வடிவேலுவால 18 நாள் சும்மா இருந்தேன், 60,000 வீனா போச்சி, என் காட்சிய கூட நீக்க சொன்னாரு – வெற்றிகொடிகட்டு பெஞ்சமின்.

0
824
benjamin
- Advertisement -

சினிமாவைப் பொருத்தவரை உச்ச நட்சத்திரங்களாக இருக்கும் நடிகர் நடிகைகள் மட்டும்தான் சொகுசான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்கள். ஆனால், துணை நடிகர்களாக இருக்கும் எத்தனையோ, மக்களுக்கு பரிட்சயமான நடிகர்களின் வாழ்க்கை எப்போதும் சோகத்தில் தான் முடிகிறது. அந்த வகையில் தமிழில் எண்ணற்ற படங்களில் நடித்த நடிகர் பெஞ்சமின் சிகிச்சைக்கு உதவி கேட்டு வீடியோ வெளியிட்டுள்ளார். தமிழில் திருப்பாச்சி, வசூல் ராஜா MBBS , வெற்றிக்கொடி கட்டு போன்ற பல்வேறு படங்களில் நடித்தவர் நடிகர் பெஞ்சமின்.

-விளம்பரம்-

மேடை நாடக கலைஞரான இவரை வெற்றிக்கொடிக்கட்டு படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தினார் இயக்குநர் சேரன்.அதிலும் வெற்றிக்கொடி கட்டு படத்தில் வடிவேலுவை இவர் திட்டி தீர்த்து துபாயம் துபாய் என்று பேசிய வசனம் இன்றளவும் பேமஸ் தான். 40க்கும் மேற்பட்ட தமிழ் படங்களில் காமெடி வேடத்தில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். இப்படி ஒரு நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற இவர் வெற்றிக்கொடி கட்டு படத்தின் போது தனக்கும் வடிவேலுவுக்கும் ஏற்பட்ட பிரச்சனை குறித்து பேசி இருக்கிறார்.

- Advertisement -

18 நாள் சும்மா இருந்தேன் :

அதில் ‘ பாலச்சந்தரின் நாடகத்திற்கு தலைமை தாங்க சேரன் வந்த போதுதான் எனக்கு வெற்றி கொடி கட்டு படத்தின் வாய்ப்பு கிடைத்தது. இந்த படத்தில் வாய்ப்பு கிடைத்ததும் ஷூட்டிங்கிற்காக நான் சேரனை முதல்நாள் சந்தித்தபோது அவர் என்னை ஒரு மரத்திற்கு அருகில் சேர் போட்டு அமர சொன்னார். முதல்நாள் அன்று என்னை வைத்து காட்சிகள் எதுவும் எடுக்கவில்லை. இப்படியே 18 நாட்கள் சென்றது பின்னர் இன்னும் இரண்டு நாட்களில் படப்பிடிப்பு முடிந்துவிடும் என்று சொன்னார்கள். இதனால் சேரனிடம் சென்று நான் ஊருக்கு போகிறேன் என்று சொன்னேன்.

நான் பாலச்சந்தர் பள்ளியின் மாணவர் :

ஆனால் அவரோ, வடிவேலு வராததால் தான் உங்களின் காட்சிகளை எடுக்க முடியவில்லை நாளை வடிவேலு வருகிறார் உங்கள் காட்சிகளை எடுக்கலாம் என்று சொன்னார்.அதற்கு ஏற்ற மாதிரி அடுத்த நாள் வடிவேலுவும் வந்தார். மேலும் என்னை பார்த்து இவன் தான் புது பையனா ஒழுங்கா நடிப்பயா? பயப்படகூடாது என்று என்னிடம் கேட்டார் அதற்கு நான்’நான் பாலச்சந்தர் பள்ளியின் மாணவர் அதனால் எனக்கு எந்த பயமும் இல்லை’ என்று சொன்னேன். பின்னர் என்னுடைய காட்சி படமாக்கப்பட்டது. சேரன் சாரோ படத்தின் பட்ஜெட்டை குறைப்பதற்காக 400 அடி ரீல் ருபாய் 15000.

-விளம்பரம்-

ஆத்திரமடைந்த சேரன் :

எனவே, ஒரே டேக்கில் முடித்து விடு என்று என்னிடம் சொன்னார். நானும் நடிக்க தயாரானேன்.பின்னர் வசனத்தை பேசி கொண்டே வரும்போது வடிவேலுவை திட்ட வேண்டும். ஆனால் அவரை திட்டும் போது அவர் என்னை வசனம் பேச விடாமல் ஏதேதோ சொல்லிக்கொண்டே இருந்தார். இப்படியே 4 ரீல்கள் முடிந்தது இதனால் ஆத்திரமடைந்த சேரன் 60,000 ரூபாயை போய்விட்டது என்று சொன்னார். பிறகு ஏன் கெட்ட வார்த்தையில் திட்ட யோசிக்கிறீங்க ? என்று சேரன் கேட்டதும் நான் வடிவேலு கேமராவுக்கு பின்னால் செய்வதை சேரிடம் கூறினேன்.

மிரட்டிய வடிவேலு :

இதைப்பார்த்த பார்த்திபன் வடிவேலுவை அழைத்து சென்று காரில் கொஞ்ச தூரம் சென்று வர சொன்னார். பின்னர் அந்த காட்சியில் வடிவேலுவை நீ என்னவெல்லாம் திட்ட நினைக்கிறாயோ அதை திட்டு என்று பார்த்திபன் சொன்னார். அதன் பின்னர்தான் அந்த காட்சி நன்றாக வந்தது.அதன் பின்னர் வடிவேலு என்னிடம் வந்து என்னை என்னையா திட்ன , எப்படி நீ ஊருக்கு போகிறேன் என்று நான் பார்க்கிறேன் என்று சொன்னார். பின்னர் அங்கு இருந்த சேரனும் பார்த்திபனும் வடிவேலுவை சமாதானம் செய்தார்கள். அதன் பின்னர் அந்த காட்சியை வடிவேலு பார்த்துவிட்டு இப்படி எல்லாம் என்னை திட்டி இருக்கிறானோ அந்த காட்சியை நீக்கி விடுங்கள் என்று சொன்னார். ஆனால் சேரனோ, இல்லை ஏற்கனவே படத்தின் நீளத்தின் காரணமாக பல காட்சிகளை நீக்கி விட்டேன் அதனால் இந்த காட்சி இருக்கட்டும் என்று எவ்வளவோ சமாதானம் செய்து அந்த காட்சியை படத்தில் வைத்தார்.ஆனால் அந்த காட்சி தான் எனக்கு ஒரு அடையாளமாக அமைந்தது என்று கூறியுள்ளார் பெஞ்சமின்.

Advertisement