‘போற போக்க பாத்தா ஹிட் ஆகிடும் போல இருக்கே’ – தான் போட்ட முதல் கேவலமான Tuneஐ பாடலாக மாற்றிய வீடியோவை கண்டு குஷியான விஜய் ஆண்டனி.

0
496
vijayantony
- Advertisement -

எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் சினிமா உலகில் நுழைந்து முன்னணி நடிகராக கலக்கி கொண்டு இருப்பவர் விஜய் ஆண்டனி. இவர் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக தான் அறிமுகமானார். பின்னர் நடிகராக பட்டைய கிளப்பி கொண்டு வருகிறார் . இவர் கன்யாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் 1975 ஆம் ஆண்டு பிறந்தவர். இவருடைய தந்தை 7 வயது இருக்கும் போதே இறந்து விட்டார். பின் இவர் தன் தாய் கவனிப்பில் கஷ்டப்பட்டு படித்து முன்னேறி சினிமா துறைக்குள் நுழைந்தார். எந்தவொரு சினிமா பின்னணியும் இல்லாமல் சினிமாவில் சாதித்த அஜித் போன்றே விஜய் ஆண்டனியும் திகழ்கிறார்.

-விளம்பரம்-

2005 ஆம் ஆண்டு வெளியான சுக்ரன் படத்தின் மூலம் தான் இவர் இசையமைப்பாளராக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து இவர் பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து உள்ளார். மேலும், விஜய் ஆண்டனி படங்களுக்கு ஒரு இசையமைப்பாளராக மட்டும் தனது திரைப் பயணம் நின்று விடக் கூடாது என்று நினைத்து ஹீரோவாக நடிக்கலாம் என்று முடிவெடுத்தார். பின் 2012-ஆம் ஆண்டு வெளி வந்த நான் படத்தின் மூலம் ஹீரோவாக தன் திரை பயணத்தை தொடங்கினார்.

- Advertisement -

‘விஜய் ஆண்டனி புரியாத வரிகளும்’

இதனைத் தொடர்ந்து இவர் சலீம், இந்தியா பாகிஸ்தான், பிச்சைக்காரன், சைத்தான், எமன், அண்ணாதுரை, காளி, திமிரு புடிச்சவன் என பல படங்களில் நடித்தார். பெரும்பாலும் இவர் நடித்த படங்கள் எல்லாம் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து உள்ளது. தற்போது இவர் இசையமைப்பாளர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டு திகழ்ந்து வருகிறார். பெரும்பாலும் விஜய் ஆண்டனியின் பாடல்களில் புரியாத பல வரிகள் வரும்.

புரியாத வரிகளுக்கு காரணம் :

விஜய் ஆண்டனி இசையமைத்த முதல் படமான சுக்ரன் படத்தில் இடம்பெற்ற அணைத்து பாடல்களும் சூப்பர் ஹிட் தான். மேலும், இந்த படத்தில் இடம்பெற்ற ‘சாதிக்கடி போதிக்கடி’ பாடலில் வரும் லேகு லக்குன, லேகு லக்குன முதல் நாக்க முக்கா, டைலாமோ டைலாமோ, மாகையால, லேறி சோனா போன்ற பல படங்களில் வரும் வரிகள் என்னவென்றே நமக்கு தெரியாது. இதற்கு பேட்டி ஒன்றில் காரணம் சொல்லி இருந்தார் விஜய் ஆன்டனி.

-விளம்பரம்-

விஜய் ஆண்டனி சொன்ன விளக்கம் :

நான் இசையமைப்பாளராக அறிமுகமான காலத்தில் என்னிடம் பெரிதாக வசதி கிடையாது தயாரிப்பாளர்கள் கூட நிறைய பணம் எல்லாம் கொடுக்க மாட்டார்கள் ரொம்ப பட்ஜெட் தான் இதில் நாம் சம்பாதித்து வாழ்க்கையை ஓட்டுவது என்பது மிகவும் கஷ்டம் எனவே என்னுடைய பாடல்கள் நிறைய கருவிகளை வாசித்தால் நிறைய செலவாகும் வேறு ஏதாவது விஷயங்களை வைக்க வேண்டும் என்பதால் வாயிலேயே ஏதாவது போட்டு விடுவேன் என்று கூறி இருந்தார்.

மாடு தாண்டா பால கறக்கும் :

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய விஜய் ஆண்டனி தான் முதன் முதலாக பாடிய பாடல் குறித்து பாடி இருந்தார், மேலும், அந்த பாடல் கேவலமாக இருக்கும் என்று கூறி இருந்தார். இப்படி ஒரு நிலையில் அவர் பாடிய அந்த பாடலை ஒருவர் ஒரு முழு பாடலை போல பாடி இருக்கிறார். இதை கண்ட விஜய் ஆண்டனி ‘என் முதல் கேவலமான டியூன், யாரோ ஒருவர் போட்ட கவர் வெர்ஷன்.. போற போக்க பாத்தா ஹிட் ஆகிடும் போல இருக்கே’

Advertisement