இயேசு கூட சரக்கு அடிச்சு இருக்காரு – சர்ச்சை போஸ்டருக்கு விஜய் ஆண்டனி சொன்ன பதிலால் சர்ச்சை.

0
433
- Advertisement -

இயேசு கூட குடித்திருக்கிறார் என்று விஜய் ஆண்டனி பேசி இருக்கும் சர்ச்சை கருத்து தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பிரபலமான இசையமைப்பாளராக இருந்து நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஜய் ஆண்டனி. இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது. அந்த வகையில் தற்போது இவர் நடிப்பில் விநாயக் வைத்தியநாதன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ரோமியோ.

-விளம்பரம்-

இந்த படத்தில் மிர்னாலினி ரவி, யோகி பாபு, விடிவி கணேஷ், இளவரசு, சுதா, ஸ்ரீஜா ரவி, தலைவாசல் விஜய் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படம் ரம்ஜான் பண்டிகை முன்னிட்டு ஏப்ரல் 11ம் தேதி வெளியாக இருக்கிறது. ஏற்கனவே இந்த படத்தினுடைய பர்ஸ்ட் லுக் போஸ்டர் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் இந்த படத்தின் பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.

- Advertisement -

செய்தியாளர்கள் கேள்வி:

இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு ரோமியோ படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடைபெற்று இருக்கிறது. இதில் கலந்து கொண்ட பட குழுவினர் பத்திரிக்கையாளர் கேள்விகளுக்கு பதில் அளித்து இருக்கிறார். அதில் நடிகர் விஜய் ஆண்டனி கொடுத்திருந்த பதில் தான் தற்போது சோசியல் மீடியாவில் பேசும் பொருளாகி இருக்கிறது. அதாவது, ரோமியோ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் பாலும் பழத்துக்கு பதிலாக ஒரு பெண் சரக்கு ஊட்டுவது போல போஸ்டர் வந்துச்சு? இது குறித்து உங்களுடைய கருத்து என்று கேட்டிருக்கிறார்கள்.

விஜய் ஆண்டனி பதில்:

அதற்கு விஜய் ஆண்டனி, இங்கு வந்திருப்பவர்களில் பாதி பேர் குடிப்பீர்கள் என்று நினைக்கிறேன். இதில் ஆண்- பெண் என்ற வேறுபாடலாம் பார்க்க வேண்டாம். குடி என்றால் எல்லோருக்குமே ஒன்று தான். ஆண்களுக்கு என்னெல்லாம் இருக்கிறதோ அதெல்லாம் அவர்களுக்கும் இருக்கும். அந்த மாதிரி தான் மது அருந்துவதும். ஆனால், நான் குடிப்பதை சரி என்று ஆதரிக்கவில்லை. ஆண் குடிப்பது தப்பு என்றால் பெண் குடிப்பதும் தப்பு தான்.

-விளம்பரம்-

மது அருந்துவது குறித்து சொன்னது:

மேலும், குடி என்பது இப்போது உருவானதில்லை. இது ரொம்ப நாட்களாகவே இருக்கிறது. சாராயம் என்ற பெயரில் ஆரம்பத்த இந்த குடி தற்போது பாராக மாறி இருக்கிறது. அந்த காலத்தில் திராட்சை ரசம் என்ற பெயரில் இருந்தது. ஜீசஸ் கூட குடித்திருக்கிறார் என்று சொல்கிறார்கள். ராஜா காலத்தில் சோம பானம் என்று இருந்தது. இப்படி குடி என்பது ரொம்ப காலகட்டமாகவே இருக்கிறது. ஆனால், ஒவ்வொரு காலகட்டத்திலும் அதனுடைய பெயர் தான் மாறியிருக்கிறது என்று கூறியிருக்கிறார்.

விஜய் ஆண்டனி குறித்த தகவல்:

கடைசியாக விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியாகி இருந்த படம் ரத்தம். அமுதன் இயக்கிய இந்த படத்தில் நந்திதா ஸ்வேதா, மகிமா நம்பியார், ரம்யா நம்பீசன், நிழல்கள் ரவி, ஜெகன் கிருஷ்ணன் உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது. தற்போது இவர் ஐந்திற்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வருகிறார். இப்படி இவர் பிஸியாக படங்களில் நடித்துக் கொண்டிருந்தாலும் இவருடைய வாழ்க்கையில் மிகப் பெரிய பேரிழப்பு நடந்திருக்கிறது. கடந்த ஆண்டு விஜய் ஆண்டனியின் மகள் மீரா தற்கொலை செய்து கொண்டார். மகளின் இறப்பினால் விஜய் ஆண்டனி மற்றும் அவரின் மனைவி பாத்திமா மனம் உடைந்து போய் விட்டார்கள். தற்போது அதிலிருந்து விஜய் ஆண்டனி மீண்டு தன்னுடைய இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிருக்கிறார்.

Advertisement