”பிரபலம் என்பதால் சங்கடம்” – 9 மணி நேர விசாரணைக்குப்பின் நொந்து பேசிய விஜய் தேவரகொண்டா

0
357
- Advertisement -

ஹவாலா பணம் முதலீடு தொடர்பாக நடிகர் விஜய் தேவர் கொண்டாவிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் விஜய் தேவர்கொண்டா. அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் தான் விஜய் தேவர்கொண்டா அவர்கள் தென்னிந்தியா முழுவதும் பிரபலமானார். இதனை தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்தார்.

-விளம்பரம்-

இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் ஹிட் கொடுத்து இருக்கிறது. மேலும், இவர் நடித்த வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர் என்ற படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று இருந்தது. தற்போது இவர் ஹீரோவாக மட்டும் நடித்து வராமல் தயாரிப்பாளராகவும் இருந்து வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் லைகர் படம் வெளியாகி இருக்கிறது. இந்த படத்தை இயக்குனர் பூரி ஜெகன்நாதன் இயக்கி இருக்கிறார். இந்த படம் குத்து சண்டை போட்டியை மையமாக கொண்டு உருவாகி இருக்கிறது.

- Advertisement -

லைகர் படம் :

இந்த படமானது தமிழ், தெலுங்கு, மலையாளம்,ஹிந்தி, கன்னடம் உள்ளிட்ட 5 மொழிகளில் Pan இந்தியா படமாக வெளியாகி இருக்கிறது. இந்த படத்தில் பிரபல குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். இந்த படத்தில் அனன்யா பாண்டே, ரம்யா கிருஷ்ணன் உட்பட பலர் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்கள். பெரும் எதிர்பார்ப்புடன் இருந்த படம் வெளியாகிய அன்றைய நாளிலேயே பெரும் தோல்வியை சந்தித்தது.

-விளம்பரம்-

விமர்சனம் செய்த ரசிகர்கள்:

படத்தை பார்த்த அனைத்துவித ரசிகர்களும் படத்தை கழுவி ஊற்றி விட்டனர். படத்தில் கதையே இல்லை எனவும், படம் படு மொக்கையாக இருக்கிறது எனவும் மோசமான விமர்சனங்களை கூறி இருந்தார்கள். அதோடு படம் ரிலீஸ் செய்யப்பட்ட அனைத்து மொழிகளிலும் தோல்வியை சந்தித்து விட்டது. ஒரு மொழியில் கூட ரசிகர்களின் வரவேற்பை பெற தவறிவிட்டது லைகர் படம். இந்த படம் படுதோல்வி அடைந்ததை அடுத்து நெட்டிசன்கள் பலரும் விஜய் தேவர்கொண்டாவை பயங்கரமாக ட்ரோல் செய்து இருந்தார்கள்.

லைகர் படக்குழுவினர் மீது விசாரணை:

மேலும், இந்தப் படம் 125 கோடி செலவில் எடுக்கப்பட்டிருந்தது. ஆனால், 30 சதவீதம் கூட இந்த படம் வசூல் ஆகவில்லை. அதுமட்டுமில்லாமல் விஜய் தேவர் கொண்டாவின் திரை வாழ்க்கையிலே இது ஒரு மோசமான படமாக அமைந்துள்ளது என்று பலரும் கூறி இருக்கின்றனர். இந்த நிலையில் லைகர் படத்தை தயாரிக்க ஹவாலா பணம் முதலீடு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. மேலும், லைகர் படத்தை தயாரிக்க தவறான வழியில் தயாரிப்பாளருக்கு பணம் கிடைத்ததாக காங்கிரஸ் தலைவர் பக்கா ஜட்சன் புகார் அளித்திருந்தார்.

விஜய் தேவர்கொண்டா அளித்த பதில்:

இதனை எடுத்து இயக்குனர் பூரி ஜெகன்நாத், தயாரிப்பாளர் சர்மி ஆகியோர் மீது அமலாக்க துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி இருந்தார்கள். இந்நிலையில் நேற்று படத்தின் கதாநாயகன் விஜய் தேவர்கொண்டாவிடமும் அமலாக்கத்துறை விசாரணை செய்து இருக்கிறது. பின் 9 மணி நேரம் விசாரணைக்கு பிறகு வெளியே வந்த விஜய் தேவர்கொண்டாவிடம் செய்தியாளர்கள் பேட்டி எடுத்து இருக்கிறார்கள். அதில் அவர், பிரபலமானவராக இருப்பதால் இப்படி பல சங்கடங்களை எதிர்கொள்ள வேண்டி இருப்பதாக கூறி இருந்தார்.

Advertisement