மீண்டும் சேர்ந்த தந்தை, முழு வீச்சில் இறங்க போகிறாரா விஜய் ?

0
1508
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முடி சூடாக மன்னனாக திகழ்ந்து கொண்டிருப்பவர் நடிகர் விஜய். இவருக்கு கோடிக்கணக்கான பேர் ரசிகர்களாக இருக்கிறார்கள். இவருக்கு விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் ரசிகர்கள் மன்றம் வைத்து இருக்கிறார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. இப்படி இருக்கும் நிலையில் 2020 ஆம் ஆண்டு நடந்த உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்கள். இப்படி விஜய் மக்கள் இயக்கம் அரசியலில் ஈடுபட்டாலும், தங்களின் ஜனநாயக கடமையை செய்வதில் தவறுவதில்லை. இதனால் விஜய் கூடிய விரைவில் அரசியலுக்கு வருவார் என்று கூறப்படுகிறது.

-விளம்பரம்-

இந்த விழாவில் விஜய் அவர்கள் மாணவர்களின் எதிர்காலம், கல்வி, அரசியல், தலைவர்கள் குறித்தும் பல விஷயங்களை பேசி இருந்தார். மேலும் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் 234 தொகுதிகளிலும் இலவசமாக இரவு நேர பயிலகத்தை தொடங்கி வைத்து மாணவர்களுக்கு படிப்புக்கு உதவிகளை செய்து வருகிறார். எனவே விஜய் அரசியலுக்கு வருவார் என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் எழுந்துள்ளது. பின் விஜய் மக்கள் இயக்கம் மூலம் அடிக்கடி ஆலோசனை கூட்டம் நடந்து வருகிறது.

- Advertisement -

விஜய் மக்கள் இயக்கம்:

இந்த நிலையில் எஸ்.ஏ சந்திரசேகரன்- விஜய் இடையே இருந்த பிரச்சனை சமூகமாக முடிந்து இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. சில ஆண்டுகளாகவே எஸ்.ஏ சந்திரசேகரன்- விஜய் இடையே பிரச்சனை இருப்பது அனைவரும் அறிந்த ஒன்று. மேலும், விஜய் மக்கள் இயக்கத்தில் இருக்கும் பல மூத்த நிர்வாகிகளை ஒழுங்கு நடவடிக்கை காரணமாக இயக்கத்தில் இருந்து நீக்கி இருக்கிறார்கள். அதில் நீக்கப்பட்ட பலர் எஸ் ஏ சி யின் ஆதரவாளர்கள் என்று கூறப்படுகிறது.

எஸ் ஏ சி-புஸ்ஸி ஆனந்த் பிரச்சனை:

இதற்கு காரணம் எஸ் ஏ சி-புஸ்ஸி ஆனந்த் இடையே நடந்து வரும் மனக்கசப்பு தான் என்று கூறப்படுகிறது.
புஸ்ஸி ஆனந்த் அவர்கள் எஸ் ஏ சி கட்சிக்கு விண்ணப்பிப்பதாகப் பேட்டி தந்திருக்கிறார். அதன்பின் விஜய் ஒரு அறிக்கை வெளியிட்டார். அந்த அறிக்கையை விஜய் சொல்லி தான் தயார் செய்ததாக புஸ்ஸி கூறியிருந்தார். அந்த அறிக்கையில் சில வார்த்தைகள் பிரச்சனை ஏற்படுத்தும் வகையில் இருந்ததாக சந்திரசேகரின் ஆதரவாளர்கள் கூறினார்கள்.

-விளம்பரம்-

பிரச்சனைக்கு காரணம் :

அது மட்டும் இல்லாமல் அப்பா என்ற உறவையும் தாண்டி எதிரி போல நினைத்து சில வார்த்தைகளை வெளியிட்டதாக சந்திரசேகரின் ஆதரவாளர்கள் மனவருத்தத்துடன் கூறியிருந்தார்கள். இதனால் நடிகர் விஜய்க்கும் சந்திரசேகருக்கும் இடையே பிரச்சனை இருந்து கொண்டு வருகிறது. இதனால் இருவரும் பேச்சுவார்த்தை கூட இல்லாமல் சில ஆண்டுகளாகவே பிரிந்து இருப்பது அனைவரும் அறிந்து ஒன்று. இந்த நிலையில் சமீபத்தில் சந்திரசேகரன் அறுவை சிகிச்சை செய்திருந்தார். இதை அறிந்த விஜய் நீண்ட நாட்களுக்கு பிறகு தன்னுடைய தந்தையை நேரில் சென்று பார்த்திருக்கிறார்.

சுமுகமான பிரச்சனை:

அப்போது விஜய், எஸ்ஏ சந்திரசேகர், சோபா ஆகிய மூவரும் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியிருந்தது. அதுமட்டுமில்லாமல் மாநில பொதுச் செயலாளர் புஸ்ஸி உடன் சேர்ந்து சந்திரசேகரன் புகைப்படம் எடுத்து வெளியிட்டு இருக்கிறார். இதன் மூலம் சந்திரசேகருக்கும் புஸ்ஸி ஆகிய இருக்கும் இடையே இருந்த மனக்கசப்பை நடிகர் விஜய் தீர்த்து வைத்திருப்பதாக கூறப்படுகிறது. சந்திரசேகர் ஆதரவாளர்கள் விஜய் மக்கள் இயக்கம் ஆதரவாளர்கள் இருவரும் சேர்ந்து இருக்கின்றனர். இதனால் இவர்களுடைய கூட்டணி வலுப்பெற்று அரசியலில் வெற்றி பெறும் என்றும் கூறுகிறார்கள்.

Advertisement