விண்ணை தாண்டி வருவாயா படத்திலே இடம்பெற்றுள்ள வெந்து தணிந்தது காடு படத்தின் கதை – வைரலாகும் வீடோ இதோ.

0
805
vtv
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகராக கலக்கி கொண்டு இருப்பவர் சிம்பு. இன்று சிம்புவின் வெந்து தணிந்தது காடு படம் வெளியாகியிருக்கிறது. இந்த படத்தை இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கி இருக்கிறார். இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருக்கிறார். படத்தில் சிம்புவுடன், ராதிகா, சித்தி இத்னானி உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறர்கள். இந்த படத்தை ஐசரி கணேஷ் தனது வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் மூலம் தயாரித்து இருக்கிறது. பல எதிர்பார்ப்புகளுடன் வெளிவந்த வெந்து தணிந்தது காடு படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி அடைந்ததா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

-விளம்பரம்-

கதைக்களம்:

படத்தில் சிம்பு அவர்கள் தன்னுடைய அம்மா, தங்கையுடன் வாழ்ந்து வருகிறார். இவர் வயகாட்டில் வேலை செய்து தன்னுடைய குடும்பத்தை பாதுகாத்து வருகிறார். அப்போது ஒரு நாள் வயக்காட்டில் வேலை செய்யும் போது சிம்புவுக்கு விபத்து ஏற்படுகிறது. இதை நினைத்து அவருடைய தாய் பயப்படுகிறார். பின் உறவினர் மூலம் சிம்புவை வேறு ஒரு வேலைக்கு அனுப்ப முயற்சி செய்கிறார். இந்த சூழ்நிலையில் தான் உறவினரும் தற்கொலை செய்து கொள்கிறார்.

- Advertisement -

படத்தின் கதை:

பின் சிம்பு மும்பைக்கு செல்கிறார். அங்கு பரோட்டா கடையில் வேலை செய்கிறார். எதிர்பாராத விதமாக கேங்ஸ்டர் கும்பலில் சிம்பு சிக்கி கொள்கிறார். இறுதியில் சிம்புவின் வாழ்க்கை என்ன ஆனது? சிம்புவின் குடும்பத்தின் நிலைமை என்ன? சொந்த ஊருக்கே சிம்பு திரும்பினாரா? என்பது தான் படத்தின் மீதி. காதல், கேங்ஸ்டர் கதையை மையமாக வைத்து இந்த படம் உருவாகி இருக்கிறது. படத்தில் ஏ ஆர் ரகுமான் இசைகளும் சூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது.

படத்தில் சிம்பு:

படத்தில் சிம்பு அவர்கள் முத்து எனும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். எந்த ஒரு ஆர்ப்பாட்டம் இல்லாத தன்னுடைய நடிப்பை சிம்பு வெளிப்படுத்தி இருக்கிறார். முதல் பாதியில் வெகுளித்தனமாகவும், இரண்டாம் பாதியில் மாசான நடிப்பையும் சிம்பு கொடுத்திருக்கிறார். காதல் காட்சிகளில் வழக்கம் போல் சிம்பு பார்வையாளர்களை ரசிக்க வைத்திருக்கிறார் என்றே சொல்லலாம். கதாநாயகியாக சித்தி இத்தானி நடித்திருக்கிறார்.

-விளம்பரம்-

படம் குறித்த தகவல்:

சிம்புவின் அம்மாவாக ராதிகா நடித்திருக்கிறார். வழக்கம்போல் தன்னுடைய அனுபவ நடிப்பை கொடுத்திருக்கிறார். இவர்களுடன் படத்தில் ஜாபரின் நடிப்பு சிறப்பாக வந்திருக்கிறது. பல இடங்களில் வசனங்களும், காட்சிகளும் கிளாப்ஸை வாங்கி இருக்கிறது. அது மட்டும் இல்லாமல் பல காட்சிகளை சிங்கிள் சாட்டில் இயக்குனர் எடுத்திருக்கிறார். பின்னணி இசையும், ஒளிப்பதிவும் கூடுதல் சிறப்பு.

விண்ணைத்தாண்டி வருவாயா காட்சி :

மீண்டும் சிம்பு களம் இறங்கி விட்டார் என்றே சொல்லலாம். நீண்ட எதிர்பார்ப்புகளுடன் இருந்த ரசிகர்களுக்கு சிம்புவின் வெந்து தணிந்தது காடு படம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.இதற்கிடையே தற்போது விண்ணை தாண்டி வருவாயா படத்தின் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. ஆம், அதில் சிம்பு அஜித்திற்காக ஒரு கேங்ஸ்டர் கதை குறித்து பேசியிருப்பார்.அதன்படி சிம்பு அதில் “அவன் எப்படி இதற்குள் வந்தார், அதுக்கு அப்பறம் அவன் எப்படி டான்னாகி, கடைசியாக அவன் பில்லா ஆகிறான்” என்பது தான் கதை என பேசியிருப்பார்.இது அப்படியே வெந்து தணிந்தது காடு படத்துடன் ஒத்துப்போவதால் இதனை இணையத்தில் பரப்பி வருகின்றனர் ரசிகர்கள்.

Advertisement