முக்கிய பொறுப்பில் விஜய்யின் நண்பரை அமர வைத்த தி.மு.க அரசு – உதயநிதியுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு சஞ்சீவ் வாழ்த்து.

0
1141
Udhayanidhi
- Advertisement -

விஜய்-உதயநிதியின் அரசியல் குறித்து நடிகர் சஞ்சீவ் பதிவிட்டு இருக்கும் புகைப்படம் தான் சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங்காகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முடி சூடாக மன்னனாக திகழ்ந்து கொண்டிருப்பவர் நடிகர் விஜய். இவருக்கு கோடிக்கணக்கான பேர் ரசிகர்களாக இருக்கிறார்கள். இவருக்கு விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் ரசிகர்கள் ரசிகர் மன்றம் வைத்து இருக்கிறார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்ததே.

-விளம்பரம்-

இப்படி இருக்கும் நிலையில் 2020 ஆம் ஆண்டு நடந்த உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்கள். இப்படி விஜய் மக்கள் இயக்கம் அரசியலில் ஈடுபட்டாலும், தங்களின் ஜனநாயக கடமையை செய்வதில் தவறுவதில்லை. இதனால் விஜய் கூடிய விரைவில் அரசியலுக்கு வருவார் என்று கூறப்படுகிறது. விஜயின் இந்த செயலை பார்த்து அரசியல் பிரபலங்கள் கதிகலங்கி இருக்கிறார்கள்.

- Advertisement -

விஜய் மக்கள் இயக்கம்:

மேலும், இவர் சமீபத்தில் தமிழகம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளிலும் பத்தாம் மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்களில் முதல் மூன்று இடம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ்களை நேரில் சந்தித்து வழங்கி இருக்கிறார். பின் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் முன்னாள் முதலமைச்சர் மறைந்த காமராசர் அவர்களின் பிறந்த நாள் அன்று தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் இலவசமாக இரவு நேர பயிலகத்தை தொடங்கி வைத்து மாணவர்களுக்கு படிப்புக்கு உதவிகளை செய்து வருகிறார்கள்.

விஜய் அரசியல்:

இதன் மூலம் விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் எழுந்துள்ளது. அதுமட்டும் இல்லாமல் விஜய் அவர்கள் மக்கள் இயக்க நிர்வாகிகளை சந்தித்து அடிக்கடி கூட்டம் நடத்தி ஆலோசனை வழங்கி வருகிறார். இப்படி விஜய் செய்து கொண்டிருப்பதெல்லாம் அரசியல் வருவதற்காக தான் என்று அரசியல் தலைவர்கள் மட்டுமில்லாமல் சினிமா பிரபலங்களுமே கூறி வருகிறார்கள். இந்த நிலையில் விஜயின் நெருங்கிய நண்பர் சஞ்சீவ் பதிவிட்டு இருக்கும் பதிவு தான் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி விடுகிறது.

-விளம்பரம்-

சஞ்சீவ் பதிவிட்ட புகைப்படம்:

விஜய்க்கு நெருங்கிய நண்பர்களில் ஒருவர் தான் சஞ்சீவ். இவர் விஜய் உடன் இணைந்து சில படங்களில் நடித்திருக்கிறார். கடைசியாக மாஸ்டர் படத்தில் விஜய்யுடன் நடித்திருந்தார். அது மட்டும் இல்லாமல் இவர் சின்னத்திரை சீரியலிலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு இருக்கிறார். அதில் அவர் தன்னுடைய நண்பர் ராம் குமார் வரதராஜன் தற்போது தமிழ்நாடு அரசால் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலுக்கு அறங்காவலராக நியமிக்கப்பட்டு இருப்பதை அடுத்து வாழ்த்தை தெரிவித்து இருக்கிறார்.

விஜய் அரசியல் குறித்து சொன்னது:

இது தொடர்பாக தான் சஞ்சீவ் புகைப்படம் பதிவிட்டு இருக்கிறார். அதில் வரதராஜன், விஜய் மற்றும் மற்ற நண்பர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும், தற்போது வரதராஜன் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் இணைத்து பதிவிட்டிருக்கிறார். இதை பார்த்த பலருமே ஏற்கனவே விஜய் அரசியலுக்கு வருவதற்காக தான் பல முயற்சிகளை செய்து கொண்டிருக்கிறார். இப்படி இருக்கும் நிலையில் விஜயின் நண்பர் உதயநிதியின் டீமில் இணைத்திருப்பது பலருக்குமே ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் இது அரசியலா? இவர் வரும் காலத்தில் விஜய்க்கு துணையாக இருப்பாரா? என்று கூறி வருகிறார்கள்.

Advertisement