2006ல் வந்த வெயில் படம் அந்த ஆண்டின் சிறந்த படத்திற்காக தேசிய விருதையும், மாநில அரசின் விருதையும் பெற்றது. பிரியங்கா நாயர் தமிழில், தொல்லைபேசி, செங்காத்து பூமியிலே, போன்ற படங்களில் நடித்தார். பெரும்பாலும் மலையாள படங்களில் நடித்த அவர் மோகன்லால் மற்றும் மம்மூட்டிகு ஜோடியாக நடித்துள்ளார்.
தனது 27 வயதில் கடந்த 2012ஆம் ஆண்டு துணை இயக்குனர் லாரன்ஸ் ராம் என்பவரை காதலித்து இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார் பிரியங்கா. இவர்களுக்கு கடந்த 2013ஆம் ஆண்டு முகுந்த் ராம் என்ற மகன் பிறந்தார்
திருமணத்திற்கு பிறகு பிரியங்காவை நடிக்க வேண்டாம் என கூறினார் லாரன்ஸ் ராம். இதனால் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, 2016ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர். இதன்பின்னர் தன் சொந்த ஊருக்கே சென்று பட வாய்ப்புகள் தேடினார் பிரியங்கா. தற்போது 'தீயோர்க்கு அஞ்சேல்' என்ற தமிழ் படத்திலும், 'முள்ளப்பூ பொட்டே' என்ற மலையாள படத்திலும் நடித்து வருகிறார் பிரியங்கா.




