Updated · 27 மே, 2026 அன்று 12:05 AM2 நிமிட வாசிப்பு
கந்துவட்டி மூலம் பல தயாரிப்பாளர்கள் தங்களது வீடு, வாசல் மற்றும் சேர்த்த சொத்துக்கள் என அனைத்தையும் இழந்து நிற்கும் நிலை தான் தற்போதைய தமிழ் சினிமாவில் பெரிய பிரச்சனையாக வலம் வருகிறது. அதனையும் சமாளித்து தயாரிக்கும் படத்தினை தயாரிப்பாளர்கள் எப்படியாவது ரில்வ்வ்ஸ் செய்து நஷ்டம் இல்லாமல் திரையுலகில் நீடித்து வருகின்றனர்.
[embed]https://www.facebook.com/polimernews/videos/1473498426102349/ [/embed]
இதனை எல்லாம் தாண்டி பணம் இருந்தும் பல அதிகார மிரட்டல்களால் குறித்த நேரத்தில் வெளிவராமல் தோல்வி அடைந்த பல படங்கள் உள்ளன. அவற்றில் ஒன்று தான் 2013ல் வெளிவந்த விஜயின் 'தலைவா' படம்.
படம் வெளிவருவதற்கு முன்னர் வந்த ட்ரெய்லரில் TIME TO LEAD என்ற அந்த ஸ்லோகன் அப்போதைய ஜெயலலிதாவின் கண்ணை உறுத்த, தனது அதிகாரத்தை பயன்படுத்தி படத்திற்கு தமிழகத்தில் தடை கொண்டுவந்தார்.
என்ன செய்வது என்று திகைத்த படக்குக்கு தளபதி விஜய்யிடம் சென்று முறையிட எப்படியாவது நஷ்டம் இல்லாமல் படரஹே8வெளியிட்டுவிடவேண்டும் எனக் எனக் குறியாக இருந்தார். இதனால், அப்போது மன்னிப்பு கேட்பது போல ஒரு வீடியோவும் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
அந்த சமயத்தில் என்ன செயவது எனத் திகைத்த விஜயிடம், நான் கவர்னர் ரோசையாவின் பேரன், எனக்கு நரேந்திர மோடி மற்றும் வெங்கையா நாயுடு ஆகியோர் நல்ல பழக்கம் என ஒரு கில்லாடி திருடன் வந்து பல பலவென பேசியுள்ளார்.
மேலும், இந்த பிரச்சனையை சென்ட்ரல் கவர்மெண்ட்டிற்கு எடுறது சென்று தீர்த்து விடலாம் எனக் கூறி அதற்கு ₹ 50 லட்சம் வேண்டும் எனவும் கில்லடியாக சொசான ஆடி மற்றும் மினி கூப்பர் கார்களில் வந்து பேசியுள்ளார்.
என்ன செய்வது என்று திகைத்த விஜய்க்கு அப்போது வேறு வழி இல்லாமல் ₹ 50 லட்சத்தை அவனிடம் கொசுத்துள்ளார். இது தான் சாக்கு என ரொக்கமாக எடுகொண்டு ஓடிவிட்டான் அவன். அவன் பெயர் நாகராஜ் சாகர்.
அப்போது இருந்த பிரச்சனையில் எதற்கு போலீஸ் கேஸ் என விட்டுவிட்டார் விஜய். மேலும் பணம் ரொக்கமாக கொடுத்து என்பதால் இன்னும் பிரச்சனை வருக என அப்படியே விட்டுவிட்டார் விஜய்.
இந்த நாகராஜ் சாகர் வீட்டு யாரும் இல்லை, 2016ஆம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் ராணிப்பேட்டை தொகுதியில் நின்ற மோசடி வேட்பாளர் தான் இந்த நாகராஜ் சாகர்