என்ன நடக்குதுன்னு யோசிக்கிறேன்- பிரஸ் மீட்டில் எழுந்த சர்ச்சைக்கு விஜய் தேவர்கொண்டா கொடுத்த பதில்

0
343
- Advertisement -

பிரஸ் மீட்டில் நடந்து கொண்டதை குறித்து எழுந்த சர்ச்சைக்கு அதற்கு பதிலளிக்கும் வகையில் விஜய் தேவர்கொண்டா பதிவிட்ட டீவ்ட் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் விஜய் தேவர்கொண்டா. அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் தான் விஜய் தேவர்கொண்டா அவர்கள் தென்னிந்தியா முழுவதும் பிரபலமானார். இதனை தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்து இருக்கிறார்.

-விளம்பரம்-

இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ஹிட் அடித்து விடுகிறது. கடைசியாக இவர் வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர் என்ற படத்தில் நடித்து இருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று இருந்தது. தற்போது இவர் ஹீரோவாக மட்டும் நடித்து வராமல் தயாரிப்பாளராகவும் இருந்து வருகிறார். தற்போது இவர் ‘liger’ என்ற படத்தில் நடித்து இருக்கிறார். இந்த படத்தை இவரே தயாரித்தும் இருக்கிறார். இந்த படத்தை இயக்குனர் பூரி ஜெகன்நாதன் இயக்கி இருக்கிறார்.

- Advertisement -

லைகர் படம்:

இந்த படம் குத்து சண்டை போட்டியை மையமாகக் கொண்டு உருவாகி இருக்கிறது. இந்த படமானது தமிழ், தெலுங்கு, மலையாளம்,ஹிந்தி, கன்னடம் உள்ளிட்ட 5 மொழிகளில் வெளிவர இருக்கிறது. மேலும், இந்த படத்தில் பிரபல குத்துச்சண்டை வீரர் மைக் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் அனன்யா பாண்டே, ரம்யா கிருஷ்ணன் உட்பட பலர் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்கள்.

லைகர் படம் குறித்த தகவல்:

இந்த படம் ஆகஸ்ட் மாதம் 25 ஆம் தேதி வெளிவர இருக்கிறது. தற்போது இந்த படத்தின் பிரமோஷன் பணிகளில் விஜய் தேவர்கொண்டாவும், அனன்யா பாண்டேவும் பிஸியாக ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் ஐதராபாத்தில் நடந்த லைகர் பட புரமோஷன் நிகழ்ச்சியில் நடிகர் விஜய் தேவர்கொண்டா செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்துக் கொண்டிருந்தார். அப்போது பத்திரிகையாளர் ஒருவர், டாக்ஸிவாலா படம் வெளிவந்த போது என்னால் உங்களிடம் எளிதாக பேச முடிந்தது.

-விளம்பரம்-

பிரஸ் மீட்டில் விஜய் தேவர்கொண்டா:

ஆனால், இப்போது அப்படி பேச முடியவில்லை என்று கூறியிருந்தார். இதைக் கேட்டவுடன் விஜய் தேவர்கொண்டா உடனே அங்கிருந்த டேபிளின் மீது காலை வைத்து இப்போது ஃப்ரீயாக பேசுங்கள் என்று கூறினார். இப்படி இவர் நடந்து கொண்ட விதத்தை சமூக வலைத்தளங்களில் பலரும் விமர்சித்து இருந்தார்கள். இதனை அடுத்து விஜய் தேவர்கொண்டா குறித்த மீம்ஸ்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி இருந்தது. இந்நிலையில் இது தொடர்பாக விஜய் தேவர்கொண்டா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டு இருக்கிறார்.

விஜய் தேவர்கொண்டா டீவ்ட்:

அதில் அவர், தங்கள் துறைகளில் வளர முயற்சிக்கும் ஒவ்வொருவரின் முதுகுக்குப் பின்னாலும் ஒரு இலக்கு எப்போதும் இருந்துகொண்டேதான் இருக்கும். நாம் அதனை எதிர்த்து போராட வேண்டும். உங்களுக்கு நீங்கள் நேர்மையாகவும், மற்றவர்களுக்கு சிறந்ததையும் விரும்பும்போது மக்கள் மற்றும் கடவுளின் அன்பு உங்களை பாதுகாக்கும் என்று பதிவிட்டிருந்தார். இதனை அடுத்து இன்னொரு பதிவில் பதிவில் விஜய் தேவர்கொண்டா தன்னுடைய புகைப்படத்தை பதிவிட்டு, என்ன நடக்கிறது என்று யோசிக்கிறேன் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

Advertisement