நயன்-விக்கிக்கு வாடகைத்தாய் மூலம் குழந்தைகள் ? சில பிரபலங்கள் விரும்பும் Surrogacy முறை. 

0
336
nayan
- Advertisement -

நயன்- விக்கி வாடகை தாயின் மூலம் பெற்றிருக்கும் குழந்தை குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது . அனைவரும் எதிர்பார்த்து காத்து இருந்த விக்னேஷ் சிவன்- நயன்தாரா திருமணம் ஜூன் 9 ஆம் தேதி மகாபலிபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் வெகு விமர்சையாக பிரம்மாண்டமாக நடந்தது. இவர்களின் இல்லற வாழ்வு சிறக்க திரையுலகினரும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து இருந்தார்கள். அதோடு கடந்த ஜூன் மாதம் முழுவதும் ஹாட் டாப்பிக்காக இருந்தது விக்னேஷ் சிவன்- நயன்தாரா திருமணம் தான்.

-விளம்பரம்-

மேலும், திருமணம் முடிந்த கையுடன் இந்த தம்பதிகள் ஜோடியாக ஹனி மூன் சென்று இருந்தனர். தற்போது இருவருமே படங்களில் பிசியாக பணியாற்றி வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் தங்களுக்கு இரட்டை குழந்தை பிறந்து இருப்பதாக விக்னேஷ் சிவன்- நயன்தாரா இருவரும் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து இருக்கிறார்கள். இதுகுறித்து விக்னேஷ் சிவன் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டது, நயன்தாராவும், நானும் அம்மா- அப்பா ஆகிவிட்டோம்.

- Advertisement -

இரட்டை குழந்தை பெற்ற நயன்:

எங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்திருக்கிறது. பிரார்த்தனைகள், முன்னோர்களின் ஆசிர்வாதங்கள், நல்ல செயல்கள் எல்லாம் சேர்ந்து எங்களுக்கு ஆசிர்வதிக்கப்பட்ட இரட்டை குழந்தைகள் பிறந்திருக்கிறது. உங்கள் அனைவரின் ஆசிர்வாதம் எங்களுக்காக வேண்டும் என்று கூறியிருந்தார். விக்னேஷ் சிவனின் இந்த அறிவிப்பை தொடர்ந்து ரசிகர்கள் பலர் வாழ்த்துக்களை கூறி இருந்தார்கள். இருந்தாலும், ஒரு சிலர் கல்யாணம் முடிந்து 4 மாதங்கள் ஆன நிலையில் எப்படி நயன்தாரா குழந்தை பெற்றார்? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

வாடகை தாய் மூலம் குழந்தை:

பின் நயன்-விக்கி வாடகை தாய் மூலம் குழந்தை பெற்று இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆனால், இதுகுறித்து நயன்-விக்கி தரப்பில் இருந்து எதுவும் கூறவில்லை. அது மட்டும் இல்லாமல் பாலிவுட் பிரபலங்களான ஷாருக்கான்- கௌரி, அமீர்கான், கரண் ஜோஹர், ப்ரீத்தி ஜிந்தா, சன்னி லியோன், துஷார் கபூர் மற்றும் ஏக்தா கபூர், பிரியங்கா சோப்ரா போன்ற பல பிரபலங்கள் வாடகைத் தாய் மூலம் தான் குழந்தைகளை பெற்றெடுத்திருக்கின்றனர். இந்நிலையில் வாடகைத்தாய் முறை மூலம் பெற்றெடுக்கும் குழந்தை குறித்த சில விவரங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

-விளம்பரம்-

வாடகைத்தாய் முறை:

பல காரணங்களால் கருத்தரிக்க முடியாத தம்பதிக்கு குழந்தை பெற்றுக்கொள்ள செய்யப்படும் முறையே வாடகைத்தாய் முறை. இதில் ஒரு பெண்ணின் கருமுட்டை , ஆணின் விந்தணு கொண்டு மருத்துவ முறையில் கருவை உருவாக்கி பின் வாடகை தாயின் கர்ப்பப்பையில் பொருத்தி குழந்தையை பெற்றெடுக்கப்படுகிறது. ஆண், பெண் இருவரும் தங்கள் கருமுட்டை/விந்தணு மூலம் இந்த முறையில் குழந்தை பெற்றுக்கொள்ளலாம்.

பாரம்பரிய வாடகைத்தாய் முறை(Traditional Surrogacy):

இந்த முறையில் ஆணின் விந்தணு வாடகை தாய்க்கு மருத்துவ முறையில் செலுத்தப்பட்டு கரு உருவாக்கி குழந்தை பெற்றெடுக்கப்படுகிறது. சம்பந்தப்பட்ட தம்பதியே அந்த குழந்தைக்கு சட்டப்படி பெற்றோர் ஆவார்.

ஜெஸ்டேஷனல் சரொகசி (Gestational Surrogacy):

இந்த முறையில் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பும் பெண்ணின் கருமுட்டையில், அவர் கணவரின் விந்தணுவை செலுத்தி கருவுறச் செய்து அந்தக் கருவை வாடகைத்தாயின் கர்ப்பப்பையில் பொருத்தி குழந்தைப் பேறு அடைய வழிவகை செய்யப்படுகிறது. இந்த முறையில் கருமுட்டை, விந்தணு இரண்டும் சம்பந்தப்பட்ட தம்பதிகளின் உடையது. அதனால், வாடகைத்தாயின் மரபு பண்புகளை குழந்தை பெறுவது தவிர்க்கப்படுகிறது.

Advertisement