இந்த உலகத்தை மாற்ற நினைத்தால், வீட்டிற்கு சென்று – சர்ச்சைகளுக்கு பதிலடி தரும் விதமாக இன்ஸ்டகிராமில் விக்னேஷ் சிவன் பதிவு.

0
250
vignesh
- Advertisement -

வாடகைத்தாய் குறித்த சர்ச்சைகளுக்கு விக்னேஷ் சிவன் பதிவிட்டு இருக்கும் பதிவு சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தற்போது சோசியல் மீடியா முழுவதும் விக்னேஷ் சிவன்- நயன்தாராவின் இரட்டைக் குழந்தைகள் குறித்த சர்ச்சை தான் வைரலாகி கொண்டு வருகிறது. ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை என பலரும் எதிர்பார்த்து காத்து இருந்த விக்னேஷ் சிவன்- நயன்தாரா திருமணம் ஜூன் 9 ஆம் தேதி மகாபலிபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் வெகு விமர்சையாக பிரம்மாண்டமாக நடந்தது.

-விளம்பரம்-

மேலும், திருமணம் முடிந்த கையுடன் இந்த தம்பதிகள் ஜோடியாக ஹனி மூன் சென்று இருந்தனர். தற்போது இருவருமே படங்களில் பிசியாக பணியாற்றி வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் தங்களுக்கு இரட்டை குழந்தை பிறந்து இருப்பதாக விக்னேஷ் சிவன்- நயன்தாரா இருவரும் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து இருக்கிறார்கள். இதுகுறித்து விக்னேஷ் சிவன் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டது, நயன்தாராவும், நானும் அம்மா- அப்பா ஆகிவிட்டோம்.

- Advertisement -

இரட்டை குழந்தை பெற்ற நயன்:

எங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்திருக்கிறது. பிரார்த்தனைகள், முன்னோர்களின் ஆசிர்வாதங்கள், நல்ல செயல்கள் எல்லாம் சேர்ந்து எங்களுக்கு ஆசிர்வதிக்கப்பட்ட இரட்டை குழந்தைகள் பிறந்திருக்கிறது. உங்கள் அனைவரின் ஆசிர்வாதம் எங்களுக்காக வேண்டும் என்று கூறியிருந்தார். விக்னேஷ் சிவனின் இந்த அறிவிப்பை தொடர்ந்து ரசிகர்கள் பலர் வாழ்த்துக்களை கூறி இருந்தார்கள். இருந்தாலும், பலர் கல்யாணம் முடிந்து 4 மாதங்கள் ஆன நிலையில் எப்படி நயன்தாரா குழந்தை பெற்றார்? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

வாடகை தாய் மூலம் குழந்தை பெற்ற நயன்:

பின் நயன்-விக்கி வாடகை தாய் மூலம் தான் குழந்தை பெற்று இருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது. ஆனால், இதுகுறித்து நயன்-விக்கி தரப்பில் இருந்து எதுவும் கூறவில்லை. தற்போது சோசியல் மீடியாவில் நயன்தாரா- விக்னேஷ் சிவனின் வாடகை தாய் மூலம் பெற்றிருக்கும் இரட்டை குழந்தை குறித்த சர்ச்சை தான் வைரலாகி வருகிறது. இது குறித்து பலரும் தங்களின் கருத்துக்களை கூறி வருகின்றனர். இது குறித்து சமீபத்தில் கூட அமைச்சர் சுப்பிரமணியம் அவர்கள் பேட்டி ஒன்று அளித்து இருந்தார்.

-விளம்பரம்-

வாடகைத்தாய் குறித்த சர்ச்சை:

அதில் அவர், நயன்தாரா – விக்னேஷ் சிவன் வாடகை தாய் மூலம் பெற்றிருக்கும் குழந்தை விதிமுறைக்குட்பட்டதா? என்பதை மருத்துவத் துறையினர் மூலம் பரிசீலனை செய்யப்படுகிறது என்று கூறியிருந்தார். அதோடு சிலர் விக்கி-நயனுக்கு ஆதரவாக குரல் கொடுத்தும் வருகின்றனர். மருத்துவத் துறையினர் மூலம் பரிசீலனை செய்யப்படுகிறது என்று கூறியிருந்தார். இந்த நிலையில் இந்த சர்ச்சைகளுக்கு பதிலடி தரும் விதமாக விக்னேஷ் சிவன் அவர்கள் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில தத்துவங்களை பகிர்ந்து இருக்கிறார்.

விக்னேஷ் சிவன் அளித்த பேட்டி:

அதில் அவர், எல்லாம் சரியான தருணத்தில் உங்களுக்கு வரும். பொறுமையாய் இரு. நன்றியுடன் இரு என்று பதிவிட்டு இருக்கிறார். இன்னொரு பதிவில், இந்த உலகத்தை மாற்ற நினைத்தால், வீட்டிற்கு சென்று உங்கள் குடும்பத்தை நேசியுங்கள் என்று பதிவிட்டு இருக்கிறார். இப்படி இவர் பதிவிட்ட பதிவுகள் எல்லாமே வாடகத்தாய் குறித்த சர்ச்சைகளுக்கு பதிலடி கொடுக்கும் விதமாகத்தான் குறிப்பிட்டு இருக்கிறார் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Advertisement