சீனாவில் தொடங்கிய இந்த கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் உள்ள பல நாடுகளில் பரவி கொத்து கொத்தாக மக்களை கொன்று வருகிறது. தற்போது இந்தியாவில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 31000 தாண்டியது மற்றும் பலியானவர்களின் எண்ணிக்கை 1007 ஆக உயர்ந்து உள்ளது. இதனால் ஊரடங்கு உத்தரவை மே 3 ஆம் தேதி வரை நீட்டித்து உள்ளார்கள். இன்னும் எத்தனை நாள் இந்த பிரச்சனை நீட்டிக்குமோ? என்ற கவலையில் மக்கள் உள்ளார்கள். ஊரடங்கு உத்தரவால் அனைத்து விதமான படப்பிடிப்புகளும், திரையரங்கள், பொது இடங்கள் என அனைத்தும் மூடப்பட்டு உள்ளது.
ஊரடங்கு காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டு உள்ளதால் புதுப்படங்கள் ரிலீஸ் ஆவது தள்ளிப்போய் கொண்டே உள்ளது. மேலும், இந்த கொரோனா பிரச்சனை முடிவுக்கு வந்தாலும் தியேட்டர்கள் திறப்பதுகொஞ்சம் கஷ்டம் தான். தியேட்டர்கள் எல்லாம் செயல்பட இன்னும் சில மாதங்கள் ஆகும் என கூறப்படுகிறது.
இதனால் படத்தின் தயாரிப்பாளர்கள் எல்லாம் சிறு பட்ஜெட் படங்களை நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியிட முடிவு செய்துள்ளனர். அந்த வகையில் தற்போது நடிகர் சூர்யா தயாரிப்பில் ஜோதிகா நடிப்பில் உருவாகி உள்ள பொன்மகள் வந்தாள் படம் கூடிய விரைவில் ஓடிடி தளத்தில் ரிலீசாக உள்ளது என்று கூறப்படுகிறது.
இந்த படத்தை ஜே.ஜே.பிரடரிக் என்ற புதுமுக இயக்குனர் இயக்கி உள்ளார். இந்த படத்தில் பாக்யராஜ், பார்த்திபன், பிரதாப் போத்தன், தியாகராஜன், பாண்டியராஜன் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும், பொன்மகள் வந்தாள் படம் ஓடிடி தளத்தில் ரிலீசானால் இது தான் லாக் டவுனில் வெளியான முதல் தமிழ் படம்.
இந்த நிலையில் தற்போது பொன்மகள் வந்தாள் படத்திற்கு முன்பே வேறு ஒரு படம் ஓடிடி தளத்தில் ரிலீசாகி உள்ளது. அது இயக்குனர் வெங்கட் பிரபு தனது பிளாக் டிக்கெட் கம்பெனி நிறுவனம் மூலம் தயாரித்துள்ள ‘ஆர்.கே.நகர்’ படம் தான். இந்த படத்தை நேரடியாக நெட்பிளிக்ஸ் எனும் டிஜிட்டல் தளத்தில் வெளியிட்டுள்ளனர்.
இந்த படத்தை சரவண ராஜன் இயக்கி உள்ளார். இந்த படத்தில் வைபவ்,சனா அல்தாப், அஞ்சனா கீர்த்தி, சம்பத், இனிகோ பிரபாகரன், கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு பிரேம்ஜி அமரன் இசையமைத்துள்ளார். அரசியல் கலந்த காமெடி படமாக உருவாகி உள்ளது. இதே போல் பல படங்கள் ஓடிடி தளத்தில் ரிலீஸ் செய்ய முடிவு எடுத்து உள்ளர்கள் தயாரிப்பாளர்கள்.