என் வாழ்க்கையில் நடந்தது தான் வெயில்ல அந்த வந்த அந்த சீன் – வசந்தபாலனின் எமோஷனல் பேட்டி.

0
493
vasanthabalan
- Advertisement -

என் வாழ்க்கையில் நடந்தது தான் வெயில் படத்தில் வைத்தேன் என்று எமோஷனலாக இயக்குனர் வசந்த பாலன் அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பிரபலமான இயக்குனராக திகழ்ந்தவர் வசந்தபாலன். இவர் முதலில் இயக்குனர் சங்கரிடம் உதவி இயக்குனராக பணி புரிந்திருந்தார். இவர் 2003 ஆம் ஆண்டு ஆல்பம் என்ற படத்தை இயக்கியிருந்தார்.

-விளம்பரம்-

அதன் பின் இவர் வெயில் என்ற படத்தை இயக்கி தமிழ் சினிமா உலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.
இந்த படத்திற்காக பல விருதுகள் கிடைத்திருந்தது. இதனை தொடர்ந்து இவர் அங்காடி தெரு, அரவான், காவியத்தலைவன் போன்ற படங்களை இயக்கி இருக்கிறார். மேலும், இவர் திரைப்பட இயக்குனர் மட்டும் இல்லாமல் திரைக்கதை எழுத்தாளரும் ஆவார்.

- Advertisement -

வசந்த பாலன் அளித்த பேட்டி:

இந்த நிலையில் வசந்த பாலன் அவர்கள் வெயில் படம் குறித்து அளித்திருந்த பேட்டி வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதில் அவர், ஒரு காட்சியில் பரத்திற்கு அவருடைய அம்மா என்னை தேய்த்து தலைக்கு தண்ணீர் ஊற்றுவார். இதை பசுபதி ஏக்கத்துடன் பார்ப்பார். தனக்கும் இந்த மாதிரி குளிக்க வைக்க மாட்டார்களா? என்று ஏக்கத்துடன் பார்ப்பார். ஆனால், அவர் அம்மா செய்ய மாட்டார்.

இயக்குனர் வாழ்வில் நடந்தது:

உடனே பசுபதி மன வேதனையுடன் அவருடைய சிறு வயது காதலி வீட்டிற்கு செல்வார். அவர் விவாகரத்து பெற்று தன் குழந்தையுடன் தனியாக வசித்து வருவார். அவரிடம் ஒரு குழந்தை போல தன்னுடைய ஏக்கத்தை பசுபதி சொல்லுவார். இதனால் அந்த பெண் மனம் உடைந்து அவருக்கு குளிக்க வைப்பார். இந்த காட்சி வேண்டாம் என்று சொன்னார்கள். ஆனால், இது என் வாழ்க்கையில் உண்மையாலுமே நடந்தது. அதைத்தான் நான் படத்திலும் வைத்தேன்.

-விளம்பரம்-

படம் குறித்து சொன்னது:

அதுமட்டுமில்லாமல் அப்போது அந்த காட்சியின் போது கத்தி போல் பாயும் ஒரு நான்கு வரி பாடல் இருந்தால் நன்றாக இருக்கும் என்று முத்துக்குமாரிடம் கேட்டேன். அவரும் இறைவனே என்ற பாடல் வரி எழுதிக்க சொன்னார். அதை தான் படத்தில் வைத்தேன் என்று கூறியிருந்தார். தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது. இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் 2006 ஆம் ஆண்டு வெளிவந்திருந்த படம் வெயில்.

வெயில் படம்:

இந்த படத்தில் பரத், பசுபதி, பாவனா, ஸ்ரேயா ரெட்டி, மாளவிகா உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். ஜிவி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார். இயக்குனர் சங்கரின் எஸ் புரொடக்சன் நிறுவனம் இந்த படத்தை தயாரித்திருந்தது. இந்த படத்திற்கு நா முத்துக்குமார் பாடல்களை எழுதியிருந்தார். படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் விமர்சனத்தையும் பெற்றிருந்தது.

Advertisement