தனக்கு இரண்டு சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர் நேரில் செல்லாத விஜய் – போன் செய்து சொன்ன விஷயம்.

0
802
Surya
- Advertisement -

மறைந்த இயக்குனர் சித்திக் குடும்பத்திற்கு நடிகர் விஜய் இரங்கல் தெரிவித்திருக்கும் தகவல் தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. மலையாள சினிமாவில் மிக பிரபலமான இயக்குனராக இருந்தவர் சித்திக். இவர் ஆரம்ப காலத்தில் பிரபலமான இயக்குனராக இருந்த பாசில் என்பவருக்கு உதவி இயக்குனராக பணி புரிந்தார். அதன் பின்பு தான் இவர் இயக்குனர் ஆனார். மேலும், இவர் இயக்குனர் மட்டுமில்லாமல் திரைக்கதை, எழுத்தாளர், நடிகர், திரைப்பட தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டு திகழ்ந்திருந்தார்.

-விளம்பரம்-

இவர் 1981 ஆம் ஆண்டு வெளிவந்திருந்த ராமோஜி ராவ் ஆம் என்ற படத்தின் மூலம் தான் இயக்குனராக சினிமா உலகில் அறிமுகமாகியிருந்தார். அதனை தொடர்ந்து இவர் காட் பாதர், வியட் நாம் காலனி, ஹிட்லர் போன்ற பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கியிருந்தார். அதோடு மலையாளத்தில் மட்டும் இல்லாமல் இவர் தமிழிலும் சில படங்களை கொடுத்திருந்தார். அந்த வகையில் தமிழில் விஜய், சூர்யா நடிப்பில் வெளிவந்து ஹிட் கொடுத்த பிரண்ட்ஸ் என்ற படத்தை இயக்கி இருந்தார்.

- Advertisement -

சித்திக் திரைப்பயணம்:

இந்த படம் ரசிகர்கள் இயக்கி நல்ல வரவேற்பு பெற்று இருந்தது. அது மட்டும் இல்லாமல் இந்த படத்தின் நகைச்சுவை இன்றும் மக்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு வருகிறது. அதனை அடுத்து பிரசன்னா நடிப்பில் வெளிவந்த சாதுமிரண்டா, விஜய்-அசின் நடிப்பில் வெளிவந்த காவலன், அரவிந்த்சுவாமி – அமலாபால் நடிப்பில் வெளியான் பாஸ்கர் ஒரு ராஸ்கல் போன்ற பல படங்களை இயக்கியிருந்தார் சித்திக். அதற்குப் பின் இவர் தமிழில் படங்களை இயக்கவில்லை. இப்படி இருக்கும் நிலையில் கடந்த சில ஆண்டுகளாகவே இவர் கல்லீரல் பிரச்சனை காரணமாக அவஸ்தைப்பட்டு இருந்தார்.

சித்திக்கின் உடல்நிலை :

இதனால் இவருக்கு தொடர்ந்து சிகிச்சையும் அளிக்கப்பட்டு இருந்தது. பின் சில வாரங்களுக்கு முன்பு இவருக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டிருந்தது. இவரை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சையும் அளித்து இருந்தார்கள். பின் அவரது உடல் நிலை கவலைக்கிடமாக இருந்ததாக தகவல் வெளியானது. பின் இயக்குனர் சித்திக் அவர்கள் சிகிச்சை பலனின்றி காலமாகி இருந்தார். இந்த தகவலை தொடர்ந்து பிரபலங்கள் பலரும் இரங்கலை தெரிவித்து இருந்தார்கள்.

-விளம்பரம்-

சித்திக் மறைவு:

மேலும், இவருடைய மறைவிற்கு சூர்யா நேரில் சென்று இரங்கலை தெரிவித்து இருந்தார். ஆனால், தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் சில பேர் செல்லவில்லை என்று சோசியல் மீடியாவில் சர்ச்சையாக இருந்தது. குறிப்பாக, நடிகர் விஜய் இயக்குனர் சித்திக்கின் மறைவிற்கு சென்று இறுதி அஞ்சலி செலுத்தவில்லை என்றெல்லாம் கூறப்பட்டது. இந்த நிலையில் நடிகர் விஜய் அவர்கள் இயக்குனர் சித்திக் குடும்பத்தினரை தொலைபேசியின் மூலம் தொடர்பு கொண்டு இரங்கல் தெரிவித்திருக்கிறார்.

இரங்கல் சொன்ன விஜய்:

அது மட்டும் இல்லாமல் தான் வெளிநாட்டில் இருப்பதால் தான் சித்திக் அவர்களின் இறுதி சடங்கில் கலந்து கொள்ள முடியவில்லை என்று வருத்தத்துடன் கூறி இருக்கிறார். தற்போது இந்த தகவல் தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும், நடிகர் விஜய் வைத்து தமிழில் இயக்குனர் சித்திக் அவர்கள் பிரெண்ட்ஸ், காவலன் போன்ற இரண்டு படங்களை இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது லோகேஷ் இயக்கத்தில் விஜய் அவர்கள் லியோ என்ற படத்தில் நடித்திருக்கிறார். தற்போது இந்த படத்தினுடைய படப்பிடிப்புகள் மும்முறமாக நடைபெற்று வருகிறது.

Advertisement