாலுமே ஒரு வருடத்திற்கு மேலாகியும் இயக்குனர் வம்சி படம் இயக்காமல் இருப்பதற்கு காரணம் என்னவென்று தெரியவில்லை. இந்நிலையில் இது குறித்து சமீபத்தில் அளித்த பேட்டியில் நடிகரும், இயக்குனருமான சித்ரா லட்சுமணன் , விஜய்யின் வாரிசு படத்தின் தோல்விதான் இயக்குனர் வம்சியுடைய தற்போதைய நிலைக்கு காரணம். அவரின் கதையை கேட்டு யாருமே நடிக்கவில்லை. அதோடு தயாரிப்பாளர்களும் இவருடைய படத்தை இயக்க தயராக இல்லை என்று கூறியிருக்கிறார்.

Advertisement