‘நிறைய காயம் பட்டு பட்டு மரத்துப் போனது போல் மாறிவிட்டேன்’ – மகளின் இறப்பிற்கு பின் முதன் முறையாக பேசிய விஜய் ஆண்டனி.

0
813
- Advertisement -

மகளின் இறப்பிற்கு பின்னர் விஜய் ஆண்டனி பங்கேற்றுள்ள முதல் நிகழ்ச்சியின் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் இசையமைப்பாளராக இருந்து நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஜய் ஆண்டனி. இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது. இவர் முதலில் தமிழ் சினிமாவில் சுக்ரன் படத்தின் மூலம் தான் இசையமைப்பாளராக அறிமுகமானார்.

-விளம்பரம்-

பின் 2012-ஆம் ஆண்டு வெளி வந்த நான் படத்தின் மூலம் ஹீரோவாக தன் திரை பயணத்தை தொடங்கினார். இதனைத் தொடர்ந்து பல படங்களில் நாயகனாக நடித்து வருகிறார். இதனிடையே கடந்த 2006ஆம் ஆண்டு பாத்திமா என்பவரை விஜய் ஆண்டனி திருமணம் செய்து கொண்டார். இவர் ஹீரோவாக நடித்த நான் என்ற படத்தை தயாரித்தது அவரது மனைவி பாத்திமா தான். இவரது மனைவி பாத்திமா டீவி தொலைக்காட்சி ஒன்றில் தொகுப்பாளினியாக பணியாற்றி வந்தார்.

- Advertisement -

பின்னர் விஜய் ஆண்டனியை பேட்டி எடுக்க சென்ற போது இருவருக்கும் காதல் மலர்ந்துள்ளது. பின் இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களுக்கு இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். அதில் விஜய் ஆண்டனியின் 16 வயது மகள் மீரா. இவர் சென்னையில் உள்ள சர்ச் பார்க் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் சில தினங்களுக்கு முன் அதிகாலை அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

மீராவின் இறப்பிற்கு திரைப்பிரபலங்கள் பலரும் நேரில் வந்து விஜய் ஆண்டனிக்கு ஆறுதல் கூறியிருக்கிறார்கள். மீராவுடன் படித்த பள்ளி மாணவர்கள், ஆசிரியர்களும் மீராவின் நினைவுகளை பகிர்ந்து கண்ணீர் விட்டு அழுது இருக்கிறார்கள். இந்த நிலையில் தனது மகளின் இறப்பு குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கும் விஜய் ஆண்டனி ‘ அன்பு நெஞ்சங்களே என் மகள் மீரா மிகவும் அன்பானவள் தைரியமானவள்.

-விளம்பரம்-

அவள் இப்போது இந்த உலகை விட சிறந்த ஜாதி, மதம், பணம், பொறாமை, வலி, வறுமை, வன்மம் இல்லாத ஒரு அமைதியான இடத்திற்குத்தான் சென்று இருக்கிறாள். என்னிடம் பேசிக் கொண்டுதான் இருக்கிறால். அவளுடன் நானும் இறந்துவிட்டேன். நான் இப்போது அவளுக்காக நேரம் செலவிட ஆரம்பித்து விட்டேன். அவள் பெயரில் நான் செய்யப்போகும் நல்ல காரியங்கள் அனைத்தையும் அவளே தொடங்கி வைப்பாள் உங்கள் விஜய் ஆண்டனி’ என்று உருக்குமுடன் தெரிவித்திருந்தார்.

மகளின் இறப்பிற்கு சில நாட்களுக்குள் தனது படத்தின் பணிகளை தொடர்ந்தார் விஜய் ஆண்டனி. அந்த வகையில் ரத்தம் படத்தின் நிகழ்ச்சியில் தனது மகள் லாராவுடன் வந்தார் விஜய் ஆண்டனி. இந்த விழாவில் பேசிய அவர் ‘ நான் வாழ்க்கையில் சிறுவயதில் இருந்தே நிறைய சந்தித்து விட்டேன். என்னுடைய நோக்கம் அடுத்தவர்களை மகிழ்விப்பது தான். நிறைய காயம் பட்டு பட்டு மரத்துப் போனது போல் மாறிவிட்டேன்.

ஒரு அப்பாவாக தங்கள் பிள்ளைகளை பார்த்துக் கொள்ள வேண்டும் என நினைப்பது இயல்பு ஆனால் அனைத்திற்கும் அனுபவம் தேவை வாழ்க்கையின் எல்லா திசைகளையும் நான் பார்த்து விட்டேன் வாழ்க்கையில் எந்த ஒரு விஷயத்தையும் மறக்க வேண்டிய அவசியமில்லை மறக்க யோசிக்க வேண்டாம் நம் வாழ்க்கையே ஞாபகம் தான் நான் எதையும் மறக்க முயற்சி செய்ய மாட்டேன் வலி ஏற்பட்டால் கூட அந்த வலியோடு வாழ நினைப்பேன்’ தஎன்று பேசி இருக்கிறார்.

Advertisement