தென்னிந்திய சினிமா திரை உலகில் சர்ச்சை நாயகன் என்றால் அது ‘லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்பு’ தான். . இருப்பினும் சினிமாத்துறையில் அவரை குறித்து பல விமர்சனங்கள் எழுந்து கொண்டிருந்தன. எப்படியிருந்தாலும் சிம்புவுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருந்து கொண்டுதான் வருகிறது. நடுவில் சில தோல்வி படங்கள் வந்த நிலையிலும் ரசிகர்கள் அவரை கை கொடுத்து தூக்கி விட்டனர்.செக்கசிவந்தவானம், வந்தா ராஜாவா தான் வருவேன் என்ற படங்கள் மூலம் மீண்டும் சினிமா களத்தில் இறங்கினர்.
நடிகர் சிம்புவை பற்றி எண்ணற்ற தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் பல்வேறு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்கள். அதில் குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் சிம்பு சரியாக படப்பிடிப்பிற்கு வர மாட்டார் என்பதுதான். ஆனால், கௌதம் மேனன் போன்ற பல்வேறு முன்னணி இயக்குனர்கள் சிம்பு ஒரு சிங்கிள் டிக் ஆர்டிஸ்ட் என்று பாராட்டியிருக்கிறார்கள். இந்த நிலையில் இயக்குநரும் நயன்தாராவின் இந்நாள் காதலி ருமான விக்னேஷ் சிவன் தனது காதலியின் முன்னாள் காதலர்களான சிம்பு குறித்து பேசியிருக்கிறார்.
இயக்குனர் பாடலாசிரியர் தயாரிப்பாளர் என்று பண்புகளைக் கொண்டிருக்கும் விக்னேஷ் சிவன் இயக்குனராக அறிமுகமானது என்னவோ சிம்பு நடிப்பில் வெளியான போடாபோடி படத்தின் மூலம்தான். இந்த படம் அவ்வளவாக வெற்றி அடையவில்லை ஆனால், இதன் பின்னர் விக்னேஷ் சிவன் இயக்கிய நானும் ரவுடிதான் தானாசேர்ந்தகூட்டம் போன்ற படங்கள் நல்ல வெற்றியை தந்தது. இந்த நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற விக்னேஷ் சிவன் சிம்புவின் நடிப்பு திறமை குறித்து பேசியிருக்கிறார்.
போடா போடி படத்தில் குழந்தை பிறந்ததற்கு பின்னர் சிம்பு ஒரு உணர்வுபூர்வமான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார், இது குறித்து பேசிய விக்னேஷ் சிவன், அதற்கான முழு பாராட்டும் சிம்புவை தான் சேரும். நாங்கள் அந்த காட்சியை எழுதிய போது அது இவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எண்ணவில்லை. அந்த காட்சி படமாக்கப்பட்டது மூன்று மணிக்கு, அந்த காட்சிக்கு அனைத்தையும் தயார் செய்துவிட்டோம். சிம்பு அந்த காட்சியில் நடிப்பதற்க்கு முன்பாக தனக்கு ஒரு அரை மணி நேரம் நேரம் வேண்டும் என்று கூறினார். அதன் பின்னர் அவர் அந்த காட்சியில் கிலிசரின் கூட போடாமல் நடித்திருந்தார். அந்த ஒரு காட்சி போதும் ஒரு நடிகராக சிம்பு எப்படிப்பட்டவர் என்று