வடக்கனும் கிழக்கனும் இந்த விஷியத்தில் ஒன்றுதான் – விஜய் ஆண்டனி போட்ட சர்ச்சை பதிவு.

0
609
vijay
- Advertisement -

நடிகரும், இயக்குனர், பாடகர் என பன்முகங்களை கொண்ட விஜய் ஆண்டனி 2006ஆம் ஆண்டு வெளியான “கிழக்கு கடற்கரை சாலை” என்ற திரைபடத்தை மூலன் திரையில் அறிமுகமாகினர். பின்னர் நான், சலீம் , இந்தியா பாகிஸ்தான், பிச்சைக்காரன், அண்ணாதுரை, திமிரு பிடிச்சவன், டிராபிக் ராமசாமி என்ற பல வெற்றி திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இந்நிலையில் கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளியான அரசியல் – திரில்லர் திரைப்படமான “கோடியில் ஒருவன்” என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

-விளம்பரம்-

நடித்து வரும் படங்கள் :

இப்படத்தை இயக்குனர் ஆனந்த் கிருஷ்ணா இயக்கியிருந்தார். மேலும், இப்படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக ஆதமிகா நடித்திருந்தார். இப்படமானது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.தற்போது தமிழரசன், அக்னி சிறகுகள் போன்ற திரைப்படங்கள் ஏற்கனவே முடிவடைந்த நிலையில் விரைவில் அவை திரைக்கு வரவிருக்கின்றது. இப்படங்களை தவிர்த்து காக்கி, கொலை, பிச்சைக்காரன் 2, ரத்தம், வள்ளி மயில், மழை பிடிக்காத மனிதன் உள்ளிட்ட படங்களில் நடிகர் விஜய் ஆண்டனி நடித்து வருகிறார்.

- Advertisement -

படப்பிடிப்பில் விபத்து :

இந்த நிலையில் தான் பிச்சைக்காரன் 2 படப்பிடிப்பின் போது விபத்து ஏற்பட்டுள்ளது என்ற தகவல் தமிழ் சினிமா உலகை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அதாவது பிச்சைக்காரன் 2 படத்தற்காக மலேசியாவில் உள்ள லங்கா தீவில் படப்பிடிப்பு நடந்துள்ளது அப்போது கடலில் கப்பல் காட்சி படமாக்கிக்கொண்டிருக்கும் போது இவர் ஜெட் போட்டில் அதிவேகமாக சென்றுக்கொண்டிருந்த போது மற்றொரு படகின் மீது மோதி விஜய் ஆண்டனிக்கு முகத்தில் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

பிட்சைகாரன் 2 :

இந்நிலையில் அறுவை சிகிச்சைக்கு பின் பதிவு ஒன்றை போட்டு இருக்கும் விஜய் ஆண்டனி ‘அன்பு இதயங்களே நான் 90% குணம் அடைந்து விட்டேன். உடைந்த என் தாடை, மூக்கு எலும்புகள் ஒன்று சேர்ந்துவிட்டன. என்னமோ தெரியவில்லை, நான் இப்போது முன்பைவிட அதிக சந்தோஷத்தை உங்களால் உணருகிறேன்.வரும் ஏப்ரல் வெளியாகும் பிச்சைக்காரன் 2 பட வேலைகளை இன்று முதல் தொடங்குகிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

-விளம்பரம்-

வட மாநிலத்தவர்கள் சர்ச்சை :

இப்படி ஒரு நிலையில் தற்போது தமிழ் நாட்டில் நிலவி வரும் வட மாநிலத்தவரின் ஆக்கிரமிப்பு அதிகமாகியுள்ளதை சமூக ஆர்வலர்கள் முதல் அரசியல் வாதிகள் வரையில் குறிப்பிட்டு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அதே போல பரிதாபங்கள் போன்ற பல யூடியூப் சேனல்களும், தொகுப்பாளர்களும் வட மாநிலத்தவரின் வருகை தமிழ்நாட்டில் அதிகரித்திருப்பதை கடுமையாக எதிர்த்து வரும் நிலையில் விஜய் ஆண்டனியும் இது தொடர்பாக தற்போது ஒரு பதிவை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

விஜய் ஆண்டனி பதிவு :

அந்த பதிவில் “வடக்கனும் கிழக்கனும் தெற்க்கனும் மேற்க்கனும்… நம்மைப்போல் தன் குடும்பத்தைக்காப்பாற்ற, தினமும் போராடி வாழும், இன்னொரு சக ஏழை மனிதன்தான். யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று பதிவிட்டுருந்தார். இந்த பதிவு வைரலான நிலையில் இதற்கு வரவேற்பு வந்தாலும் மறுபக்கம் கடுமையான எதிர்ப்புகள் நெட்டிசன்கள் தரப்பில் இருந்து வந்துகொண்டிருக்கிறது.

Advertisement