இவனை எல்லாம் 10 வருஷம் விசாரிக்காம, இவனுக்கு இப்படி தண்டனை கொடுங்க – விஜய் ஆண்டனி பதிவு.

0
435
vijayantony
- Advertisement -

காதலை ஏற்க மறுத்து பெண்ணை ரயில் தண்டவாளத்தில் தள்ளிவிட்ட சம்பவம் குறித்து இயக்குனரும், நடிகரும் ஆன விஜய் ஆண்டனி பதிவிட்டு இருக்கும் பதிவு சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சென்னை கிண்டியை அடுத்துள்ள ஆதம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் சத்யா. இவருடைய தாய் ராமலட்சுமி சென்னை ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வருகிறார். அதே குடியிருப்பில் வசித்து வந்தவர் தான் சதீஷ்.

-விளம்பரம்-

சத்யா- சதீஷ் இருவருக்குமே சிறு வயதில் இருந்தே பழக்கம் ஏற்பட்டு இருக்கிறது. பின் நாளடைவில் இருவருக்கும் காதல் ஏற்பட்டது. ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக சத்யாவும்- சதிசும் காதலித்து வந்தார்கள். சத்யா சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் பிகாம் இரண்டாம் ஆண்டு படித்து வந்திருக்கிறார். இப்படி ஒரு நிலையில் சில மாதங்களாகவே சத்யாவுக்கும் சதீஷுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது. அதன் பின் சதீஷ் உடைய நடவடிக்கை பிடிக்கவில்லை என்று சத்யா அவரை தவிர்த்து இருக்கிறார்.

- Advertisement -

சத்யா-சதிஷ் பிரச்சனை:

இருந்தாலும், சதீஷ் சத்யாவை பின்தொடர்ந்து சமாதானம் செய்ய முயற்சி செய்கிறார். ஆனால், சத்யா மறுத்து சென்று இருக்கிறார். அதோடு காவல் நிலையத்தில் சதீஷ் மீது சத்யா புகாரும் அளித்து இருக்கிறார். இருந்தாலும், சதிஷ் விடாமல் சத்யாவை சமாதானம் செய்து பேச முயற்சி செய்து இருக்கிறார். பின் ஒரு நாள் கல்லூரிக்கு சென்ற சத்யாவை சதீஷ் வழிமறித்து பேச செய்ய முயற்சி செய்திருக்கிறார். ஆனால், சத்யா எது சொல்லியும் ஏற்க மறுத்திருக்கிறார்.

மாணவியை கொலை செய்த காதலன்:

இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு இருக்கிறது. பின் கோபத்தின் உச்சத்தில் சென்ற சதீஷ் ஓடிக் கொண்டிருந்த ரயில் முன்பு சத்யாவை தண்டவாளத்தில் தள்ளிவிட்டு இருக்கிறார். அந்த மின்சார ரயில் மீது சத்யா மோதி அவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்திருக்கிறார். இதை பார்த்த ரயில் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சத்யா உடலை மீட்டு பிரத பரிசோதனைக்கு அனுப்பி வைத்திருக்கின்றனர்.

-விளம்பரம்-

கைதான சதிஷ்:

மேலும், கல்லூரி மாணவியை ரயில் முன் தள்ளிவிட்டு கொலை செய்த சதீஷ் தப்பித்து சென்றிருக்கிறார். இது குறித்து அவர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் சதீஷை கைது செய்து இருக்கின்றனர். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது மட்டும் இல்லாமல் இது குறித்து பலரும் தங்களுடைய கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து விஜய் ஆண்டனி அவர்கள் பதிவு ஒன்றை போட்டு இருக்கிறார்.

விஜய் ஆண்டனி பதிவு:

அதில் அவர் கூறியிருந்தது, சத்யாவை கொன்று சத்யாவின் அப்பா தற்கொலைக்கு காரணமான சதீஷை பொறுமையாக விசாரித்து பத்து வருஷத்துக்கு பிறகு தூக்கில் போடாமல் தயவுசெய்து உடனடியாக விசாரித்து ரயிலில் தள்ளிவிட்டு தண்டிக்கும்படி சத்யாவின் சார்பாக, பொதுமக்களின் ஒருவனாக கணம் நீதிபதி அவர்களே கேட்டுக்கொள்கிறேன் என்று கூறுகிறார். இப்படி விஜய் ஆண்டனியின் பதிவிற்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

Advertisement