விஜய் வீட்டின் கேமரா முன்பு அழுது புரண்ட மகள், தாய் தந்தை வைத்த வேண்டுகோள் – வைரலாகும் வீடியோ.

0
339
Vijay
- Advertisement -

தளபதி விஜயை காண அவருடைய வீட்டின் வெளியே இருக்கும் கேமரா முன்பு பள்ளி மாணவி செய்திருக்கும் செயல் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகிவருகிறது. தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். இவர் நடிப்பில் வெளியாகும் அனைத்து படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான படம் பீஸ்ட். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தாலும் வசூலில் வாரி இறைத்து இருந்தது.

-விளம்பரம்-

இந்த படத்தை தொடர்ந்து சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான படம் வாரிசு. இந்த படத்தை வம்சி இயக்கி இருந்தார். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், யோகி பாபு, பிரகாஷ் ராஜ், நாசர், பிரபு, ஜெயசுதா, ஸ்ரீகாந்த், சங்கீதா, சம்யுக்தா போன்ற பலர் நடித்து இருக்கின்றனர். தமன் இந்த படத்திற்கு இசை அமைத்து இருந்தார். குடும்ப பின்னணியை கொண்ட கதை. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதாக கூறப்படுகிறது.

- Advertisement -

வாரிசு படம்:

அதோடு 300 கோடிக்கு மேல் வசூல் செய்ததாக கூறப்படுகிறது. நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக திரிஷா நடித்து வருகிறார். கில்லி, ஆதி, திருப்பாச்சி, குருவி போன்ற படங்களுக்கு பிறகு விஜய்-சூர்யா இந்த படத்தில் இணைந்து நடித்து இருக்கிறார்கள். மேலும், இந்த படத்தில் சஞ்சய் தத், மிஷ்கின், கௌதம் மேனன், அர்ஜுன், ப்ரியா ஆனந்த் என்று ஒரு மிகப்பெரிய நட்சத்திர பட்டாளங்களில் நடித்து வருகின்றனர்.

லியோ படம்:

இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நடந்தது. தற்போது அடுத்த கட்ட படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. மேலும், லியோ படம் வரும் ஆக்டோபர் மாதம் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் விஜயை காண அவருடைய வீட்டின் வெளியே பள்ளி மாணவி செய்திருக்கும் செயல் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டம் அய்யங்கார் குளம் பகுதியை சேர்ந்தவர் சங்கர். இவர் அதே பகுதியில் பானிபூரி வியாபாரம் செய்து வருகிறார். இவருடைய மனைவி இந்திரா. இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார். இவர் காஞ்சிபுரத்தில் உள்ள பள்ளியில் பதினோராம் வகுப்பு படிக்கிறார்.

-விளம்பரம்-

விஜயை காண பள்ளி மாணவி செய்தது:

கடந்த ஞாயிற்றுக்கிழமை என்பதால் சென்னை கிழக்கு கடற்கரை சாலைக்கு தன்னுடைய குடும்பத்துடன் சங்கர் விடுமுறையை கொண்டாட சென்றிருக்கிறார். மேலும், இவர்கள் குடும்பத்தில் இருக்கும் அனைவருமே விஜய் ரசிகர்கள் என்பதால் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நடிகர் விஜயின் வீட்டிற்கு சென்றிருக்கிறார்கள். விஜய் வீட்டில் மிகப் பெரிய கேட் போட்டு இருக்கிறது. விஜய்யை எப்படியாவது பார்த்து விட வேண்டும் என்ற ஆசையில் அங்கிருந்த சிசிடிவி கேமரா முன் தன்னை எப்படியாவது பார்க்க வருமாறு கெஞ்சி அழுது இருக்கிறார் அந்த பள்ளி மாணவி. இதை அந்த மாணவியின் பெற்றோர் சங்கர் செல்போனில் வீடியோ பதிவு செய்து சோசியல் மீடியாவில் வெளியிட்டிருக்கிறார்.

கோரிக்கை வைத்த விஜய் ரசிகை:

மேலும், அந்த மாணவி விவரம் அறியாமல் ஆசையில் விஜய் காண கையெடுத்து கும்பிட்டு பேசி செய்கிறார் என்றால் அவருடைய பெற்றோர்களும் கையெடுத்து கும்பிட்டு விஜயை பார்க்க வேண்டும் என்று பேசுகிறார்கள். தற்போது இந்த வீடியோ தான் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. அதுமட்டுமில்லாமல் சமீபத்தில் கூட விஜய்யை பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்ட குழந்தைக்கு வீடியோ காலில் விஜய் பேசி இருந்தார். அந்த வகையில் தன்னை பார்க்க வேண்டும் என்று வீட்டின் வாசல் வரை வந்து கோரிக்கை வைத்த ரசிகையை விஜய் சந்திப்பாரா? இல்லையா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Advertisement