விடுதலை படத்தின் இரண்டாம் பாகத்திற்கு தடை விதிக்க வேண்டும் – கதை திருட்டு சர்ச்சையில் சிக்கிய வெற்றிமாறன்.

0
874
Viduthalai
- Advertisement -

வெற்றிமாறனின் விடுதலை படத்தின் கதை திருட்டு என்று எழுந்திருக்கும் புகார் தற்போது சோசியல் மீடியாவில் சர்ச்சை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான இயக்குனராக வலம் வருபவர் வெற்றிமாறன். இவருடைய படைப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் படம் விடுதலை. இந்த படத்தில் கதாநாயகனாக சூரி நடித்திருக்கிறார். விஜய் சேதுபதி படத்தில் போராளியாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

-விளம்பரம்-
viduthalai

இவர்களுடன் இந்த படத்தில் ஜிவி பிரகாஷின் தங்கை பவானி ஸ்ரீ ஜிவி அறிமுகமாகி இருக்கிறார். எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய துணைவன் என்ற நாவலை அடிப்படையாக வைத்து இந்த படத்தை இரண்டு பாகங்களாக இயக்குனர் உருவாகியிருக்கிறார். அதில் முதல் பாகம் தான் சமீபத்தில் வெளியாகியிருக்கிறது. மேலும், இந்த படத்தை எல்ரெட் குமார் தயாரித்திருக்கிறார். இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசை அமைத்திருக்கிறார். இப்படம் ரசிங்கர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது.

- Advertisement -

விடுதலை படம்:

இந்த நிலையில் வெற்றிமாறனின் விடுதலை படம் கதை திருட்டு சர்ச்சையில் சிக்கியிருக்கிறது. அதாவது, எழுத்தாளர் பாலமுருகன் மற்றும் எழுத்தாளர் சிவசுப்பிரமணியன் எழுதிய வீரப்பன் வாழ்ந்ததும், வீழ்ந்ததும் என்ற புத்தகத்தில் இருந்து இடம்பெற்ற வீரப்பன் தேடுதல் வேட்டையின்போது பழங்குடியின மக்கள் சித்திரவதை செய்யப்பட்ட காட்சிகளை தான் படத்தில் அப்படியே காப்பி அடித்து வைத்திருக்கிறார்கள் என்று புகார் எழுந்து இருக்கிறது. இந்நிலையில் இது குறித்து எழுத்தாளர் ரா முருகவேல் தன்னுடைய முகநூல் பக்கத்தில் பதிவு ஒன்று போட்டு இருக்கிறார்.

எழுத்தாளர் ரா முருகவேல் பதிவு:

அதில் அவர், விடுதலை படத்தில் வரும் ஒர்க் ஷாப் காட்சிகள் அனைத்தும் சோளகர் தொட்டி நாவலில் இருந்து எடுக்கப்பட்டு இருக்கிறது. நாவலின் ஆசிரியரின் அனுமதி பெறப்படவில்லை. இது அப்பட்டமான கதைத் திருட்டு ஆகும். 1980 ஆம் ஆண்டு தேவாரம் தலைமையிலான நக்சல் ஒழிப்பு ஆபரேஷன் அஜந்தா தர்மபுரி மாவட்டத்தில் நடந்தது . தமிழ்நாடு விடுதலை படை நடத்திய அரியலூர் ரயில் பாலம் குண்டு வெடிப்பு நடந்தது 87 இல் என்று நினைக்கிறேன். ஈரோடு மாவட்டம் மாதேஸ்வரன் மலையில் ஒர்க் ஷாப் என்று அழைக்கப்பட்ட கட்டடத்தில் நூற்றுக்கணக்கானவர்கள் கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்டது 1993 முதல் 1996 ம் ஆண்டுகளில் வீரப்பன் வேட்டையின் போது நடந்தது.

-விளம்பரம்-

கதை திருட்டு குறித்த சர்ச்சை:

இந்த மூன்றுக்கும் சம்பந்தமே இல்லை. சொல்லப்போனால், மக்கள் யுத்தக் கட்சியும், தமிழ்நாடு விடுதலைப் படையும் தங்கள் நூற்றுக்கணக்கான ஊழியர்களுடன் காட்டிற்கு பின்வாங்கி இருந்தால் இவ்வளவு இழப்புகள் ஏற்பட்டிருக்காது. பின்பு சில பத்து பேராக விடுதலைப் படை சுருங்கிய பின்பே வீரப்பனின் படையில் சேர்ந்தார்கள். அதுவும் குறுகிய காலம் மட்டுமே. மூன்று வெவ்வேறு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகளை கலந்து குழப்பி திரித்து படம் எடுக்க யாருக்கும் உரிமை இல்லை. இது இயக்குனரின் முதிர்ச்சி இன்மையை காட்டுகிறது. வனத்தில் வாழும் மக்களுக்கு என்ன பிரச்சினை என்பதே படத்தில் இல்லை. படத்தில் வனத்துறையே இல்லை.

வீரப்பன் குறித்த தகவல்:

பழங்குடிகள் வேறு, தலித்துகள் வேறு என்பது கூட தெரியவில்லை போல இருக்கின்றது. மக்களை சுரங்கத்துக்காக வெளியேற்றும் நடவடிக்கை ஏதாவது உள்ளதா என்றும் படத்தில் இல்லை. அதிரடிப் போலீஸ்காரர்கள் கோழி திருடர்கள் என்று வீரப்பன் தன் வீடியோக்களில் கிண்டல் செய்வார். போலீஸ்காரர்கள் ஏதோ பஞ்சம் பட்டினியில் இருந்தது போல காட்சி அமைத்திருப்பது மோசடி ஆகும். நக்சல் வேட்டை, வீரப்பன் வேட்டை ஆகியவை பல மாதங்கள் மாநிலத்தின் மிக உயர்ந்த மட்டத்தில் திட்டமிடல் செய்யப்பட்டு ஒருங்கிணைக்க பட்டு நடத்தப்பட்டவை. படம் இந்த நடவடிக்கைகளின் முழுப் பரிமாணத்தையும் தவற விட்டு அபத்தமாக எடுக்கப்பட்டுள்ளது என்று கூறியிருக்கிறார்.

எழுத்தாளர்கள் கூறியது:

இதனைத் தொடர்ந்து எழுத்தாளர் சிவசுப்பிரமணியம் மற்றும் எழுத்தாளர் பாலமுருகனிடம் கேட்டபோது, விடுதலை படத்தில் மக்கள் சித்திரவதை செய்யப்பட்ட காட்சிகளை வெற்றிமாறன் சிறப்பாக எடுத்திருக்கிறார். இந்த காட்சிகள் எல்லாம் நூலில் இருந்து எடுக்கப்பட்டது என்று சொல்லி இருந்தால் நன்றாக இருக்கும். அதோடு பாதிக்கப்பட்ட மக்களுக்கும் உதவிகள் கிடைக்கும். யாரும் கேள்வி கேட்க மாட்டார்கள் என்று பல நூல்களில் இருந்து காட்சிகள் திருடப்படுவது காலங்காலமாக நடந்து வருகிறது. இது கொஞ்சம் வருத்தத்திற்கு உரிய விஷயம் தான் என்று கூறி இருக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் விடுதலை 2 படத்துக்கும் தடை விதிக்க வேண்டும் என்று கூறி இருக்கிறார்கள்.

Advertisement