ஷங்கர் இயக்கும் RC15 படத்தில் மோசடி – எச்சரித்து விஜய்யின் ‘வாரிசு’ டீம் வெளியிட்ட அறிக்கை.

0
491
- Advertisement -

ராம்சரண் – ஷங்கர் கூட்டணியில் உருவாகும் படம் தொடர்பான புதிய சர்ச்சை தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் ஷங்கர். இவரின் அனைத்து படங்களுமே பிரம்மாண்டத்தின் உச்சமாக இருக்கும். அதனால் தான் இவரை பிரம்மாண்ட இயக்குநர் என்று அழைக்கிறார்கள். இவரின்தேவையான நல்ல கருத்து, ஹீரோவுக்கான மாஸ், இதுவரை யாரும் பாத்திராத லொகேஷன்களில் ஷூட்டிங் என அந்த பிரம்மாண்டத்திற்குள் இவை அனைத்தும் அடங்கும்.

-விளம்பரம்-

இறுதியாக இவர் 2018 ஆம் ஆண்டு 2.0 படத்தை இயக்கி இருந்தார். இதை தொடர்ந்து இந்தியன் 2 படத்தை இயக்கி இருந்தார். ஆனால், இந்த படம் பல சூழ்நிலை காரணங்களால் தள்ளி கொண்டே செல்கிறது. சமீபத்தில் ஒரு பேட்டியில் கமலின் இந்தியன் 2 படம் கூடிய விரைவில் தொடங்கப்படும் என்று சங்கர் அறிவித்து இருந்தார். இது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி இருந்தது. தற்போது சங்கர் அவர்கள் தெலுங்கில் ராம் சரணை வைத்து படம் இயக்கி வருகிறார்.

- Advertisement -

ராம் சரண்15 படம்:

இதற்கு ‘ராம் சரண்15’ என பெயரிடப்பட்டு இருக்கிறது. இப்படத்தை பெரும் பொருட்செலவில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தயாரிக்கிறார். இப்படத்திற்கான கதையை கார்த்திக் சுப்புராஜ் எழுதுகிறார். மேலும், படத்தில் ராம் சரண் இரட்டை வேடங்களில் நடித்து வருவதாக கூறப்படுகிறது. பான் இந்திய படமாக இந்த படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டிருக்கின்றனர். இந்த படத்திற்கு தமன் இசையமைத்து வருகிறார்.

படம் குறித்த தகவல்:

தற்போது இந்த படத்தின் வேலைகள் மும்முரமாக சென்று கொண்டு இருக்கிறது. மேலும், இந்த படத்தில் .அஞ்சலி மற்றும் கியாரா அத்வானி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். படத்தில் விவசாயி மற்றும் ஐஏஎஸ் அதிகாரி என இரண்டு கதாபாத்திரங்களில் ராம்சரண் நடித்து வருகிறார். இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி,மலையாளம் என பல மொழிகளில் ரிலீஸ் செய்ய இருக்கிறார்கள். இந்நிலையில் இந்த படம் தொடர்பான சர்ச்சை ஒன்று கிளம்பியுள்ளது.

-விளம்பரம்-

சங்கர் பட சர்ச்சை:

அதாவது, ராம் சரண் நடிக்கும் 15 வது படமான இதில் நடிக்க ஆட்கள் தேர்வு நடப்பதாகவும், அதற்காக தங்களை தொடர்பு கொள்ளுங்கள் எனக்கூறி சமூக வலைத்தளங்களில் சில பதிவுகள் வெளியாகி இருந்தது. இந்த நிலையில் இந்த பதிவுகள் உண்மையல்ல என தயாரிப்பு நிறுவனம் தற்போது விளக்கம் அளித்து பதிவு ஒன்று போட்டு இருக்கிறது. அதில், இது முழுக்க முழுக்க போலியான தகவல். தங்களது நிறுவனம் அதுபோன்ற ஆள்தேர்வு எதிலும் ஈடுபடவில்லை என்றும் அறிக்கை வெளியிட்டது.

வாரிசு படம்:

மேலும், இந்த படத்தை தயாரித்து வரும் ஸ்ரீவெங்கடேஸ்வரா கிரியேஷன் நிறுவனம் தான் விஜய் நடித்து வரும் வாரிசு படத்தையும் தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இயக்குனர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் இந்த படம் உருவாகி வருகிறது. இந்த படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க இருக்கிறார். தற்போது படத்தின் பணிகள் மும்முரமாக நடந்து கொண்டு இருக்கிறது.

Advertisement