திருமணம் ஆன மூன்று ஆண்டுகளில் மர்மமான முறையில் இறந்த கமல் பட நடிகை – இறுதியில் கண்டுபிடித்த போலீசார். என்ன ஒரு அதிர்ச்சியான காரணம்.

0
1193
Bidushi-Dash-Barde
- Advertisement -

தமிழில் கடந்த 2006 ஆம் ஆண்டு கெளதம் மேனன் இயக்கத்தில் வெளியான ‘வேட்டையாடு விளையாடு’ திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்று இருந்தது. கமல் ஹீரோவாக நடித்த இந்த படத்தின் கமலினி முகர்ஜி, ஜோதிகா ஆகிய இருவர் நாயகிகளாக நடித்து இருந்தனர். அதே போல இந்த படத்தில் பிரகாஷ் ராஜும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். இந்த படத்தில் அவருடைய மகள் ராணியின் கொலை தான் படத்தின் ஆரம்பமாகவே காட்டப்படும். அதில் அவர் மிகவும் மர்மமான முறையில் கொள்ளப்பட்டு இருப்பார். படத்தில் மட்டுமல்ல நிஜயத்திலும் இவரது இறப்பு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.

-விளம்பரம்-

இவருடைய பெயர் Bidushi Dash Barde. 1989 ஆம் ஆண்டு ஒரிசாவில் பிறந்த இவர் சிறு வயது முதலே மாடலிங் மீது ஆர்வமுடையவராக இருந்து இருக்கிறார். பல்வேறு அழகி போட்டியில் பங்கேற்ற இவர் 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற மிஸ் சென்னை அழகி போட்டியில் கலந்துகொண்டு இரண்டாம் இடத்தையும் பிடித்தார். அதன் பின்னரே இவருக்கு கமலின் வேட்டையாடு விளையாடு படத்தில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்து இருந்தது.

- Advertisement -

மர்மமான முறையில் மரணம் :

இவர் கடந்த 2009 ஆம் ஆண்டு கேதர் என்பவரை திருமணம் செய்துகொண்டுள்ளார். திருமணம் ஆகி மூன்று ஆண்டுகள் கழித்து இவர்கள் மும்பையில் குடிபெயர்ந்து உள்ளார்கள். மேலும், இவர்களுக்கு குழந்தை எதுவும் இல்லை. இப்படி ஒரு நிலையில் கடந்த 2012 ஆம் ஆண்டு அக்டோபர் 22 ஆம் தேதி இரவு 9 மணி அளவில் நடிகை ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்து இருக்கிறார்.அலுவலகம் சென்று இருந்த அவரது கணவர் வீடு திரும்பிய போது தன்னுடைய மனைவி ரத்த வெள்ளத்தில் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து இருக்கிறார்.

குழப்பத்தில் இருந்த போலீசார் :

பின்னர் போலீசுக்கு தகவல் தெரிவிக்க நடிகையின் மரணம் கொலையா ? தற்கொலையா என்று தீவிர விசாரணை நடத்தி இருக்கின்றனர். பிதுஷியின் முகம் மற்றும் தலையில் அடிபட்டு இருந்ததால் இது முதலில் கொலை என்ற கோணத்திலேயே விசாரித்து இருக்கின்றனர்.அதே போல அக்கம் பக்கத்தினரிடன் விசாரிக்கையில் பிதுஷி இறந்த நேரத்தில் அவரது வீட்டில் இருந்து ஒருவர் வெளியில் சென்றார் என்று கூறி இருந்தார்கள்.

-விளம்பரம்-

கணவரிடம் விசாரணை :

இந்த வழக்கு இப்படியே சென்றுகொண்டு இருக்க பிதுஷாவின் கணவரிடம் விசாரிக்கப்பட்டது. அப்போது அவர் தங்களுக்குள் எந்த பிரச்சனையும் இல்லை. தன் மனைவிக்கு சக்கரை நோய் இருந்தது.அடிக்கடி இதனால் அவள் மயக்கம் போட்டு விழுந்துவிடுவாள். இதனால் அவர் மருந்துகளை எடுத்துவந்தார் என்றும் கூறி இருந்தார். அதே போல பிதுஷியின் தந்தையும் முன்னாள் விமானப்படை வீரருமான சாந்தனுவிடம் போலீஸ் விசாரித்தனர்.

பிதுஷி தந்தை வாக்குமூலம் :

அப்போது அவர், தன் மகளுக்கு 16 வயதில் இருந்தே சக்கரை நோய் இருக்கிறது என்றும் அதற்கு அவர் சிகிச்சை பெற்று வந்தார் என்றும் கூறி இருந்தார். மேலும், திருமணம் முடிந்து மூன்று ஆண்டுகள் கழித்து தான் கணவர் மனைவி இருவரும் மும்பைக்கு வந்து செட்டில் ஆனார்கள் என்றும் அவர் கூறி இருந்தார். இப்படி ஒரு நிலையில் பிதுஷி , சக்கரை நோய் காரணமாக மயக்கம் அடைந்து நிலை தடுமாறி விழுந்ததில் அவரது மண்டையில் அடிபட்டு இறந்து இருக்கலாம். எனவே, இது கொலை அல்ல எதிர்பாராத விபத்து தான் என்று போலீசார் தெரிவித்துவிட்டார்களாம்.

Advertisement